Blog

/Blog
2018 நவராத்திரி-2

2018 நவராத்திரி-2

வீணைநாதம் கேட்குதம்மா வெட்ட வெளியிலே வெள்ளிச் சலங்கை குலுங்குதம்மா வானவெளியிலே காணக் காண லஹரியம்மா உனது சந்நிதி காதில்சேதி சொல்லுதம்மா கொஞ்சும் பைங்கிளி ஆரவாரம் செய்யத்தானே அழகுராத்திரி அன்னைமுன்னே ஒன்பதுநாள் ஆடும்ராத்திரி பாரமெல்லாம் தீரத்தானே சக்தி சந்நிதி பாதத்திலே போய்விழுந்தால் பெரிய நிம்மதி வேப்பிலையும் இனிக்குதடி வேதநாயகி வேண்டும்வரம் நீகொடுப்பாய் லிங்கபைரவி காப்பதற்கு நீயிருக்க கவலை ஏதடி காலகாலன் ஆசைவைக்கும் காதல்நாயகி ஆதியோகி மேனியிலே பாதியானவள் ஆலமுண்ட கண்டனுக்கு அமுதமானவள் நீதியாகி ஜோதியாகிநிமிர்ந்து நின்றவள் நீளும்வினை மாளும்படி ...
2018 நவராத்திரி 1

2018 நவராத்திரி 1

பூடகப் புன்னகை என்னமொழி- அவள் பூரண அருளுக்கு என்ன வழி? ஆடகத் தாமரைப் பதங்களிலே- சுகம் ஆயிரம் உண்டென்று சொல்லும் கிளி வேடங்கள் தரிப்பதில் என்னபயன் – இனி வேட்கைகள் வளர்ப்பதில் நீளும்பழி நாடகம் யாவையும் நடத்துகிறாள் -ஒளி நகைதரும் அம்பிகை நுதலின்விழி எத்தனை பீடங்கள் ஆளுகிறாள்-அவள் என்னென்ன ரூபங்கள் காட்டுகிறாள் புத்தம் புதிய விடியலிலே -அவள் புல்லிடைப் பனியென மின்னுகிறாள் வித்தகி இவளெனத் தொடக்குனிந்தால் – அவள் வெய்யில் வெளிச்சமாய் ஓங்குகிறாள் நித்தம் கவிகிற காரிருளில்-அவள் ...

அபிராமி அந்தாதி – 15

எளிதில் காணலாம் அவளை ஒரு பெரிய மனிதர் இருக்கிறாரென்றால் அவரைக்காண வெவ்வேறு நோக்கங்களுடன் வெவ்வேறு விதமான ஆட்கள் வருவார்கள். அந்தப் பெரிய மனிருக்கு சொந்தமாக சில ஆலைகள் இருக்கலாம். கடைகள் இருக்கலாம். அவர் தன் பெற்றோர் நினைவாக ஓர் அனாதை இல்லமும் நடத்திக் கொண்டிருக்கலாம். அவருடைய தொழிற்சாலைகளில் வணிக வாய்ப்பு தேடி சிலர் சந்திக்க வருவார்கள். அவருடைய நிறுவனத்தை நடத்தும் நிர்வாகிகள் சில முடிவுகள் எடுக்கப்பட வேண்டுமென்று வருவார்கள். அவரோ நாளின் பெரும்பகுதியை அனாதைக் குழந்தைகளுக்கான விடுதியில்தான் ...

அபிராமி அந்தாதி – 14

மூத்தவளா? ஏத்தவளா? தென்காசியில் ரசிகமணி டி.கே.சி விழா. அவருடைய இல்லமாகிய பஞ்சவடியில் அவர்தம் பெயரர்கள் திரு.தீப.நடராஜன், திரு.தீப.குற்றால லிங்கம் ஆகிய பெருமக்களின் அன்பு விருந்தோம்பலில் திளைத்துக் கொண்டிருந்தோம். ராஜாஜி, ஜஸ்டிஸ் மஹராஜன், தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், வித்வான் ல.சண்முகசுந்தரம் போன்ற பெரியவர்கள் அமர்ந்து கலை இலக்கியங்களை அனுபவித்த சந்நிதானம் அது. கலை இலக்கிய ரசனையில் டி.கே.சி என் ஆதர்சம். கம்பனில் பல மிகைப்பாடல்களை அடையாளம் கண்டதுடன் சில திருத்தங்களையும் செய்திருக்கிறார். அதனால் வாழுங்காலத்திலும் சரி, அதன்பின்பும் சரி, சில ...

அபிராமி அந்தாதி – 13

எது புண்ணியம்? ஒரு மனிதனின் வாழ்வில் எது புண்ணியம் என்ற கேள்விக்கு அபிராமிபட்டர் வழங்கும் பதில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில்தான் எத்தனை பொருத்தம். ஒரு மனிதன். தான் விரும்பியதை வாழ்வில் செய்வதும், அதே மன அதிர்வலையில் இருப்பவர்களுடன் உறவில் இருப்பதும்தான் அவன் மிகுந்த புண்ணியம் செய்தவன் என்பதற்கான அடையாளம். இன்று பலருக்கும் நினைத்த நினைப்புக்கும் படித்த படிப்புக்கும் சம்பந்தமில்லை. இன்னும் பலருக்கோ படித்த படிப்புக்கும் கிடைத்த பிழைப்புக்கும் சம்பந்தமில்லை. நினைப்புக்கும் நிதர்சனத்துக்கும் பாலம் கட்ட முடியாத பரிதவிப்பிலேயே ...

அபிராமி அந்தாதி – 12

எங்கே அவளின் திருவடிகள் சின்னஞ்சிறிய சம்பவம் ஆயினும், பொன்னம் பெரிய அற்புதம் ஆயினும், அது யாருக்கு என்ன அனுபவத்தை தருகிறதோ அதன் அடிப்படையில்தான் அது வகைப்படுத்தப்படும். அந்த அனுபவம் வெறும் உணர்ச்சியின் எல்லையில் நின்றால் போதாது. அறிவும் அதனை அங்கீகரிக்க வேண்டும். ஓர் இனிப்பை சாப்பிடுகையில் ஏற்படும் மகிழ்ச்சி, நிலையானதா? இல்லை. நீரிழிவு நோய் வர வாய்ப்புண்டு என்ற எச்சரிக்கையை அறிவு பிறப்பிக்கிறது. ஒன்றை உயர்ந்த அனுபவமென உணர்வும் அறிவும் ஒருங்கே ஒப்புக் கொள்கிறபோதுதான் அதன் நம்பகத்தன்மை ...
More...More...More...More...