முழக்கங்கள் முனகலாகும் முனகலும் ஓய்ந்து போகும் விளக்கங்கள் விவாதமாகும் விவாதமும் மறந்து போகும் கலக்கங்கள் தெளியலாகும் கேள்விகள் தோன்றும் போகும் நிலைக்கொள விரும்பும் நெஞ்சே நித்தியன் பெயரைப் பாடு மகுடங்கள் களவு போகும் மகிமைகள்…

புவனம் ஆள்பவள் ஈஸ்வரியாம்-அடப் போடா அதனால் எனக்கென்ன குவளைத் தண்ணீர் நான்கேட்டால்-அவள் குடுகுடு எனவந்து நீட்டுகிறாள் கவலை கொஞ்சம் படிந்தாலும்-அவள் கைகளில் அள்ளித் தேற்றுகிறாள் “துவள வேண்டாம் எப்போதும்-நல்ல துணை நான்” என்று காட்டுகிறாள்…

மூடிக் கிடந்த குளிர்பெட்டி-அதில் மூச்சினைத் தொலைத்துக் கிடந்தானே பாடி முடிந்த கீர்த்தனையாய்- எங்கள் பாட்டுடைத் தலைவன் தெரிந்தானே மேடுகள் ஏறிய ஜீவநதி -நெடும் மௌனத்தில் தூங்கிய தருணமிது கூடு கிடத்தி சிறகடித்தான் -ஒரு கனல்பறவை…

ஜெயகாந்தன் எழுதாத நேரங்களிலும் ஓர் எழுத்தாளராய் ஒளிர்ந்தவர்.தொழில் சார்ந்த முழுநேர எழுத்தாளர்கள் பலருண்டு. ஆனால் அவர் நுண்ணுணர்வின் ஓயாச் சுடரால் ஒளிவீசிக் கொண்டேயிருந்தவர். இரவுப் பொழுதுகளில் கதிரவன் நம் கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்கோ ஒளிவீசியதைப்…

மாநாய்கன் பெற்றமகள் மலர்ந்தாள் மாசாத்து வான்மகனை மணந்தாள் மானாய் மருண்டாள் மதுரைநடந்தாள் கோனவன் பிழைசெய்ய கண்ணகியும் கனலாகி எழுந்தாள் சுதிசேர்த்தாள் மாதவியும் யாழில் சுரம்சேர்த்தாள் பூம்புகாராம் ஊரில் விதிசேர்த்த காரணம்  வல்வினையின் காரியம்  பதிநீத்தான்…

தேர்ந்த தமிழறிஞரும்,ரசிகமணி டி.கே.சி. அவர்களின் அணுக்கச் சீடருமான வித்வான் ல.சண்முகசுந்தரம் சென்னையில் மறைந்தார். அவருக்கு வயது 94. தன் குருநாதரைப் போலவே மாபெரும் ரசிகராய் வாழ்வாங்கு வாழ்ந்த அவர் பல நூல்களை எழுதியுள்ளார். சாகித்ய…

காடு திருத்திய மானிடர்கள்-ஒரு காலத்தில் நாடுகள் அமைத்தளித்தார் வீடுகள் வீதிகள் சமைத்தவரோ-பல வாழ்க்கை முறைகளும் வகுத்தளித்தார் தேடும் வசதிகள் பெருகியபின்-நல்ல தேசங்கள் வளர்ந்து பொலிகையிலே ஏடு புகழ்ந்திட சிங்கையினை-புகழ் ஏற்றி வளர்த்தார் லீகுவான் இயூ…

(இசைக்கவி ரமணன் , விசாகப்பட்டினம் அருகிலுள்ள பீமுனிப் பட்டினத்தில் பீடம்கொண்டிருக்கும் தன் குருநாதரை தரிசித்த அனுபவங்களைப் படங்களாய் பகிர்ந்திருந்தார்.அந்தப் படங்கள் பார்த்த உவகையில் இந்த வெண்பாக்கள் எழுதினேன்…..பாம்பறியும் பாம்பின் கால்!!!) நெருப்பின் குளுமை நிழலை,…

இல்லாது போதெலெனும் பொல்லாத போதைதான் ஈஷாவில் இருக்கின்ற மாயம் நில்லாத வினைகளெலாம் செல்லாது போக குரு நாதனவன் நிகழ்த்துகிற ஜாலம் சொல்லாத வலிகளையும் கிள்ளாமல் கிள்ளிவிட சுட்டுவிரல் கட்டைவிரல் சேரும் கல்லாத கல்வியினைஎல்லாரும் அடைந்திடவே…

(ஆங்கில வடிவமான லிமரிக்கின் தமிழ் வடிவம் குறும்பா.அதனாலோ என்னவோ ஆங்கிலச் சொற்களுக்கு அனுமதி உண்டு..) காலையில நடக்குறாரு அப்பன் கேழ்வரகு இட்டிலிதான் டிப்பன் வேலைக்கு இடையே வச்சுதின்ன வடையே மூலையில முடக்கிடுச்சே சுப்பன் பன்றிக்கும்…