வாழ்க்கை என்பது திரைச்சீலை -நீ வரைய நினைப்பதை வரைந்துவிடு! தூரிகை உனது முயற்சிகள்தான் -ஒரு தீண்டலில் கனவுகள் மலரவிடு! கோடுகள் வளைவுகள் எல்லாமே – நீ கொண்ட கனவின் வெளிப்பாடு! மேடுகள் பள்ளங்கள் எல்லாமே…

இரண்டே சிறகுகள் இருக்கும் பறவை எதிர்த்திசைக் காற்றைக் கிழித்துவிடும்! மருண்டு தவிக்கிற மனிதா&உனது முயற்சிகள் உன்னை மலர்த்திவிடும்! வேர்பிடிக்கும்வரை தாவரமெல்லாம் வலிகள் தாங்கிப் போராடும்! யார்தான் வெற்றியை எளிதில் பெற்றது? இருளுக்குப் பின்தான் பூபாளம்!…

பூமிப் பரப்பில் புனிதத் தலைமை புறப்பட்டு வந்தது புதிதாக! சாமி எங்கள் விவேகானந்தன் சத்தியமூர்த்தி வடிவாக! விரும்பும் கடமைகள் துறந்திடச் சொல்வது வெட்டிப் பேச்சு வேதாந்தம்! இரும்பு போல் உடம்பை உரம் பெறச் சொன்னது…

பார்க்க முடியா இடங்களில் எல்லாம் பாம்புச்சட்டை கிடக்கிறது; கேட்கும் குயிலிசை கண்ணுக்குத் தெரியாக் கிளையில் இருந்து பிறக்கிறது; ஊரே உறங்கிக் கிடக்கும் வேளையில் ஒவ்வொரு பொழுதும் விடிகிறது! யாரும் அறியா நொடியில் தானே எங்கோ…

மலையைப் புரட்டும் இலட்சியத்தோடு மனிதா தொடங்கு புதுக்கணக்கு; விலையாய் உழைப்பைக் கொடுத்தால் போதும் வளைந்து கொடுக்கும் விதிக்கணக்கு; புலம்பல் ராகம் பாடுபவர்க்கு புலரும் பொழுதுகள் புதிர்க்கணக்கு; கிளம்பும் கதிர்போல் எழுந்தால் உனது கிழக்கில் தினமும்…

அங்கும் இங்கும் திரியும் பறவை ஆகாயத்தை அளப்பதென்ன? அங்குச நுனியில் அடங்கும் யானை ஆரண்யத்தை அழிப்பதென்ன? கொத்தித் தின்னும் கோழிகள் கூடக் காட்டுப் பருந்தை எதிர்ப்பதென்ன? அத்தனை வெட்டும் தாங்கும் பூமி பூகம்பத்தில் குதிப்பதென்ன?…

புலிக்குப் பிறந்தது பூனையாகலாம் புழுவின் இனத்திலும் யானை தோன்றலாம் கணக்கு மாறினால் காலம் மாறலாம் காலப் போக்கிலே எதுவும் நேரலாம் பழைய தோல்விகள் பாடமாகலாம் புதிய வெள்ளத்தில் ஓடமாகலாம் சுழல்கள் யாவுமே பழகிப் போகலாம்…

காற்று வீசுது உன் பக்கம் – நீ கண்கள் மூடிக் கிடக்காதே! நேற்றின் தோல்விகள் போகட்டும் -இந் நாளை இழந்து தவிக்காதே! பொறுமைத் தவங்கள் முடிகையிலே – நீ புதிய வரங்களை வாங்கிவிடு! உரிமை…

நானொரு வழிப்போக்கன்- ஆமாம்! நானொரு வழிப்போக்கன் வாழ்வின் நீண்ட வெளிகளை எனது பாதங்கள் அளந்து வரும் பாதையில் மாறிடும் பருவங்களால் ஒரு பக்குவம் கனிந்து வரும். பக்குவம் கனிந்து வருவதனால் ஒரு இலட்சியம் பிறந்து…

நேற்றைய மழைத்துளி காயவில்லை – அது தாவர வேர்களில் நுழைந்திருக்கும் நேற்றைய கதிரொளி போகவில்லை – அது நேற்றின் செயல்களில் நிறைந்திருக்கும் நேற்றைய சருகுகள் மறையவில்லை – அவை நிச்சயம் பூமியில் கலந்திருக்கும் நேற்றைய…