பாரதியார் விருது பெறுகிறேன்

 

எஸ்ஆர்எம் குழுமங்கள் நிறுவியுள்ள தமிழ்ப்பேராயம் வழங்கும் மகாகவி பாரதியார் விருதுக்கு நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன் எனும் தகவலை அறிந்து அகம் மிக மகிழ்கிறேன்.

நான் பார்த்து வியக்கும் படைப்பாளிகள் பலருக்கும் விருது தந்த தமிழ்ப்பேராயம் என்னையும் தேர்வு செய்தது மிகுந்த நெகிழ்ச்சி தருகிறது.என் அறுபதாவது நூலாகிய இணைவெளி என்னும் கவிதைத் தொகுப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்நூலை பதிப்பித்த footprints பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்தாருக்கு என் நன்றிகள். இந்நூலை மலேசியாவில் வெளியிட்டு சிறப்பித்த மலேசிய மேனாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சரவணன் அவர்களுக்கு என் நன்றி.

தமிழ்ப்பேராயம் தந்திருக்கும் இந்த அங்கீகாரத்திற்கு மனமார்ந்த நன்றிகள். தங்கள் வரிகள் வழியே என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தி எழுதத் தூண்டிய எண்ணற்ற மரபுக் கவிஞர்களை இந்த நேரத்தில் மனம் மொழி மெய்களால் வணங்குகிறேன்.

மரபின் மைந்தன் முத்தையா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *