Blog

/Blog

தேதி தெரிந்த கவிதை

பல கவிஞர்கள் தங்கள் ஒவ்வொரு கவிதையும் எப்போது பிறந்ததென்று குறித்து வைப்பார்கள்.அல்லது அந்த நாளில் நடந்த சம்பவமே முக்கியமானதாய் அமைந்து அந்தத் தேதியை நினைவூட்டிக்கொண்டே இருக்கும். என் கவிதைகளில் பெரும்பாலானவற்றுக்கு ஜாதகமோ பிறந்த தேதியோ கிடையாது. இன்று பழைய கோப்பு ஒன்றினைப் புரட்டிக் கொண்டிருந்த போது, தேதியிடப்பட்ட கவிதை ஒன்று கிடைத்தது. 26.07.2010 அன்று இந்தக்கவிதையை மலேசியாவில் இருந்தபடி எழுதியிருக்கிறேன். ஆனால் இந்தக் கவிதைக்கு தலைப்பிடப்படவில்லை.பிறந்த தேதி தெரிந்துவிட்டது.நேரம் ஞாபகமிருந்தால் ஜாதகம் கணித்து பெயர்சூட்டி விடலாம். பிறந்து ...

இது ரஜினியின் கடமை எனலாமா?

நெய்வேலி மின் நிலையத்தின் உயர் அலுவலர்கள் மத்தியில் “நமது வீட்டின் முகவரி” என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினேன். சிறந்த பயிற்சியாளராக அறியப்படுபவரும் அந்நிறுவனத்தின் பொது மேலாளர்களில் ஒருவருமான திரு. ஒய்.எம்.எஸ். பிள்ளை, கேள்வி நேரத்தில் ஒரு கேள்வி எழுப்பினார். “சுய மதிப்பீட்டுக்கும் சுய பிம்பத்துக்கும் என்ன வித்தியாசம்?” சுயபிம்பம் என்பதை கண்ணாடியில் தெரியும் பிம்பத்துக்கு ஒப்பிடலாம்.நாம் எவ்வாறு தோற்றமளிக்க விரும்புகிறோம் என்பதற்கேற்ப நம் தோற்றத்தில் நாம் செய்யும் சீர்திருத்தங்களை அந்த பிம்பம் பிரதிபலிக்கிறது. ஆனால் அந்த பிம்பம்தான் நாமென்று ...

எது சுதந்திரம்…..எது நிர்ப்பந்தம்?

“தெற்கிலிருந்து சில கவிதைகள்”என்னும் நூலில் என் கல்லூரிப்பருவத்தில் ஒரு கவிதை படித்தேன். எத்தனையோ முறை மேற்கோள் காட்டியும் அந்த வரிகளின் தாக்கம் மாறவேயில்லை. “பறவையான பிறகுதான் தெரிந்தது… பறத்தல் என்பது சுதந்திரம் அல்ல… நிர்ப்பந்தம் என்று” இதை எழுதியவர் கவிஞர் சமயவேல் என்று ஞாபகம். சரியாகத் தெரியவில்லை. வீட்டிலிருந்து பத்து நிமிட நடைத்தூரத்தில் இருக்கிறது, பந்தயச்சாலை. நடைப்பயிற்சிக்கு மிகவும் உகந்த இடம். பந்தயச்சாலைக்கு நடந்துபோய் அங்கே நடைப்பயிற்சி மேற்கொள்வது வழக்கம். காலைப்பொழுதில் கால்வீசி நடந்து பந்தயச்சலையின் இரண்டரை ...

ஸ்ஸாப்பிடணும்

மின்கம்பிகளில் இறங்கி, கம்பிமேல் நேர்க்கோட்டில் ஓடி, சர்வ ஜாக்கிரதையாய் தரையிறங்கிக் கொண்டிருந்த மழைத்தாரைகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது கடந்து போன இருசக்கர வாகனமொன்றை இயக்கிய வண்ணம், ஜெர்கினில் புதைந்த கையை வீசிப்போன வில்லியம்ஸை எனக்கு அடையாளம் தெரிந்தது. அவன் என் பள்ளித் தோழன். பக்கத்து வகுப்பில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அன்று ஏதோ காரணத்தினால் பள்ளி மூன்று மணிக்கெல்லாம் விட்டுவிட்டார்கள். பள்ளிக்கு அருகிலிருந்த நாஸி காபி பாரில் சமோசாவும் டீயும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். நாலு சமோசா இரண்டு ...

என்னை எழுதெனச் சொன்னது வான்

பாவேந்தர் பாரதிதாசனின் கம்பீரமான வரிகளில் இதுவும் ஒன்று. உண்மையில் மனிதனிடம் ஆகாயம்,பூமி காற்று,நெருப்பு,கடல், கதிர், நிலா எல்லாமே பேசிக்கொண்டுதான் இருக்கின்றன. பிரபஞ்ச பாஷை மனிதனுக்குப் புரிபடுவதில்லை. பாவேந்தரின் இந்த வரிக்கு நெருக்கமாக் வைத்துப் பார்க்கத் தக்க வரி, கவிஞர் வைரமுத்துவின் “வானம் எனக்கொரு போதிமரம், நாளும் எனக்கது சேதிதரும்”என்ற வரி. பூமியைப் பரிச்சயப்படுத்திக் கொண்ட அளவுக்கு மனிதன் ஆகாயத்துடன் அறிமுகமாகவில்லை. மனிதன் சலனங்களையும் சப்தங்களையும் சார்ந்தே இருக்கிறான். விரிந்து கிடக்கும் வான்வெளியின் நிர்ச்சலனம் மனிதனை ஒருவித அச்சத்தில் ...

தட்சிணாமூர்த்தி மாடம்

“உங்கள் அலுவலக அறையில் தென்முகமாக தட்சிணாமூர்த்தி படம் வைத்து தீபமேற்றுங்கள்”. பாலரிஷி ஸ்ரீ  விஸ்வசிராசினி சொன்னதுமே செய்ய வேண்டுமென்று தோன்றிவிட்டது. எங்கள் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமைகளில் வழிபாடு நடக்கும். நான் வழிபாட்டுக் கூடத்துக்குப் போகும் முன்னரே தீப தூபங்கள் தயாராக இருக்கும். இது தெரிந்தோ என்னவோ,”இந்த தீபத்தை நீங்கள்தான் ஏற்ற வேண்டும்,நீங்கள் ஊரில் இல்லாதபோது மற்றவர்கள் ஏற்றலாம் என்று சொல்லியிருந்தார் பாலரிஷி. முதல் வேலையாய் தட்சிணாமூர்த்தி படத்துக்கேற்ற மாடம் வாங்கப்பட்டது. விசேஷ காலங்களில் நெய்தீபமும், மற்ற நாட்களில் எண்ணெயும் ...
More...More...More...More...