சூர்ய குண்டம் பிரதிஷ்டையின்போது பாம்பு பற்றிய பல்வேறு கேள்விகளுக்கு சத்குரு விளக்கமளித்தார்.அப்போது நாகதோஷம் என்றால் என்ன என்றொரு கேள்வியை தியான அன்பர் ஒருவர் கேட்டார். அதற்கு மிகவும் புதிய பரிமாணம் ஒன்றில் சத்குரு வழங்கிய விளக்கம் அனைவரையும் வியப்பிலாழ்த்தியது.

“நாகதோஷம் என்பதன் வேறொரு பரிமாணத்தைப் பார்த்தால்,அது பாம்போடு தொடர்பு கொண்டிருக்க வேண்டுமென்று அவசியமில்லை.உங்கள் மூளையின் சிறுபகுதி ஒன்று உங்களை சில எல்லைகளை வகுக்கச் செய்கிறது.அது வாழ்க்கை பற்றிய சில எச்சரிக்கைகளை உங்களுக்கு வழங்குகிறது.சில அச்சங்களை ஏற்படுத்துகிறது.மூளையின் உட்பகுதி ஒன்று இந்தவிதமாக செயல்படுகிறது.பலர் அந்த எல்லைகளுக்கு உட்பட்டே வாழ்கிறார்கள்.இந்த உலகில் பெரும்பாலானவர்கள் விடுதலையை நோக்கி நடையிடுவதில்லை. தொடர்ந்து தங்களை எதனோடாவது அல்லது யாருடனாவது பிணைத்துக் கொள்ளவே விரும்புகிறார்கள்.உங்களை ஏதேனும் ஓர் எல்லைக்குள் உங்கள் எண்ணங்கள் தொடர்ந்து
பிணைத்துக் கொண்டேயிருந்தால் அது மிகவும் மோசமான நாகதோஷம்.

நாய் தான் வசிக்கும் பகுதியைச் சுற்றி ஆங்காங்கே சிறுநீர் கழித்துக் கொண்டே போகிறது.அதற்கு சிறுநீர் கழிக்கும் வியாதியில்லை .தன் எல்லையை நிர்ணயிக்கிறது. அதுபோல் எதற்குள்ளாவது யாராவது சிக்கிக்
போவது மிகவும் மோசமான நாகதோஷம்.மூளையின் வெளிப்பகுதி,விடுதலை நோக்கி உங்களை உந்துகிறது.அதுதான் தேடலை பலப்படுத்துகிறது.இயற்கையுடன் உங்களை இயைந்து வாழச் செய்கிறது.
அதை நோக்கிப் போவதே விடுதலை.

உங்களைப் பிணைக்கிற நகதோஷத்திலிருந்து எப்படி விடுபடுவது என்றும் யோகமரபில் சொல்லப்பட்டிருக்கிறது.சுருண்டு படுத்திருக்கும் பாம்பு நகர்ந்து தன் எல்லையை விட்டு எழுவதே விடுபடுகிற வழி.அதுபோல் உங்கள் சக்திநிலை ஓர் எல்லைக்குள் இல்லாமல் எழத்தொடங்குமேயானால்மனிதப்பிறவி என்ற எல்லையையும் தாண்டி உங்களால் நகர முடியும்.இந்த நாகதோஷத்தைத் தாண்ட இதுதான் சரியான பாதை.

மற்றபடி உலகியல் நிலையில் நாகதோஷம் என்றால் அதற்கு வேறு சில அறிகுறிகள் உண்டு.சில நாட்பட்ட நோய்கள் எந்தவிதமான சிகிச்சைக்கும் குணமாகாமல் பலன் தராமல் தொடர்ந்தால் அது நாகதோஷம். எல்லோருக்கும் பொதுமைப்படுத்திச் சொல்ல முடியதென்றாலும் சிறுநீர்த்தடத்தில் ஏற்படக்கூடிய சில தொற்று நோய்கள் நாகதோஷத்தால் வருபவை.சில வகையான சரும நோய்கள் நாகதோஷத்தால் வருபவை.சிலருக்கு தோல் செதில்செதிலாக உரியும். இது நாகதோஷத்தின்
அடையாளம்.சிலருக்கும் எலும்புகள் இறுகி உடம்பே பாறைபோல் ஆகும்.இதற்கு மருத்துவத்தில் எந்த மருந்தும் இல்லை. ஆனால் ஈஷாவுக்கு வந்த ஒருவர் இங்கேயே தங்கி பல ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு முழுமையாக குணமடைந்தார். எலும்பு இப்படி இறுகிப் போவதும் நாகதோஷத்தின் விளைவுதான்.சில நாகதோஷங்கள் உளவியல் சார்ந்த கோளாறுகளாக வெளிப்படும்

நாகதோஷத்தால் ஏற்படக்கூடிய நோய்கள் எவ்வளவுதான் மருத்துவம் செய்தாலும் குணமாகாமலேயேஇருந்து கொண்டிருக்கும்.ஆனால் குறிப்பிட்ட சக்திநிலையில் இருக்கும் சில கோவில்களுக்குப் போனாலே
இது குணமாகும்.சில அர்ப்பணங்களை செய்தாலே சரியாகிவிடும்.அத்தகைய தன்மைகள் கொண்டஆலயங்கள் இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியவில் நிறைய உள்ளன” என்றார் சத்குரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *