ஃபேஸ் புக் இன்ஸ்டாகிராம் போன்ற ஊடகங்கள் பலவற்றிலும் ஓர் உத்தி பின்பற்றப்பட்டு வருகிறது.
பார்க்கப் பரிதாபத்தை வரவழைக்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் குழந்தைகள் அல்லது அனுதாபத்துக்குரியவர்கள் புகைப்படங்களை போட்டு இவர்களுக்கெல்லாம் ஒரு லைக் கிடைக்காது என்கிற ஆதங்க வரியோடு சில பதிவுகளைப் பார்ப்பீர்கள்.
அல்லது லைவ் ஷோ நிகழ்ச்சிகளில் நன்றாக பாடக்கூடிய குழந்தைகள் புகைப்படங்களை போட்டு இவருக்கு ஒரு வாழ்த்து சொல்லலாமே என்கிற வாசகத்தை பார்ப்பீர்கள்
யாருக்கெல்லாம் இவருடைய பாடல் பிடிக்கும் ஒரு லைக் போடுங்கள் அல்லது ஒரு கமெண்ட் போடுங்கள் என்ற தூண்டுதல் வாசகமும் தூண்டிலாக போடப்படுவதுண்டு.
உண்மையில் அந்தப் படத்தில் இருப்பவருக்கும் அந்த பதிவுக்கு எந்த சம்பந்தமும் இருக்காது.
ஆனால் அந்தப் பக்கத்தை நடத்துபவருக்கு லைக்குகள் விழவிழ அவருக்கு விதவிதமான ஆதாயங்கள் கிடைக்கும்.
இது போன்ற வாழ்த்து வழிப்பறிகள் யாருடைய சாதனைக்கோ யாருக்கோ ஆதாயம் சேர்க்கும்.
ஆனால் நம் குற்ற உணர்வையோ பரிதாப உணர்வையோ தூண்டி அதன்மூலம் பயனடையும் கெட்டிக்காரர்கள் ஊடகங்களில் உலவத்தான் செய்கிறார்கள்.
இதை வாழ்த்து வழிப்பறி என்பதா? வாழ்த்து பிச்சை என்பதா? நீங்களே முடிவு செய்யுங்கள்