Blog

/Blog

இப்படித்தான் ஆரம்பம் – 12

ஒருபுறம் உலக இன்பங்களைத் துய்ப்பதில் கண்ணதாசன் காட்டிய ஈடுபாடும், மறுபுறம் கண்ணனில் மூழ்கித் திளைத்த மனப்போக்கும், வாழ்க்கை அனுபவங்களை சாட்சிபூர்வமாகப் பார்க்கும் சமநிலையை அவரிடம் ஏற்படுத்தியிருந்தது. கண்ணனின் வாழ்வில் நடந்ததாக சொல்லப்படும் சில சம்பவங்களின் ஊடே புகுந்து நிகழ்காலம் குறித்த சில சுவையான பிரகடனங்களைக் கவிஞர் வெளிப்படுத்துவார். இலக்கண பாஷையில் இதைத் தற்குறிப்பேற்றம் என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம்.ஆனால் அதையும் தாண்டிய அபூர்வமான தொடுகை ஒன்றில் அவர் கவித்துவமாய் சில மாயங்களைச் செய்வார். தண்ணீர்ப்பாம்பில் ஏன் விஷமில்லை என்பதற்குஅவர் ...

இப்படித்தான் ஆரம்பம்-11

கண்ணன் மீதான கண்ணதாசனின் ஈடுபாடு,அவருடைய புனைபெயருக்கும் பிந்தியது. பத்திரிகை ஒன்றில் வேலை தேடிப்போன போது,”என்ன புனைபெயரில் எழுதி வருகிறீர்கள்?”என்று பத்திரிகை ஆசிரியர் கேட்டாராம்.கம்பதாசன்,வாணிதாசன் போன்ற பெயர்கள் அப்போது பிரபலமாக இருந்ததால்,சிறிது யோசித்துவிட்டு “கண்ணதாசன்”என்று சொல்லிவிட்டாராம்.பத்திரிகை ஆசிரியர் “ஆமாம் !பார்த்திருக்கிறேன்”என்று வேறு சொன்னாராம்.   அந்தக் காலங்களில் கண்ணதாசனுக்குக் கண்ணன் மீது பெரிய பக்தி இருந்ததில்லை. காலப்போக்கில் கிருஷ்ணபக்தராகவே கனிந்தார் கண்ணதாசன்.தன்னிடம் வாக்களித்துவிட்டு வேறொருவருக்கு வாடகைக்கு விட்ட ஸ்டூடியோ அதிபரிடம் ‘உன் ஸ்டூடியோ தீப்பிடித்து சாம்பலாகப் போகும்’என்று சாபமிட்டு கண்ணதாசன் வீடு திரும்பினாராம். வீட்டுக்குள் வந்ததுமே,மின்கசிவினால் அந்த ஸ்டூடியோ தீப்பிடித்ததாகத் தொலைபேசியில் செய்தி வந்ததாம் “கண்ணனை நினைத்தால் சொன்னது பலிக்கும்”என்று கவிஞர் எழுதிய ...

இப்படித்தான் ஆரம்பம்-10

மாநிலந் தழுவிய இயக்கமொன்று கண்ணதாசன் பெயரில் உருவாக வேண்டுமென்று கனவு கண்டவர்களில்  முக்கியமானவர்,மதுரையைச் சேர்ந்த திரு.இரா.சொக்கலிங்கம்.”மனிதத் தேனீ'”என்பது இவருக்குத் தரப்பட்ட பட்டப்பெயர்.மிகவும் சுறுசுறுப்பானவர்.மதுரை கண்ணதாசன் நற்பணி மன்றத் தலைவர்.1994 என்று ஞாபகம்.திரு.தமிழருவி மணியனின் “கம்பன் காட்டும் இந்திரசித்தன்” நூல் வெளியீட்டு விழா முடிந்து இரவு பத்து மணியளவில் இதற்கான ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது.பீளமேடு பேரவை நண்பர்கள் வந்திருந்தார்கள். கண்ணதாசனை மையமாகக் கொண்டு தொடங்கப்படுவது,நிச்சயம் இலக்கிய அமைப்பாகத்தான் இருக்க முடியும்.சமூக மாற்றங்களை முன்னெடுக்கும் அமைப்பாகவோ,அரசியல் அமைப்பாகவோ உருவாக வாய்ப்பில்லை.கம்பன் ...

