இப்படித்தான் ஆரம்பம் – இன்னும் சில குறிப்புகள்
“அவனைப் பற்றியே ஆயிரம் கவிதைகள் எழுதி எழுதிநான் எழுத்தை நேசித்தேன்” என்று நேருவைப்பற்றிச் சொன்னார் கவிஞர். அவரை வாசித்து வாசித்தே தமிழின் பக்கம் வந்தேன். கவிஞரின் தனிக்கவிதைகள் வழியே அவரின் திரைப்பாடல்களுக்குள் பிரக்ஞையுடன் புகுந்தேன். அவரின் படைப்புலகுக்குள் புகுந்து பார்க்க இந்தக் கட்டுரைகள் ஒரு கைவிளக்காய் இருக்கலாம். ஆனால் உள்ளே போகிற நீங்கள் நான் காணாதவற்றையும் காண்பீர்கள். காட்டுவிப்பீர்கள். இந்தக் கட்டுரைகளில் கவிஞரின் உரைநடைக்குள் நான் செல்லவேயில்லை. அவரின் பயணங்களையும் மன ஓட்டங்களையும் கவிதைகள் மற்றும் பாடல்கள் வழியாகவே கண்டறியும் முயற்சி இது. அவர் எழுதிய பாடல்கள் சிலவற்றைக் கேட்கும்போது அவர் எழுதிக் கொடுத்த முறையை மாற்றி ஒலிப்பதிவு செய்திருந்தால் கூட அவரின் வரிகள் அவரைக் காட்டிக் ...
இப்படித்தான் ஆரம்பம் – 36
கவிஞரின் தேடல் உள்முகமாகக் குவியத் தொடங்கிய காலகட்டம் அவருடைய வாழ்வின் நிறைவு நிலையில் நிகழ்ந்தது. வாழ்வெனும் மாயப்பெருங்கனவை விலக்கி உதறி விழித்தெழுந்த நிலையில் அவருடைய மனப்பான்மை மலர்ந்தது . இமயம் வரைக்கும் என்பெயர் தெரியும் குமரிக் கடலென் குணம்சொல்லி ஆடும் அமெரிக்க வானம் என் அருமையைப் பாடும்.. ஆயினும் என்ன நண்பர்களே அமைதியைத் தேடி அலைகின்றேன் என்று அவர் சொன்னாலும்,தன்னையே தேடுகிற தவிப்பின் ஆரம்ப அடையாளங்களே அந்த அமைதியின்மை. அவருக்குள் இருந்த அபூர்வமான சக்தியைக் குறித்து நாம் ...
இப்படித்தான் ஆரம்பம்-35
கண்ணதாசன் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருகிற மற்றோர் அம்சம், புலனின்பம். வாழ்வின் சுகங்களை நிதானமாய் ரசித்து அந்த அனுபவங்களை இலக்கியமாய்ப் படைத்தவர் கண்ணதாசன்.அவசரத்துக்கு கள், ஆவேசத்திற்கு பெண் என்ற வகையைச் சேர்ந்தவரல்ல அவர். காதலிலும் போதையிலும் அவர் ஈடுபட்ட விதமே அலாதியானது.வானில் முழுநிலவு ஒளிவீச, அதன் ஒளிக்கீற்று விழுகிற முற்றத்தில் மஞ்சம் விரித்து, பண்ணிசை ஒலிக்க. பெண்ணொருத்தி பரதம் ஆட கையில் கிண்ணமேந்தி நிற்கிற பொழுது பொங்குகிற எண்ணங்கள் அவரை ஆனந்த உலகுக்கே அழைத்திச் செல்கின்றன. “வெண்ணிலா ...
இப்படித்தான் ஆரம்பம் – 34
இந்தியாவின் இணையற்ற பெருமைகளைப் பட்டியல் போடும் பாரதி, தத்துவக் கோட்பாடுகளின் தூல வடிவமாக வாழ்ந்தவர்களையே பட்டியலில் சேர்க்கிறான். மானுட தத்துவத்தைக் கலையாக்கிய கம்பன், கலைநேர்த்தி என்னும் தத்துவத்திற்கு சான்றான காளிதாசன், என்ற வரிசையில் வேதாந்த தத்துவத்தின் வடிவாய் வாழ்ந்த ஆதிசங்கரரை குறிப்பிடுகிறான் பாரதி. கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததும் காளிதாசன் கவிதை புனைந்ததும் உம்பர் வானத்துக் கோளையும் மீனையும் ஓர்ந்தளந்ததோர் பாஸ்கரன் மாட்சியும் நம்பரும் திறலோடொரு பாணினி ஞாலம் மீதினில் இலக்கணம் கண்டதும் இம்பர் வாழ்வினிறுதிகண்டு உண்மையின் ...
இப்படித்தான் ஆரம்பம்-33
அர்த்தமுள்ள இந்துமதம் எழுதினாலும் கவிஞர் சமய உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர் என்பதற்குப் பல சான்றுகள் உண்டு.திருக்குரானை தமிழில் மொழிபெயர்க்க அவர் முற்பட்டார். அது குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்ததும் அப்பணியை நிறுத்திக் கொண்டதோடு இசுலாமிய சகோதரர்களுக்கு வருத்தம் தெரிவித்து நாளிதழ்களில் விளம்பரம் வெளியிட்டார். எனினும் இஸ்லாம் தமிழில் எனும் பிளாக் கவிஞர் மொழிபெயர்த்த முதல்பகுதியை வெளியிட்டு மகிழ்ந்துள்ளது. திறப்பு எல்லையிலா அருளாளன்இணையில்லா அன்புடையோன் அல்லாஹ்வைத் துணைகொண்டுஆரம்பம் செய்கின்றேன். * * * உலகமெலாம் காக்கின்றஉயர்தலைவன் அல்லாவே தோன்றுபுகழ் அனைத்திற்கும்சொந்தமென ...
இப்படித்தான் ஆரம்பம்-32
கவிஞர் எழுதத் தொடங்கி இருபத்தைந்தாண்டுகள் ஆனபோது தெய்வ வணக்கத்துடனும் தன்னடக்கத்துடனும் ஒரு கவிதை எழுதினார் அவர். அதிலொரு பிரகடனமும் செய்தார். இருபத்தைந்தாண்டுகள் எழுதினேன் என்பதால் என்னையான் போற்றவில்லை இன்னுமோர் காவியம் எண்ணுவேன் எழுதுவேன் இலக்கியம் தூங்கவில்லை என்றார். ஆனாலும் தொடக்க காலந்தொட்டே சில குறுங்காவிய முயற்சிகளைக் கவிஞர் மேற்கொண்டுள்ளார்.அவற்றுள் குறிப்பிடத்தக்கவை, மாங்கனி மற்றும் ஆட்டனத்தி ஆதிமந்தி. இவற்றில் முன்னே பழுத்தது மாங்கனி. கல்லக்குடி வழக்கில் தண்டிக்கப்பட்டு 1954 ல் சிறையிலிருந்த போது ஆறு நாட்களில் இதை எழுதினாராம் கவிஞர். சிறையிலிருக்கும் போது கடிதம் கட்டுரை காவியம் என்று பலவும் எழுதும் பழக்கம் தலைவர்களால் தொடங்கிவைக்கப்பட்டதுதானே. ...