திருநீறு தினம்பூசி தேவாரத் தமிழ்பாடி வருவோரை சிவன்காக்கும் அருணாசலம்-அவன் மடிமீது மகிழ்ந்தேறி ஓங்காரப் பொருள்கூறும் மகன்வாழும் தலம்தானே மருதாசலம் சிவன்வாழும் மலைதானே அருணாசலம்-அவன் மகன்வாழும் தலம்தானே மருதாசலம்! சிவநாமம் தினம்கூறி பனிபாயும் கொடியாகி உமையாளும்…

“ஆலம் விதையோ பூமியிலே ஆழ்ந்து வேர்கள் பதிக்கிறது காலம் கடந்தபின் விழுதெல்லாம் கனிவாய்த் தாங்க வருகிறது!” காலங் காலமாய் இப்படித்தான் கதைகள் சொன்னார் நம்பிவந்தேன் ஆலின் நுண்ணிய ஆன்மாவை ஆழ்கன வொன்றில் கண்டுகொண்டேன் “வேருக்கு…

பெரிய கல்வி நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஒருவர்,மதுரைக்குப் போகும் வழியில் தன் அலுவலர் ஒருவரிடம் சிலவற்றை சொல்வதற்காக அலைபேசியில் அழைத்திருக்கிறார்.”மதுரைக்குப் போகாதேடீ”என்ற பாடல் ஒலித்ததும் அதிர்ந்து போன அவருக்கு சொல்ல வந்தது மறந்துபோனது. அவர் மதுரைக்குப் போனார்.அந்த அலுவலர் அடுத்த நிமிடமே அந்தப் பாட்டை மாற்றிக் கொடுக்குமாறு கேட்டு அந்த அலைபேசி நிலையத்துக்கே போனார்.ஒருகாலத்தில் நான் மதுரைக்கு மாதம் ஒருமுறையாவது போவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அதாவது தொண்ணூறுகளின் தொடக்கத்தில்…. ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாய் எனக்கு…

ஓவியம் :திரு.ஜீவா தமிழ்நாடு உணவகத்தின் கூட்ட அரங்கில் ஏராளமானவர்கள் கூடியிருந்தார்கள்.பெரும்பாலானவர்கள்கோவையையும் அதன் சுற்றுப்பகுதிகளையும் சேர்ந்த கல்லூரி மாணவர்கள்.அனைவரும் அடிக்கடி வாயிலைப் பார்த்துக் கொண்டிருந்தனர். வகுப்பறைக்குள் நுழையும் பேராசிரியர் போல் கால்சட்டைக்குள் உள்ளிடப்பட்ட மேல்சட்டையுடன் சிரித்த…

புயல்நடுவே சிற்றகலும் புன்னகைக்கு மென்றால் கயல்கண்ணி பார்த்த கருணை-ஒயிலாக சந்நிதி யில்நிற்கும் சக்தியருள் பெற்றபின்னே நன்னிலைதான் சேரும் நமக்கு. பட்டுரசும் பாதங்கள் பூமி தனிலுரச மொட்டவிழும் கற்பகப்பூ மண்ணெங்கும்-எட்டுதிசை வீசும் வளைக்கரங்கள் வையமெலாம் காப்பதனைப்…

என்முன் வருகிற காலங்களை இன்னும் திடமாய் எதிர்கொள்வேன் பொன்னினும் விலைமிகு பொருளென்றே பொழுதுகள் தம்மை மதித்திருப்பேன் இன்னமும் செய்ய ஏராளம் என்பதை உணர்ந்தே உழைத்திருப்பேன் இன்னொரு மனிதரை எண்ணாமல் என்னை நானே ஜெயித்திருப்பேன் எவர்க்கும்…

சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் சூர்ய குண்டம் கங்கையுடன் காவிரியும் சங்கமமாய் பொங்கும் எங்குமுள்ள தீர்த்தங்களும் இங்குவந்து தங்கும் வானமழை வந்துவந்து தேனமுதம் சிந்தும் ஞானியெங்கள் சத்குருவும் தந்தருளும் குண்டம் சூர்ய…

ஆடும் திருவடி தெரிகிறது ஆனந்தம் அலைபோல் எழுகிறது பாடும் திருமுறை ஒலிக்கிறது பரமனின் திருவருள் இனிக்கிறது ராவணன் தோள்களில் பதிந்தபதம் ஜாமத்தில் சுடலையில் உலவும் பதம் ஆரூர் வீதியில் நடந்த பதம் ஆடிய பாதமே சாசுவதம் தீயென எழுந்தது திருமேனி தாமரைப் பதந்தனில் இவன்தேனீ தாயென்றும் வருவான் சிவஞானி தாண்டவ ஜதிசொல்லு மனமேநீ காலனை…

என்னுடைய 50ஆவது நூலாகிய திருக்கடவூர் பற்றி தமிழகத்தின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்களில் ஒருவராகிய முனைவர் குடவாயில் பாலசுப்பிரமணியன்அவர்கள் நிகழ்த்திய திறனாய்வுரையினை இக்காணொளியில் காணலாம்.இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நண்பர் தஞ்சை செழியன் அவர்களுக்கு நன்றி. http://www.youtube.com/watch?v=5M1kn-mpTdw