எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன என்றும் எண்ணங்களே சக்தி மிகுந்தவை என்றும் மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் இன்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் தரமான மருந்து என்று தண்ணீரைக் கொடுத்தாலும்…

தொண்டு என்கிற போர்வையில் சுயநலமான போக்குகள் அரங்கேறிக் கொண்டு இருக்கிற சூழல் எந்தக் காலத்திற்கும் தேவையான அர்ப்பணிப்பு உணர்வை அழகாக பேசுகிற திருத்தொண்டர் புராணம் தன்னலம் இல்லாத தொண்டர்களை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டி நூல். அடிப்படையில்…

திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞானசம்பந்தருடைய திருப்பதிகங்களை யாழில் இட்டு இசைப்பதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார். அவர் தம் துணைவியார் மதங்கசூளாமணியார் அந்தப் பதிகங்களை இசைப்பதில் கணவருக்குத் துணை நிற்கிறார். சோழ மன்னரிடத்தில் பணிபுரிந்து வந்த பரஞ்சோதியார்,…

இவற்றை தாண்டி தொண்டர்களுடைய அரிய இலக்கணம் ஒன்றையும் சேக்கிழார் சொல்கிறார். ஒருவன் இறைவன் இடத்திலே பக்தி செலுத்துவதுகூட பயன் கருதி அமையக் கூடும். எல்லா பற்றுகளையும் துறந்து நான் இறைவனை வேண்டினால் எனக்கு வீடுபேறு…

‘ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்’ என்கிறார் சேக்கிழார். அது எப்படி ஓட்டையும் செம்பொன்னையும் ஒன்றாகவே பார்ப்பது என்றால், அதற்கு திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் ஓர் ஆதாரம் இருக்கிறது. நாவுக்கரசரின் பற்றற்ற மனப்பான்மையை வெளிப்படுத்த விரும்பிய…

சேவை மனப்பான்மை மனிதனுடன் ஒட்டிப் பிறந்த ஒரு குணம். அடுத்த உயிர் நலம் பெறும்படி, மகிழ்ச்சி பெறும்படி செய்ய வேண்டும் என்கிற உந்துதல் எல்லோருக்குமே உண்டு. பிறந்து வளர்ந்த சூழ்நிலை, வாழ்கிற சூழல் போன்றவற்றின்…

சுந்தரமூர்த்தி நாயனார் புராணத்தில் ஆலாலசுந்தரர் வழிவழியே தனக்கு அடிமை என்று எழுதப்பட்ட ஓலையினை இறைவன் சிவனடியார் வேடம் தரித்து கொண்டு வருகிறார். அதை நம்பாத சுந்தரமூர்த்தி நாயனார் கையிலே அந்த ஓலையை வாங்கிப் பார்க்கிறார்.…

சிவகாமி ஆண்டார் பூக்குழலை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல அரசனுடைய பட்டத்து யானை மதம் கொண்டு அந்த பூக்குழலைப் பிடுங்கி காலாலே துவம்சம் செய்கிறது. இறைவனுக்குரிய மலர்கள் இப்படி தெருவில் இறைந்துபட்டனவே என்ற வருத்தத்தில் சிவகாமி…

அடிப்படையில் சேக்கிழார் அமைச்சராக இருந்தவர். ஆட்சி பொறுப்பின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர். பெரிய புராணத்தில் புகழ்ச்சோழர் போன்ற அரசர்கள் காணப்படுகின்றனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்ட நாயன்மார்கள் பெரிய புராணத்தில் பேசப்படுகின்றனர். காவியத்தை எழுதிச்செல்கிறபோதே ஆட்சிப்பொறுப்பின்…

அடிப்படையில் அதற்கு உளவியல் ரீதியாக ஒரு காரணம் உள்ளது. திருவாமூர் என்ற திருத்தலத்தில் அவதரித்தவர் திருநாவுக்கரசர். அப்போது அவருடைய பெயர் மருள்நீக்கியார். தமக்கை திலகவதியாருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை கலிப்பகையார் போரில் இறந்து விடுகிறார். அந்த…