கவிஞர் வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவை நடத்தும் கவிஞர்கள் திருநாள் ஜூலை 13 காலை 10.00 மணியளவில் சென்னை டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் நிகழ்கிறது. 2010 ஆம் ஆண்டுக்கான…

அந்தியிருளால் கருகும் உலகு கண்டேன் அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன் என்றார் பாவேந்தர். படரும் இருளில் உலகு கருகுகிறது என்ற கற்பனை பற்றி இரவுலாவிகள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை. கையில் ஒரு பழைய தாளை…

தமிழில் சில சொற்கள் மேம்போக்காகக் கையாளப்பட்டாலும் அடிப்படையில் அவற்றுக்கு வேறுபொருள் இருக்கும்.கன்னா பின்னா என்றொரு பிரயோகம் உண்டு. கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். பின்னா என்பது, அவனுக்குப் பின்னால்  பிறந்தவனாகிய  தருமனைக்  குறிக்கும்..…

    தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நிகழ்ந்த கவியரங்கில் வாசித்த கவிதை.அவையின் அப்போதைய கலகலப்புக்காக வாசித்த சில வரிகள் நீங்கலாய் மற்றவைஇங்கே இடம் பெறுகின்றன… பொதுத்தலைப்பு: கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம் கிளைத்தலைப்பு:…

“அவனைப் பற்றியே ஆயிரம் கவிதைகள்  எழுதி எழுதிநான் எழுத்தை நேசித்தேன்” என்று நேருவைப்பற்றிச் சொன்னார்  கவிஞர். அவரை வாசித்து வாசித்தே தமிழின் பக்கம் வந்தேன். கவிஞரின் தனிக்கவிதைகள் வழியே அவரின் திரைப்பாடல்களுக்குள் பிரக்ஞையுடன் புகுந்தேன். அவரின் படைப்புலகுக்குள் புகுந்து பார்க்க இந்தக் கட்டுரைகள் ஒரு கைவிளக்காய் இருக்கலாம். ஆனால் உள்ளே போகிற நீங்கள் நான் காணாதவற்றையும் காண்பீர்கள். காட்டுவிப்பீர்கள்.…

கவிஞரின் தேடல் உள்முகமாகக் குவியத் தொடங்கிய காலகட்டம் அவருடைய வாழ்வின் நிறைவு நிலையில் நிகழ்ந்தது. வாழ்வெனும் மாயப்பெருங்கனவை விலக்கி உதறி விழித்தெழுந்த நிலையில் அவருடைய மனப்பான்மை மலர்ந்தது . இமயம் வரைக்கும் என்பெயர் தெரியும்…

கண்ணதாசன் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற மற்றோர் அம்சம், புலனின்பம். வாழ்வின் சுகங்களை நிதானமாய் ரசித்து அந்த அனுபவங்களை இலக்கியமாய்ப் படைத்தவர் கண்ணதாசன்.அவசரத்துக்கு கள், ஆவேசத்திற்கு பெண் என்ற வகையைச் சேர்ந்தவரல்ல அவர். காதலிலும்…

இந்தியாவின் இணையற்ற பெருமைகளைப் பட்டியல் போடும் பாரதி, தத்துவக் கோட்பாடுகளின் தூல வடிவமாக வாழ்ந்தவர்களையே பட்டியலில் சேர்க்கிறான். மானுட தத்துவத்தைக் கலையாக்கிய கம்பன், கலைநேர்த்தி என்னும் தத்துவத்திற்கு சான்றான காளிதாசன், என்ற வரிசையில் வேதாந்த…

அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினாலும் கவிஞர் சமய உணர்வுகளுக்கு  அப்பாற்பட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.திருக்குரானை தமிழில் மொழிபெயர்க்க அவர் முற்பட்டார். அது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்ததும் அப்பணியை நிறுத்திக் கொண்டதோடு இசுலாமிய சகோதரர்களுக்கு…

கவிஞர் எழுதத் தொடங்கி இருபத்தைந்தாண்டுகள் ஆனபோது தெய்வ வணக்கத்துடனும் தன்னடக்கத்துடனும் ஒரு கவிதை எழுதினார் அவர். அதிலொரு பிரகடனமும் செய்தார். இருபத்தைந்தாண்டுகள் எழுதினேன் என்பதால் என்னையான் போற்றவில்லை இன்னுமோர் காவியம் எண்ணுவேன் எழுதுவேன் இலக்கியம் தூங்கவில்லை என்றார். ஆனாலும்…