வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

எல்லோருக்கும் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க உரிமையிருக்கிறது. ஆனால் அபிப்பிராயங்களை மற்றவர்கள் மேல் திணிக்கிறபோது பிரச்சனைகள் உருவாகின்றன.

நாம் சொல்வது அபிப்பிராயம்தானே தவிர, அதனை அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென எந்தச் சட்டமும் கிடையாது.

தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து வந்து விட்டால் தாங்கிக் கொள்ளவே முடியாதவர்களால் ஒருவரது விவாதத்தில் பங்கெடுக்க முடியாது.

தாங்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் விமர்சனத்திற்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வேதமொழிகள் என்னும் எண்ணம் வேண்டாத பகையை வளர்க்கும். மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்தும்.

அதே நேரம், தான் சொல்வது அபிப்பிராயம் மட்டுமே என்ற தெளிவுடன் சொல்லப்படுகிற எதையும் உங்களால் உறுதியாக, திடமாக யாரையும் காயப்படுத்தாமல் முன்வைக்க முடியும்.

மற்றவர்களின் கோணத்திற்கும் மரியாதை தர ஒருவரால் முடிகிறதென்றால், அவரே தன்னையும் மற்றவர்களை நம்புகிற நேர் மறையான மனிதர்.

அவர் உச்சரிக்கும் ஒவ்வொரு சொல்லையும் உலகம் கேட்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *