வாழ்க்கை என்பதே வினைநீக்கும் ஏற்பாடுதான். அது எவ்விதம் நிகழ்கிறது என்பதில்தான் எல்லாம் நிகழ்கிறது. தன்னுடைய உயிரின் வினைகள் நீங்கப்பெற வேண்டும் என்னும் விருப்புணர்வோ இல்லாமலும்கூட எத்தனையோ பிறவிகளாய் பாசமாம் பற்றை வளர்த்து வருகிறோம். செவ்வண்ணப்…

கடையும் மத்தும் கடையூர்க்காரியும் பால் போன்றதுதான் உயிர். அதில் விழும் வினைத்துளிகளில் உயிர் உறைந்து போகிறபோது வந்து கடைகிறது மரணத்தின் மத்து. மரணம் மட்டுமல்ல, மரணத்துக்கு நிகரான எந்த வேதனையும் உயிரை மத்துப்போல்தான் கடையும்.…

ஓர் உணர்வு நமக்குள் பிரத்யட்சமாக உருவாகிவிட்டால் அதையே திரும்பத் திரும்பச் சொல்வதுதான் நம் இயல்பு. காய்ச்சல் கண்டவர்கூட, ‘குளிருதே! குளிருதே!’ என்றே ஓயாமல் சொல்லிக் கொண்டிருப்பார். தன்னுடைய சிரசின் மேல் அம்பிகையின் பாதங்கள் பதிந்த…

கடலைக் கடைந்ததே வேண்டாத வேலை! திரிபுரங்களை ஆள்பவள் திரிபுரசுந்தரி. மனிதனின் உடல் மனம் உயிர் ஆகிய முப்புரங்களையும் அவளே ஆள்கிறாள். இந்த முப்புரங்களிலும் உள்ளும் புறமுமாய்ப் பொருந்துகிற அபிராம வல்லியின் திருமுலைகள் செப்புக் கலசங்களைப்…

அபிராமியின் அடிதொழும் அன்பர்களின் பட்டியலை வெளியிடுகிறார் அபிராமிபட்டர். இது முழுப்பட்டியல் அல்ல. முதல் பட்டியல். தேர்தல் காலத்தில் வேட்பாளர்களின் முதல் பட்டியல் ஒன்று வெளியாகுமல்லவா! அப்படித்தான் இதுவும். “மனிதரும் தேவரும் மாயாமுனிவரும் வந்து சென்னிக்…

அவளைப் புரிந்தால் அனைத்தும் புரியும்! ஞானிகளுக்கு கல்வி தேவையில்லை. நாம் வாசிக்கும் அளவு அவர்கள் வாசிக்கிறார்களா என்பதுகூட ஐயமே. ஆனால் நாம் நினைத்தும் பாராத பல நுட்பங்கள் அவர்களுக்குப் புரிபடுகின்றன். காணாதன காண்கிறார்கள். காட்டாதன…

3. விரலருகாய்….. வெகு தொலைவாய்…. அம்பிகைமீது அன்புச் சதோதரர் இசைக்கவி ரமணன் எழுதிப்பாடும் பாடல்களில் ஒரு வரி… “விரலருகாய் வெகுதொலைவாய் இருக்கின்றாய்.. உன்னை வென்றோம் என்றவர் நெஞ்சில் அமர்ந்து விழுந்து விழுந்து சிரிக்கின்றாய்.” சென்றடையாச்…

2. புதிரின் விடைபோலப் புலரும் இளங்காலை பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி 2009 ஆம் ஆண்டு. அக்டோபர் மாதம் 15ஆம் நாள். விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் மயிலாடுதுறையிலிருந்து திருக்கடவூர்…

பொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம் அபிராமி அந்தாதி நூலுக்கு விளக்கவுரை பேசி முடியாப் பேரழகு பொன்புலரும் காலைகளிலோ, முன்னந்தி மாலைகளிலோ…

மரபுக் கவிதைகளின் மகத்தான தூணாக விளங்கிய கவிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்கள் மறைவுக்கென் அஞ்சலி. — ம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ உயிர்ப்பு மரபு சார்ந்த மனம் கட்டுகள் உடைத்துக் ககனவெளியில் எப்போதெல்லாம் சிறகடிக்கின்றதோ, அப்போதெல்லாம்…