Blog

/Blog

அபிராமி அந்தாதி – 5

அபிராமியின் அடிதொழும் அன்பர்களின் பட்டியலை வெளியிடுகிறார் அபிராமிபட்டர். இது முழுப்பட்டியல் அல்ல. முதல் பட்டியல். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஒன்று வெளியாகுமல்லவா! அப்படித்தான் இதுவும். “மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக் குனிதரும் சேவடிக்கே கோமளமே” அம்பிகையை வழிபடுவதில் மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் மாயா முனிவர்களுக்கும் போட்டா போட்டிதான். இதில் மாயா முனிவர் என்பது நீண்டகாலம் சூட்சும வடிவில் வாழும் முனிவர்களைக் குறிக்கும் அதே நேரம் திருக்கடவூரில் மரணமில்லாத சிரஞ்சீவி நிலைபெற்ற மார்க்கண்டேயரையும் குறிக்கும். அம்பிகையை ...

அபிராமி அந்தாதி 4

அவளைப் புரிந்தால் அனைத்தும் புரியும்! ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பதுகூட ஐயமே. ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன். காணாதன காண்கிறார்கள். காட்டாதன காட்டுகிறார்கள். ஒரு நூலைப் புரட்டிய மாத்திரத்தில் அதன் உட்பொருள் இன்னதென உணர்த்துகிறார்கள். ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு அவர்கள் ஒருமுறை சொன்னார். “ஒரு புத்தகத்தைப் புரட்டிய மாத்திரத்தில் அதை எழுதியவரின் மனம் எத்தகையது என்று பிடிபடுகிறது. அந்த மனத்திலிருந்து என்ன ...

அபிராமி அந்தாதி 3

3. விரலருகாய்….. வெகு தொலைவாய்…. அம்பிகைமீது அன்புச் சதோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி… “விரலருகாய் வெகுதொலைவாய் இருக்கின்றாய்.. உன்னை வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்.” சென்றடையாச் செல்வம் என்று நாயன்மார்கள் இறைவனைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு அதே இறைவன் தொடரும் துணையாய் வந்து கொண்டேயிருக்கிறான். முந்தைய அந்தாதிப் பாடல் அம்பிகையை விழுத்துணை என்கிறது. வழித்துணை, இல்லறத்தைப் பகிர்ந்து கொள்ளும் வாழ்க்கைத்துணை, செய்யும் தொழிலில் உதவும் வணிகத்துணை, இவற்றில் பல வழியிலேயே ...

அபிராமி அந்தாதி 2

2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி 2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர் சென்று கொண்டிருந்தேன். என் நினைவுகள் இருபத்தோராண்டுகள் பின்னோக்கிப் பறந்தன. தொழிலதிபர் திரு.ஏ.சி. முத்தையா அவர்களின் துணைவியார் திருமதி தேவகி முத்தையா அவர்கள் அதிதீவிரமான அபிராமி பக்தை. அபிராமி அந்தாதி குறித்து அவர் மேற்கொண்டிருந்த ஆய்வுநூல் 1988ல் திருக்கடவூர் அபிராமியம்மை சந்நிதியில் வெளியிடுவதாகத் ...

அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்

பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம் அபிராமி அந்தாதி நூலுக்கு விளக்கவுரை பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ, முன்னந்தி மாலைகளிலோ நெடுந் தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும். அதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை. அவற்றில் ...

ம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு

மரபுக் கவிதைகளின் மகத்தான தூணாக விளங்கிய கவிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் மறைவுக்கென் அஞ்சலி. — ம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு மரபு சார்ந்த மனம் கட்டுகள் உடைத்துக் ககனவெளியில் எப்போதெல்லாம் சிறகடிக்கின்றதோ, அப்போதெல்லாம் இலக்கிய வெளியில் புதுமைகள் பூக்கின்றன. உயிரின் குரலாய் ஒலிக்கும் அத்தகைய பாடல்கள் புல்லாங்குழலின் மெல்லிய இசையாய்ப் புறப்பட்டுப் புயலாய் உலுக்குகின்றன. “உயிர்ப்பின் அதிர்வுகள்” என்ற தலைப்பில் தொகுக்கப்பட்ட ம.இலெ.தங்கப்பாவின் கவிதைகள் அத்தகைய அனுபவத்தை வழங்குகின்றன. யாப்பின் கோப்புக் குலையாத இவரது கவிதைகளில் ...
More...More...More...More...