5. உள்ளே ஒரு குழந்தை!
ஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறது ஒரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட்டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கிய பிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை. தனக்குள் இருக்கும் குழந்தையை விழிப்பு நிலையிலும் வைத்திருப்பவர்கள் ஞானிகளும் கவிஞர்களும். அதனால்தான் ஞானிகளை “சேய்போல் இருப்பர் கண்டீர்” என்று பழம்பாடல் ஒன்று பேசுகிறது. கவிஞர்களின் குழந்தை மனதுக்கு நடைமுறை உதாரணங்கள் நிறைய உண்டு. குழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம் என்பதை ...
4. வெற்றிக்கு ஒரே வழி!
சிலரைப் பொறுத்தவரை, வெற்றியென்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கின்ற கொடை. ஜாதகம் செய்கின்ற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப்போவதில்லை. காலமும் இடமும் கருதிச் செய்வது வெற்றிக்கு வழியென்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால், காலம் வருமென்று வெறுமனே காத்திருப்பவர்கள் வாழ்வில், புதுமைகள் பூப்பதில்லை. வெற்றியாளர்களின் வரலாற்றிலெல்லாம் ஓர் ஒற்றுமையை உணரமுடியும். சாதிப்பதற்கு சம்பந்தமேயில்லாத சூழலில் பிறந்து வளர்ந்து, சாதனையை சாத்தியமாக்கிக் கொண்டவர்கள்தான் அனைவரும். விரட்டும் வறுமை, மிரட்டும் வாழ்க்கைச் சூழல், ...
3. தலைவனைத் தேடு… உனக்குள்ளே!
இளமைக்காலத் தேடல்களில் ஒன்று, தலைமைக்கான தேடல். தன்னை வழி நடத்த இன்னொருவர் வேண்டுமென எண்ணும் பருவம் இது. நடிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள் வரை, பலராலும் ஈர்க்கப்படும் காலமிது. தலைவர்களைத் தேடுவதும் அவர்கள் பாதையினைப் பின்பற்றுவதும் தவறில்லை. ஆனால், தான் பின்பற்றும் தலைவர் தரமானவர்தானா என்பதை ஆராய்ந்து பார்க்கும் அவசியம் அனைவர்க்கும் உண்டு. தன்னல மறுப்பு, பொதுவாழ்வில் பிடிப்பு, வந்து சேரும் தொண்டர்களுக்கு உரிய வழியை உணர்த்தும் முனைப்பு, இலக்கு நோக்கிய கவனக்குவிப்பு, இத்தனை தகுதிகளையும் சேர்ந்த தலைவரைத் ...
2. கனவு சிப்பியைத் திறந்துபார்!
கனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும்முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும். கனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக்கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். “நடக்க முடியுமா?” என்று தவிக்கும் மனிதனுக்கு, “பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பபை கனவுகள். குடிசையில் வாழும் கதாநாயகன், மாளிகையை ஆளும் இளவரசியைக் காதலிப்பான். காதல் கீதம் ...
1. தோள்கள் தொட்டு பேசவா?
எட்டிப்பிடிக்கும் தூரத்தில்தான் எல்லா வசதிகளும். ஆனால், தொட்டுப் பேசும் உரிமையில் பலருக்கும் தோழமை வாய்ப்பதில்லை. தோள் தொட்டுப் பேசுவது உறவுக்கும் உரிமைக்கும் அடையாளம். பரிவுக்கும், நட்புக்கும் அடையாளம். தோழனே! உனது தோள்களைத் தொட்டு நான், வாழைத்தண்டுபோல் வழவழப்பான வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். வாழைத்தண்டு வயிற்றுக்கு நல்லது. இந்த வார்த்தைகளோ உன் வாழ்க்கைக்கு நல்லது. நாம் ஒவ்வொருமே, வாழ்க்கையென்னும் கடலுக்குள்ளே சுழல்கின்ற சூறாவளிகள்தான். நம்மில் சில சூறாவளிகள் கரை கடக்கும் முன்பே வலுவிழக்கின்றன. தடைகளை உடைக்கும் உற்சாகத்தோடு புறப்படும் ...
இருபத்தோராம் நூற்றாண்டில் சேக்கிழார்-35
திருவாரூர் அம்மானை ஒன்றில் இப்படி ஒரு பாடல் உண்டு. “ஈசன் பசுவாகி ஏமன் ஒரு கன்றாகி வீசுபுகழ் ஆருரின் வீதி வந்தார் அம்மானை” என்றொருத்தி பாடுகிறாள். பசுவும் கன்றுமாக வந்தார்கள் என்றால் அந்தப் பசுமாடு. கொஞ்சம்கூட பால் கறக்காதோ என்று இன்னொருத்தி கேள்வி எழுப்புகிறாள். “வீசுபுகழ் ஆரூரின் வீதி வந்தார் ஆமாயின் காசளவு பாலும் கறவாதோ அம்மானை” என்று கேட்கிறாள். உடனே முன்னவள் இந்தப் பசு எப்படிப்பட்ட பசு தெரியுமா-? தன் கன்றுக் குட்டியை காலால் எட்டிஎட்டி ...