Blog

/Blog

28. அது வேறு…… இது வேறு!

இப்படி சில விஷயங்களைப் பிரித்துப் பார்ப்பவரா நீங்கள்? இருங்கள் – கொஞ்சம் பேசலாம். உங்களை யாராவது புதியவருக்கு அறிமுகம் செய்கிறபோது என்னென்ன விவரங்கள் சொல்கிறார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இன்னாரின் வாரிசு! இன்னாரின் வாழ்க்கை துணைவர்! இன்ன வேலை செய்கிறார்! இந்த விவரங்களில் உங்கள் தனி வாழ்க்கை பொது வாழ்க்கை – இரண்டுமே அடக்கம். தனிப்பட்ட விஷயங்களில் கூடுதல் கவனமும், வேலை விஷயங்களில் குறைவான கவனமும் செலுத்தும் சிலரை அணுகிக் காரணம் கேட்டால், அவர்கள் சொல்கிற பதில் – ...

27. இன்னொரு தடவை சொல்லுங்க!

நீங்கள் எதையாவது சொல்லி, யாராவது இப்படிக் கேட்டார்கள் என்றால், நீங்கள் உங்களைக் கொஞ்சம் கவனிக்க வேண்டும் என்று அர்த்தம். வேறொன்றுமில்லை. “என்ன சொன்னீங்க” என்று யாரும் கேட்டால், நீங்கள் சொன்ன விஷயம் தெளிவாகப் புரியவில்லை என்பது தெளிவாகிறது. சொல்ல விரும்பியதை சரியாகவும் சரளமாகவும் சொல்லத் தெரிந்தால்தான் வெற்றிக்கான வாசல் திறக்கும். பதற்றத்தின் காரணமாக வேகமாகவும் தெளிவின்றியும் நீங்கள் வார்த்தைகளை உச்சரிப்பதால் இந்த சிரமம் ஏற்படலாம். அல்லது, மனதில் இருப்பதை மற்றவர்கள் புரிந்து கொள்ளும் விதமாய் சொல்ல முடியாவிட்டாலும் ...

26. வேலை இழக்க நேர்கிறதா?

உலகெங்கும், பொருளாதாரப் பின்னடைவின் விளைவாக பலருக்கும் வேலை வாய்ப்பு பறி போகிறது. குறிப்பாக, தனியார் நிறுவனங்களில் இந்தநிலை பெருமளவில் இருக்கிறது. ஆட்குறைப்பு, நிறுவனத்தின் உற்பத்தியோ, தொழிலோ குறைவதால் ஏற்படுகிறது. இதற்குப் பெரிய அளவில் தீர்வுகள் எதுவும் தென்படவில்லை. அலுவலர் அல்லது ஊழியரின் செயல்திறன் நன்றாகவே இருந்தாலும், தொழில்சூழல் சரியாக இல்லாத போது வேலையை விட்டு விலக்குவது தவிர்க்க முடியாத ஒன்றாகவே ஆகிவிட்ட சூழலில், வேலையை இழக்க நேரும் தனிமனிதர்கள் இந்தச் சூழலை எப்படியெல்லாம் எதிர்கொள்ளலாம்? யாருக்காவது வேலை ...

25. தள்ளிப் போடாமல் இருப்பது எப்படி?

இந்தக் கேள்வியை யாரிடமாவது கேட்டு பதில் பெறலாம் என்று பரபரப்பாக இருக்கிறதா? பொறுங்கள் – கொஞ்சம் தள்ளிப் போடுங்கள்!! என்ன – முதலுக்கே மோசமாக இருக்கிறதா? யாரையாவது கேட்பதற்கு முன்னால் உங்களையே சில கேள்விகள் கேட்டுக் கொள்ளுங்கள். 1. வேறு முக்கியமான வேலை வந்தததால் எடுத்த வேலையைத் தள்ளிப் போடுகிறீர்களா? இல்லை சோம்பல் காரணமாகத் தள்ளிப் போடுகிறீர்களா? 2. நேரத்தை வீணடிப்பதென்பது நம்மையும் அறியாமல் நிகழக்கூடிய விஷயம்தான். ஒரு நாளில் எந்த நேரத்தை எப்படி வீணடித்தீர்கள் என்பதை தினமும் டயரியில் ...

24. எதிர்வரும் நாளை எதிர்கொள்ளத் தயாரா…?

ஒவ்வொரு நாளிலும் ஏதோவொரு சுவாரசியம் இருக்கத்தான் செய்கிறது. வாழ்வின் ஒவ்வோர் அங்குலமும் அர்த்தத்தாலும் அழகாலும் அபூர்வமான நிகழ்வுகளாலும் நிரம்பியிருக்கிறது. சாதாரண நாள் என்று ஒன்று அந்த உலகம் தோன்றிய நாள் தொட்டு உதிக்கவேயில்லை. நம்மில் இருக்கும் உணர்வும் உற்சாகமும் திட்டமிடுதலும், செயல்படுத்துதலும்தான் ஒரு நாளில் நாம் என்னபெறுகிறோம் என்பதைத் தீர்மானிக்கிறது. ஒவ்வொரு நாளையும் எதிர் கொள்ள அதற்கு முதல் நாளே நாம் தயாராக வேண்டும். இதில் மிக முக்கியம், ஒரு நாளோடு நம்மை எப்படித் தொடர்பு படுத்திக் ...

23. உங்கள் குழந்தைகளும் சாதிப்பார்கள்! – 2

சின்னக் குழந்தைகளை மட்டுமின்றி பதின் பருவத்துக்கு முன்னும் பின்னும் இருக்கும். குழந்தைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதில் தங்களை பெரியவர்கள் எப்படி எடைபோடுகிறார்கள் என்பது வெளிப்படுகிறது. குழந்தைகளிடம் இயல்பாக, இனிமையாக நீங்கள் விருந்தினர்கள் முன்னிலையில் நடந்து கொண்டால் விருந்தினர்களும் அதுபோல் நடந்து கொள்வார்கள். வீட்டுக்கு வருபவர்கள் பலரும், ஏதோ விசாரணைக் கமிஷன் நீதிபதிகள் போல் குழந்தைகளிடம் பரீட்சை பற்றியும் மதிப்பெண் பற்றியும் மட்டுமே கேட்பார்கள். இவை தவிர குழந்தைகளின் உலகத்தில் எத்தனையோ, விஷயங்கள் இருக்கின்றன. எனவே குழந்தைகளை ...
More...More...More...More...