இறைவன் தன் அடியவர்களை நெருங்கி வர அனுமதிக்கும் இடம் பூமிதான்.வானகத்தில் தேவர்களுக்குஅவனை நெருங்கக் கூட துணிவு கிடையாது. தன் அடியார்களுடன் தான் நெருங்கிப் பழக வேண்டும் என்பதற்காகவே அவர்களை மண்ணில் வந்து வாழச் செய்தானாம்…

சைவத்தின் உயிர்நாடி சிவப்பரம்பொருளின் செங்கழல் இணைகளில் சென்று சேரும் நற்கதி. உயிரின் கடைத்தேற்றத்தை சிவபெருமான் திருவடிகள் எவ்வாறெல்லாம் நிகழ்த்துகின்றன என்பதை நிரல்படச் சொல்கிறார். அனைத்திற்கும் ஆதியாகவும் அந்தமாகவும் அமையும் திருவடிகளே,உயிர்களைத் தோற்றுவிக்கின்றன.உயிர்க்குரிய போகங்களையும் அருள்கின்றன.உயிர்களின்…

தன் தந்தை மாமனாராகும் தருணம் குறித்த கேலிச்சொல் அக்காலத்துப் பெண்கள் மத்தியில் இருந்திருக்குமோ என்னும் யூகத்தை இப்பாடல் கிளப்பி விடுகிறது. இப்படி வைத்துக் கொள்வோம்.ஒரு தந்தைக்கு இரண்டு பெண்கள். முதல் பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்தார்.…

இந்தப் பாடலில் ஒரு குட்டு வெளிப்படுகிறது.ஆங்கிலத்தில் the cat is out என்பார்கள்.தோழிகள்,அதுவும் தினமும் பழகுபவர்கள்,மறுநாள் காலை வருவதாக முன்னறிவிப்பு தந்தவர்கள்,தெருவில் சிவநாமத்தைப் பாடி வருகையில் படுக்கையில் துடித்துப் புரள்வதும் மூர்ச்சையாவதும் சமாதி நிலைக்குப்…

முகிலை முகிலே என அழைக்காமல்,மழையே என்றழைத்துப் பேசுகிறார் மாணிக்கவாசகர். ஆண்டாளும் ஆழி மழைக்கண்ணா என்று திருப்பாவையில் பாடுவதை நினைவுபடுத்திக் கொள்ளலாம். முகில் கண்ணன் திருவுருவை ஒத்திருப்பதாக ஆண்டாள் பாடுவதும், முகில் அம்பிகை திருவுருவை ஒத்திருப்பதாக…

இறையடியாரின் இயல்பு இப்பாடலில் விரிவாகப் பேசப்படுகிறது. சிவசிந்தையில் தம்மையே பறிகொடுத்தவர்கள் பற்றிய வர்ணனை திருவாசகத்தில் பல இடங்களில் காணப்படுகிற ஒன்றுதான்.அடியவர் தனியே இருக்கையில் என்னுடைய இறைவனென்று சொல்லி மகிழ்வதும், அடியார் திருக்கூட்டத்தின் நடுவே இருக்கையில்…

மாணிக்கவாசகர் சொல்லும் இறையனுபவத்தின் அடையாளங்களில் ஒன்று,”மெய்தான் அரும்பி விதிர்விதிர்த்தல்”.மார்கழியில் குளிர்ந்த நீர்நிலையில் இறங்கினாலே மெய் நடுங்குகிறது.சிவசக்தியின் கருணையாகிய பொய்கையில் இறங்கினால் !! இன்றளவும் இறையனுபவத்திற்கு ஆட்படுபவர்கள் உடலில் அத்தகைய விதிர்விதிர்ப்புகளை நாம் காணலாம். இறையனுபவத்தில்…

எந்தவொன்றை மிகுதியாக சிந்திக்கின்றோமோ அதுவே எங்கும் புலப்படுவது இயல்பு. இறைசிந்தையிலேயே இதயம் தோய்ந்த இப்பெண்கள்,நீராடப் போய்ச்சேர்ந்த பொய்கையிலும் அம்மையப்பனையே காண்கிறார்கள். குவளை மலரின் கருமை நிறம்,அம்மையை நினைவூட்டுகிறது. செந்தாமரை சிவப்பரம்பொருளை குறிக்கிறது.வினை நீக்கும் உடல்…

முந்தைய பாடலின் நீட்சியாகவும் சிவானந்தம் என்னும் அற்புதத்தில் ஆழ்ந்து திளைக்கும் ஆனந்தத்தின் வெளிப்பாடாகவும் இப்பாடல் அமைகிறது.சிவமாகிய தீர்த்தத்தில் நீந்திக் களித்து விளையாடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை. தானே தீர்த்தனாய் வினைகளை தீர்ப்பவனாய் விளங்கும் இறைவன் சிற்றம்பலத்தில் அனலேந்தி…

சிவத்தின் பெருங்கருணையே ஒரு பொய்கையாய் பெருகி நிற்கிறது.அதுவும் வண்டுகள் மொய்க்கும் பொய்கை. அதாவது பொய்கையை வண்டுகள் மொய்க்கக் காரணம் அதில் பூத்திருக்கும் தாமரைகள். சிவப்பொய்கையில் குதிக்கும் இந்த மனித வண்டுகள் அவனுடைய திருவ்டித் தாமரைகளைத்…