இப்படித்தான் ஆரம்பம் -9

கடைக்கோடி மனிதனின்மனசு வரைக்கும் கண்ணதாசன் ஊடுருவியிருப்பதுபோல் இன்னொரு கவிஞர் ஊடுருவியிருப்பாராஎன்பது சந்தேகமே.கண்ணதாசனின் இந்த வெற்றிக்கு என்ன காரணம் என்று பலமுறை யோசித்திருக்கிறேன். மனித சமூகத்திற்கு எப்போதுமே இரண்டுபேர் தேவை.ஓர் உல்லாசி.ஓர் உபதேசி.தமிழ்ச்சூழலில் இந்த இரண்டுமாக இருந்தவர் கண்ணதாசன்.மிதமிஞ்சிய உல்லாசங்களே உபதேசங்களை உருவாக்குமல்லவா? இன்றும் சமூகம் வாழ்வைத் துய்ப்பவனை வியப்போடு பார்க்கிறது.வாழ்க்கை என்றால் என்னவென்று விளக்குபவனை மதிப்போடு பார்க்கிறது. வியப்போடும் மதிப்போடும் கண்ணதாசனை ஆராதித்த பீளமேடு கவியரசு கண்ணதாசன் கலை இலக்கியப் பேரவை நண்பர்கள் கண்ணதாசனைப் போலவே வெள்ளந்தி ...

இப்படித்தான் ஆரம்பம்-8

“ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் ஏதோவொரு தருணத்தில் என்னுடைய பாடல் எதிரொலிக்கும்”என்றார் கவியரசு கண்ணதாசன்.தன் வாழ்வின் எல்லாத்தருணங்களிலும் கண்ணதாசனின் பாடல் ஒலிப்பதாய் உணர்ந்த பலரை நான் பார்த்திருக்கிறேன். இலக்கிய அமைப்புகள் சார்பாகக் கண்ணதாசன் விழாக்கள் நடத்துவதில் ஆரம்பித்து,சசி போன்ற நிறுவனங்கள் துணையுடன் நடத்திய கண்ணதாசன் விழாக்கள்,மற்றும் உலகின் பல நாடுகளில் கண்ணதாசனைப் பற்றிப் பேசிய அனுபவங்கள்,அனைத்துமே எனக்கோர் உண்மையை உணர்த்தின. தமிழ்மக்கள்,தங்கள் அந்தரங்கத்தில் நுழைந்த கவிஞராகக் கண்ணதாசனைக் கான்கிறார்கள். தங்கள் தனிவாழ்வின் அனுபவங்களை,வளமான தமிழால் பாடிய கவிஞராக மட்டுமின்றி,வாழ்வு ...

இப்படித்தான் ஆரம்பம்-7

பீளமேடு, தொழிலாளர்கள் நிறைந்த பகுதி.கண்ணதாசன் பேரவையிலிருந்த பலரும் தொழிலாளர்களே.அவர்கள் வாழ்க்கைமுறை எனக்குப் பரிச்சயமில்லாத ஒன்று.ஹாஃப் நைட்,ஃபுல் நைட் என்றெல்லாம் பலதும் சொல்வார்கள்.சிங்கை முத்து,பேரவைக்காக அறை ஒன்றைக் கொடுத்திருந்தார்.அதுவரை பைந்தமிழ் அச்சகத்தில்தான் பேரவை நண்பர்கள் கூடுவார்கள்.நான் வாரம் ஒருமுறையாவது அங்கே செல்வதுண்டு. காலையில் மில்லுக்குப் போகும்முன் காளிதாஸ் சைக்கிளை உருட்டிக் கொண்டே பேரவைக்கு வருவார்.அவர் வருகிற போது பேரவை நண்பர்கள் யாரும் இல்லாவிட்டால் பிரச்சினையில்லை”பொட்டாட்டம்” மில்லுக்குப் போவார்.பேரவை உறுப்பினர் ஒருவரைப்பார்த்தாலும் காளிதாசுக்குள் கண்ணதாசன் இறங்கி விடுவார்.கோட்டையை விட்டு வேட்டைக்குப் ...
More...More...More...More...