மேஸ்குலின் கிங்
இருபது வருடங்களுக்கு முன்னால் கோவையில் ஓர் இலக்கியக் கூட்டம். உளறுவதே உரைப்பொழிவு என்று திட்டவட்டமாக நம்பிய ஒரு பெண்மணி மேடையில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தார். அவையினருக்கு, அது உளறல் என உரைக்கத் தொடங்குவதற்கு முன்னரே முன்வரிசையிலிருந்து பெரியவர் ஒருவர் எழுந்து “பிடி பிடி”என்று பிடிக்கத் தொடங்கிவிட்டார். உள்ளூர்க்காரர்களில் பலருக்கும் அவரைத் தெரிந்திருந்தது.பேசிய பெண்மணி வெளியூர்க்காரர்.வெலவெலத்துப் போய்விட்டார். அந்தப் பெரியவரின் பெயர் அம்மையப்பா.அவருக்குத் தரப்பட்டிருந்த பட்டம், “ஆண்மையரசு”. ஆண்மையரசு என்றால் ஏதோ சித்த வைத்திய சமாச்சாரம் என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது. ...
மரங்கள் – சில குறிப்புகள்
எழுதப் படாத என் கவிதையை ரசித்து தூரத்து மரங்கள் தலையசைத்தன. தட்டுப்படாத பிரம்பின் அசைவுக்குக் கட்டுப்படுகிற குழந்தைகள் போல ஒரே சீராகக் கிளைகள அசைந்தன. பசிய மரங்களின் பேச்சுக் குரலாய் சலசலத்தன தளிர்களும் இலைகளும். நொடிக்கொரு தடவை நிமிர்வதும் வளைவதும் அடிமண்ணுக்குள்ஆழப்பதிவதும் செடியாய் இருக்கும் வரைக்கும்மட்டுமே. வேர்கள் பரப்பிய மரங்களுக்கிங்கே வேலைகள் பெரிதாய் எதுவுமில்லை. நிழலுக்கொதுங்கி நிற்பவர் மீது அக்கறை அலட்சியம் இரண்டுமில்லை. போதி மரங்களை, புளிய மரங்களை, வேப்ப மரங்களை, அரச மரங்களை, மனிதர்களெல்லாம் ...
எதிர்ப்பார்ப்பு
கப்பல் வருகிற திசையைப் பார்த்துக் கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம். வெளிச்சக் கூக்குரல் வீசி வீசித் திரை கடல் முழுவதும் தேடிப் பார்க்கும். தொலைந்துபோன பிள்ளையைத் தேடும் தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும். நிதான கதியில் நகர்ந்து வருகிற கப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும். “இதோ பார்! இதோ பார்” என்கிற தவிப்பு கடலலை இரைச்சலில் கேட்டதோ? இல்லையோ? நிலத்தில் ஊன்றி நிற்கிற போதும் நிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும். கண்டு கொள்ளாமல் கப்பல் நகரும். ...
மழை மனசு
அருவிகள் நடந்த வழித்தடமிருக்கும் மலையின் மீது தழும்புகள் போல. கரும்பாறைகளில் கசிவின் தடயங்கள் இராணுவ வீரனின் கண்ணீர் போல. மெல்லிய கீற்றாய் பறவையின் பாடல் நேற்றைய கனவின் நிழலைப்போல. மெளனப் பூக்கள் மலர்கிற உச்சியில் கனல்கிற அமைதி கடவுளைப் போல. வெளிப்படாத செளந்தர்யம் இன்னும் கருவிலிருக்கும் குழந்தையைப் போல். துளையிடப்பாடாத புல்லாங்குழலில் தூங்குகின்ற இசையைப் போல. இத்தனை அழகிலும் இழையுதென் இதயம் மலைமேல் பெய்கிற மழையைப்போல ...
எனது கவிதைகள்!
நெற்றியில் துளிர்க்கும் வியர்வைத் துளிகளை ஒற்றியெடுக்கிற கைக்குட்டைகளாய் வேற்று முகமின்றி… எதிர்ப்படும் எவரையும் பற்றிக்க கொள்கிற பிஞ்சுவிரல்களாய் உயிரில் உறைந்த உண்மைகளெல்லாம் உருகி வழிந்ததில் பெருகும் வெள்ளமாய் பரிவு வறண்ட பாலைவனத்திடைப் பயணம் மேற்கொள்ளும் பிள்ளையின் தாகமாய்… எனது கவிதைகள்! கரைகளைக் கடந்து, கனிவின் பரப்பில் நடையிடத் துடிக்கும் நதியின் புலம்பலாய் குமுறும் அன்பை, கமண்டலத்துக்குள் அடக்க நேர்கிற அகத்திய அவஸ்தையாய், அலைகள் தினமும் அறைந்து போனதில் கரைந்து கிடக்கிற கடற்கரை மணலாய் கல்லடிபட்ட ...
ஈகை
உன்… தோள்பை நிறையத் தங்கக்காசுகள். ஈதலுக்கானதோர் கர்வமில்லாமல் விரல்களை இழுத்து வலியப் பிரித்து எல்லார் கையிலும் திணித்துப் போகிறாய். கொடுப்பது உனக்குக் கடமை போலவும் வாங்கிக் கொளபவர் வள்ளல்கள் போலவும் பணிவும் பரிவும் பொங்கப் பொங்கத் தங்கக் காசுகள் தந்துகொண்டிருக்கிறாய். திகைத்து நிற்பவர் கண்களிலிருந்து தெறிக்கிற மின்னல்கள் ரசித்தபடியே பொன்மழை பொழியும் மேகமாய் நகர்கிறாய். கைகள் வழியக் காசு கொடுக்கையில் ஒன்றோ இரண்டோ தவறி விழுந்தால் பதறி எடுத்துக் தூசு துடைத்து வணங்கிக் கொடுத்து வருந்தி நிற்கிறாய். ...