Blog

/Blog

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

அம்பிகையின் திருவடிகள் தலைமேல் சூட்டப்பட்டதால் வினைகள் முற்றிலும் நீங்குகின்றன.எனவே காலன் அருகே வருவதில்லை. இதுதான் இந்தப் பாடல் நமக்குச் சொல்கிற விஷயம். அது எப்படி என்கிறகேள்வி எழலாம்.அதற்கான முழு விளக்கத்தை அடுத்த பாடலில் அருள்கிறார்அபிராமி பட்டர். பொதுவாகவே தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க வேண்டுமென்றால்அவர்கள் வருவதற்கான பாதையை அடைப்பார்கள்.எந்த வழியாக எமன் வருகிறான் என்று பார்த்து அந்தப் பாதையை அடைக்கும் உபாயத்தைஉணர்ந்து கொள்கிறார் அபிராமி பட்டர். “இழைக்கும் வினை வழியே அடும் காலன்” உண்மையில் எமன் செய்வது அஞ்சல் ...

ஆனந்த் அரவிந்தாக்‌ஷனும் ஆட்டுக்கறி பாயாவும்

காலை ஏழரை மணிக்கே திறக்கப்படும் பாய் கடைக்குள் இருந்து அந்த நண்பர் எட்டு மணிக்கெல்லாம் சிவந்த முகத்துடன் வெளியே வந்து கொண்டிருந்தார். அவர் எதையோ முணுமுணுக்கிறார் என்று தான் முதலில் நினைத்தேன். அவர் ஓர் இசைக்கலைஞர்.(ஜான் சுந்தர் அல்ல).மேடைகளில் பாடவேண்டும் என்னும் ஆசை கொண்டவர் (இளஞ்சேரலும் அல்ல) ஆனால் அவர் சற்றுமுன் சாப்பிட்ட பாயாவின் எச்ச சொச்ச எலும்புத் துண்டுகளை தேடித்தேடி மென்று கொண்டிருந்தார். முகத்தில் உண்ட நிறைவை விட கடித்துத் துப்பிய நிறைவே காணப்பட்டது.விஷயம் வேறொன்றுமில்லை.மனிதர், ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

தன்னுடைய திருவடிகளை தலையின்மேல் அம்பிகை சூட்டியதால் என்ன நிகழ்ந்தது என்று சொல்லும் இந்தப் பாடலிலும் இதற்கடுத்த பாடலிலும் மரணமிலாப் பெருவாழ்வின் மாட்சியையும் அதற்கான மார்க்கத்தையும் உணர்த்துகிறார் அபிராமி பட்டர். கடலில் அகப்பட்டுக் கொண்டு தத்தளிக்கிற மனிதனுக்கு கரை சேர வேண்டுமெனும் ஆசை வருகிறது. அருகிலொரு கப்பல் வந்து கயிறு வீசினால் கரைசேர முடிகிறது.ஆனால் ஒரு பெருங்கடல் இருக்கிறது. அது பிறவிப் பெருங்கடல்.அலையலையாய் ஆசைகள் ஆள்கிற கடல். இந்த ஆசைக்கடலில் வரும் கயிறு பாசக்கயிறு. அது நம்மைக் கரை ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

இறைவன் மீது நாம் பக்தி செலுத்த வேண்டுமென்பது கூட இறைவன் மேற்கொள்கிற முடிவேயன்றி நம் முடிவல்ல. பக்குவப்பட்ட உயிரை வலிய வந்து ஆட்கொள்ளும் பெருங்கருணை கடவுளின் இயல்பு. உமையும் சிவனும் அர்த்தநாரீசுவரத் திருக்கோலத்தில் காட்சியருளி அபிராமி பட்டரை ஆட்கொண்டு அவரையும் பக்தி செலுத்த வைத்து விட்டார்கள். அதனால் என்னென்ன விடுதலைகள் ஏற்படுகின்றன என்ற பட்டியலைத் தருகிறார் அபிராமிபட்டர். எந்த நெறி நமக்கு முக்தி தருமோ என்று தேடியலைய வேண்டியதில்லை.உமையும் உமையொரு பாகனும் இந்தப் பிறவியிலேயே வினைகளைநீக்கப்போவதால் வேறொரு ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

வாழ்வில் நமக்கிருக்கும் தொடர்புகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான வேறுபாடு நம் அணுகுமுறையிலிருந்தே புரியும்.தொடர்பிலிருக்கும் ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் நம்மை சந்திப்பதாகக் கூறியிருந்தால் நாம் அந்த நேரத்தை அவருகென ஒதுக்கி வைப்போம். ஆனால் அவர் வராவிட்டால் அதற்காகப் பெரிதாய் அலட்டிக் கொள்ளமாட்டோம். ஆனால் நெருக்கமான உறவில் இருக்கும் ஒருவர் வருவதாகச் சொன்னாலோ அவர் சொன்ன நேரத்திற்கு முன்பிருந்தே மனதில் எதிர்பார்ப்பு பெருகத் தொடங்கும்.காலந் தாழ்த்தினால் பதட்டம் பரவும். உறவின் அணுக்கமே உணர்வின் பெருக்கத்தைத் தீர்மானிக்கிறது. அம்பிகையை சரணடைந்த அபிராமி பட்டருக்கு ...

அபிராமி அந்தாதி-வாழ்வில் நிரம்பும் வசந்தம்

சித்தி என்ற சொல்லுக்கு பல்வேறு நிலைகளில் விதம்விதமான பொருள் சொல்வது வழக்கம். எனினும் அடிப்படையில் பார்த்தால் ஒருவருக்கு எது இயல்பாக எளிதாகக் கைவருகிறதோ அதற்கு சித்தி என்று பெயர்.கைவரப்பெற்ற திறமைக்கு சித்தி என்று பெயர். ஒரு மருத்துவர், நாளொன்றுக்கு பத்து அறுவை சிகிச்சைகள் செய்கிறார்என்றால் பத்தும் வெற்றியடைகின்றன என்றால் அந்த நிபுணத்துவம் அவருக்கு சித்தியாகி இருப்பதாகப் பொருள். உலகவாழ்வில் பெறும் இத்தகைய திறன் சார்ந்த சித்திகளுக்கும் ஆன்மீகத்தில் கைவரப் பெறும் சித்திகளுக்கும் அவற்றின் அடிப்படைத் தன்மையில் வேறுபாடில்லை. ...
More...More...More...More...