Blog

/Blog

வெத்தல வெத்தல வெத்தலயோ

மலேசியா வாசுதேவனின் ஆகிருதிக்குப் பொருந்தாத அப்பாவிக் குரலில், சிவக்குமாரின் வெள்ளந்தி முகத்திற்கு மிகவும் பொருந்தும் பாவத்தில் கங்கை அமரனின் வரிகளில் விளைந்த அற்புதமான பாடல் ‘வெத்தல வெத்தல வெத்தலயோ”. கிராமத்து மனிதர்களையே சார்ந்து வாழ்ந்து அவர்களுக்குப் பயன்கருதாமல் கைங்கர்யம் செய்யும் எளிய மனிதர்களின் பிரதிநிதியான வண்டிச்சோல செம்பட்டையின் குரல் அந்தப் பாடலில் துல்லியமாய் ஒலிக்கும். ஆதுரமாய் அழைத்து வேலைவாங்கும் யாரோ ஒரு பாட்டி,கல்யாணம் முடித்ததும்””மொத ஆசீர்வாதத்துக்கு” அழைக்கும்யாரோ ஒரு தாத்தா,அதட்டி வேலைவாங்கும்போதே அக்கறையை உணர்த்திவிடும் பயில்வான், இவர்களிடம் ...

அற்புதர்-7

தன் கனவில் அற்புதர்வந்ததாய் பரவசமாகச் சொன்னார் ஒரு சீடர். அற்புதர் தங்கள் கனவுகளிலும் வந்ததுண்டென்று ஏனைய சீடர்களும் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினர். அற்புதரைக் கனவில் காண்பது நனவில் கண்டது போலவே இருந்ததென்று சொன்னார் ஒருவர். நனவில் அற்புதரைக் காண்கிறபோதே அது கனவு போலத்தான் இருக்கிறது என்றார் இன்னொருவர். எது கனவு எது நனவு என்ற குழப்பம் பற்றி ஒரு ஜென்கதை உண்டு தெரியுமா என்று தொடங்கினார் இன்னொருவர்.சங்-சூ என்ற ஜென்குரு ஒருநாள் காலையில் குழப்பத்துடன் குடிலின் வாயிலில் ...

இரு சம்பவங்கள்….ஒரே படிப்பினை

திரு.சுகிசிவம் அவர்கள் சேலத்தில் ஒருமுறை தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்.தொடர்ந்து வருகை தந்த பல்லாயிரம் பேர்களில் ஒருவர் தயங்கித் தயங்கி வந்து திரு.சுகிசிவத்தின் கால் அளவைக் குறித்துக் கொண்டு போனார்.நிறைவுநாளன்று கைகளில் ஒருஜோடி செருப்புடன் வந்தார்.”அய்யா! நான் செருப்பு தைப்பவன். உங்கள் பேச்சு எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. எனவே நான் உங்களுக்காக இந்த ஜோடி செருப்பைக் கொண்டு வந்திருக்கிறேன்.” என்றார். அவர் நிலையறிந்து பணம் கொடுக்கலாம்.கொடுத்தால் மனம் புண்படுவார்.அவர் அன்புக்கு விலைவைத்ததுபோல் ஆகிவிடும். திரு.சுகிசிவம் சிலவிநாடிகள் யோசித்தார். தான் ...

விசையைத் தட்டினால் வெளிச்சம் வருமா? நெய்வேலியில் கேள்வி

நெய்வேலி ஈஷா அன்பர்களின் அன்புமிக்க ஏற்பாட்டில் ஞானத்தின் பிரம்மாண்டம் நூல் விளக்கவுரை நிகழ்த்தினேன். ஒருமணிநேர உரையின் நிறைவில் ஒரு மனிதனின் வாழ்வில் குரு நுழைவதற்கு முன்பும் பின்பும் தெளிவு நிலையில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் பற்றி இப்படிச் சொன்னேன்… “உங்கள் அறைக்குள்ளேயே இருட்டில் நுழைகிறீர்கள். எது எங்கே இருக்குமென்று தெரியும் என்றாலும் எடுக்க வேண்டியதை எடுக்க நேராகப் போய் நேராக வர முடிவதில்லை.தட்டுத் தடுமாற வேண்டி வருகிறது. ஆனால் விசையைத் தட்டி வெளிச்சம் அறை முழுவதும் பரவினால் கவலையே ...

போகன்வில்லா

தொட்டிக்குள் இருக்கும் பாதுகாப்பை அசல் தாவரங்கள் அங்கீகரிப்பதில்லை. போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை கொட்டிவைத்த மண்ணுக்குள் காலூன்றி நிற்பது மண்கிழிக்கும் வித்தையில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை பூவா இலையா என்று புரியாமல் இருப்பதொன்றும் பெருமையில்லை. போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை பூக்காமல் காய்க்காமல் கனியாமல் உயிர்ப்பற்று உயிர்தரித்தல் தாவர தர்மமில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை புதராகவும் மண்டாமல் மரமாகவும் திமிராமல் கணக்குப் போட்டு கவிவதில் சாரமில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை கூர்க்காக்களின் விறைத்த சட்டைநுனி மட்டும் ஸ்பரிசிக்கும் செடியாய் இருப்பதில் அர்த்தமில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை கத்திரிக்கோல்களின் கட்டுக்குள் கிடந்தபடி தன்னை கற்பகவிருட்சமாய் கருதுவது சரியில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ இது புரிவதில்லை வெயிலோ மழையோ தெரியாமல் செயற்கைக்  குளிரில் விறைத்து நிற்பதன்பெயர் செடியில்லை போகன்வில்லாவுக்கு ஏனோ ...

ஜெயமோகன் என்மேல் வழக்கு போடவில்லை

( இணையத்தில் எழுதினாலே வழக்கு பாய்கிற காலமிது. எழுத்தாளர் ஜெயமோகன் பால் கொண்ட நட்புரிமையால் 2009 ஜனவரியில் நான் இதனை எழுதினேன்.அவர் என்மேல் வழக்கேதும் போடவில்லை) தேமே என்று நடந்து போய்க்கொண்டிருந்த தன்னை ஏன் ஆட்டோவில் கடத்தினர்கள் என்று குழம்பிக் கொண்டே ஆட்டோவில் ஆடியவண்ணம் போய்க் கொண்டிருந்தார் எழுத்தாளர் புயல்வேகன்.கூச்சலிடுவதும் எட்டிக் குதிப்பதும் நவீன எழுத்தாளருக்கழகல்ல என்பதுடன் அவருக்கு குதிக்கத் தெரியாது என்பதும் அவர் வாளாவிருந்ததன் காரணங்கள்.ஆனாலும் அவரின் நுண்மனம் வாள் வாள் என்று கத்திக் கொண்டிருந்தது. கண்கள் இரண்டும் கட்டப்பட்ட ...
More...More...More...More...