காதலின் உச்சப் படிமம் கண்ணன்.காதல் என்ற சொல் எங்கெல்லாம் செல்லுபடியாகுமோ அங்கெல்லாம் இந்தப் படிமம் கவிஞரின் பாடல்களில் வந்து விழுகிறது. இறைவனிடம் பக்தன் செலுத்தும் அன்பு, பிள்ளையிடம் தாய் செலுத்தும் அன்பு, காதலர்களிடையிலான அன்பு, என்று எல்லாவற்றிலும் கண்ணா என்ற சொல் கவிஞருக்குக் கைகொடுக்கிறது.
ஒருநாள் இரவு பகல்போல் நிலவு
இப்படியிருக்க, ஆண்குழந்தையைக்
அதேநேரம், வாழ்க்கை எத்தனை புயல்களை அனுப்பினாலும்,வாழ்க்கை அனுபவங்களும், வலிகளால் வாடாத வைராக்கியமான பக்தியும் என்னென்ன உறுதிகளை உள்ளத்தில் ஏற்படுத்தும் என்பதற்கும் ஒரு பாத்திரத்தையே சாட்சியாக்குகிறார் கவிஞர். திருநாவுக்கரசரின் தேவாரத்தில் வருகிற ஒரு வரி, “ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே”. அதையே பல்லவியாக்கி எழுதும் பாடலில் கவிஞர் சொல்கிறார்:
என்ற வரிகளில், இணைய முடியாத நிலையிலும் இருவரும் இதயத்தால் பிரியாத உயிர்ப்பான காதல் உணர்த்தப்படுகிறது. குழந்தையைத் தொட்டிலில் போட்டுவிட்டு கைவேலையாய் நகர்கிறாள். குழந்தை அழுகிறது. அருகிலுள்ள வீட்டிலிருந்து அவன் குழல் வாசிக்கிறான். குழலிசை கேட்டபடியே குழந்தை துங்கி விடுகிறது. தூங்கிவிட்ட குழந்தையைப் பார்த்துக்கொண்டே தூங்காத தன் காதலைப் பாடுகிறாள் நாயகி.