கோலமயில் அபிராமியே
ஊர்கொடுத்த வரிகளை உதடுகளில் தாங்கியே உலகத்தைச் சுற்றி வந்தேன் உரங்கொடுத்த உணர்வினை வரங்கொடுத்த பலரையும் உள்ளத்தில் ஏற்றி நின்றேன் பேர்கொடுக்கும் பண்புகள் பிறர்தந்த பரிசோநீ பிறவியில் தந்த கொடையோ பழக்கத்தில் வந்தவர் நெருக்கத்தில் இணைந்திடும் பெற்றிமை உந்தனருளோ நார்தொடுக்கும் பூக்களாய் நான்கற்ற தமிழினை நல்கினேன் வேறொன்றில்லை நாவிலும் தாளிலும் நடமாடும் தமிழன்றி நானொன்றும் செய்ததில்லை யார்கொடுத்த புண்ணியம் என்பதை அறிகிலேன் யானென்று ஆடமாட்டேன் யாதிலும் நிறைகின்ற மாதவச் செல்வியே எழிலரசி அபிராமியே தீண்டாத வீணையில் தீராத ஸ்வரங்களாய் தொடர்கின்ற ...
2010 கண்ணதாசன் விருதுகள்
கோவை கண்ணதாசன் கழகம் வழங்கும் கண்ணதாசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.50,000 ரொக்கப் பரிசும் பட்டயமும் கொண்ட இந்த விருதுகள் கடந்த ஆண்டு, திரு.நாஞ்சில் நாடன் அவர்களுக்கும், பாடகர் அமரர் டி,ஆர்.மகாலிங்கம் அவர்களின் புதல்வியும் பாடகியுமான திருமதி டி.ஆர்.எம்.சாவித்திரி அவர்களுக்கு வழங்கப்பட்டது. 2010 ம் ஆண்டுக்கான விருதுகள் கவிஞர் கல்யாண்ஜி அவர்களுக்கும், அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் புதல்வர் டாக்டர். சீர்காழி சிவசிதம்பரம் அவர்களுக்கும் வழங்கப்படுகிறது. இது அமரர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் பவள விழா ஆண்டு என்பது குறிப்பிடத் தக்கது. கவியரசு ...
கவிஞர்கள் திருநாள் விருது -2010
கவிஞர் வைரமுத்து அவர்களை நிறுவனர் தலைவராகக் கொண்ட வெற்றித் தமிழர் பேரவை நடத்தும் கவிஞர்கள் திருநாள் ஜூலை 13 காலை 10.00 மணியளவில் சென்னை டிரஸ்ட்புரம் பொன்மணி மாளிகையில் நிகழ்கிறது. 2010 ஆம் ஆண்டுக்கான கவிஞர்கள் திருநாள் விருது, முதுபெரும் பாடலாசிரியர் பூவை செங்குட்டுவன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. கவியரசு கண்ணதாசன் அவர்களின் பரிந்துரையால் கந்தன் கருணை திரைப்படத்தில் வாய்ப்புப் பெற்று,”திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலையில் எதிரொலிக்கும்” என்ற பாடல் மூலம் அறிமுகமானவர் திரு. பூவை ...
அந்தியின் சிரிப்பு
அந்தியிருளால் கருகும் உலகு கண்டேன் அவ்வாறே வான்கண்டேன் திசைகள் கண்டேன் என்றார் பாவேந்தர். படரும் இருளில் உலகு கருகுகிறது என்ற கற்பனை பற்றி இரவுலாவிகள் என்ன நினைக்கிறார்களோ தெரியவில்லை. கையில் ஒரு பழைய தாளை வைத்துக் கொண்டு, எரியும் மெழுகுவர்த்தியில் உரசினால்பரபர வென்று தீ பரவும்போதே தாள்கள் கரியாகி உதிரும். பெற்றோரோ மற்றோரோ எரித்த காதல் கடிதங்களை தண்ணீரில் கரைத்து விழுங்கி சரித்திரம் படைத்த காதலர்களை மரோசரித்ராவில் பார்த்திருக்கிறோம். காகிதம் கருகுகிற வேகத்தில் எங்கும் இருள் படர்ந்த ...
முன்னே பின்னே இருக்கும்
தமிழில் சில சொற்கள் மேம்போக்காகக் கையாளப்பட்டாலும் அடிப்படையில் அவற்றுக்கு வேறுபொருள் இருக்கும்.கன்னா பின்னா என்றொரு பிரயோகம் உண்டு. கன்னன் என்பது கர்ணனைக் குறிக்கும் சொல். பின்னா என்பது, அவனுக்குப் பின்னால் பிறந்தவனாகிய தருமனைக் குறிக்கும்.. ஒருவரை கர்ணமகராசா, தருமமகராசா என்றெல்லாம் புகழ்வதுதான் கன்னா பின்னா என்று புகழ்வது. (உடனே உங்களுக்கு ஏதேனும் கவியரங்குகள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை). கர்ணன் தன் அண்ணன் என்று தெரியாமலேயே தருமன் கடைசிவரை எதிர்க்கிறான். தருமன் தன் தம்பி என்று தெரிந்தும் கர்ணன் போர்க்களத்தில் எதிர்த்து நிற்கிறான் தருமன் ...
தமிழ் செம்மொழி மாநாடு கவியரங்க கவிதை – 25.06.10
தமிழ்ச்செம்மொழி மாநாட்டில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தலைமையில் நிகழ்ந்த கவியரங்கில் வாசித்த கவிதை.அவையின் அப்போதைய கலகலப்புக்காக வாசித்த சில வரிகள் நீங்கலாய் மற்றவைஇங்கே இடம் பெறுகின்றன… பொதுத்தலைப்பு: கிளம்பிற்று காண் தமிழச் சிங்கக் கூட்டம் கிளைத்தலைப்பு: அடையாளம் மீட்க கலைஞருக்கு மூவேந்தர் இங்கிருந்தார்; முத்தமிழை வளர்த்திருந்தார் தார்வேந்தர் அவர்கள் பணி தாயகத்தைத் தாண்டவில்லை பாரிலுள்ள தமிழர்களை – ஒரு பந்தலின் கீழ் கூட்டுவித்து ஓர்வேந்தர் செம்மொழியின் உயர்வுகளை முரசறைந்தார் – அந்தச் சீர்வேந்தர் கலைஞரென்று சாற்றிநிற்கும் வரலாறு கூடும் ...