Blog

/Blog

நவராத்திரி-8 லக்ஷ்மி தேவி!

செவ்வண்ணக் கமலமென சிவந்திருக்கும் வதனம் ஸ்ரீமாயன் கழல்வருடி சிவந்த கரக் கமலம் எவ்வண்ணம் விழுந்தாலும் ஏற்றிவிடும் அபயம் எம்மன்னை மஹாலக்ஷ்மி எழில்பதங்கள் சரணம்! கருணைக்கே ஊற்றுக்கண் கமலைமலர்க் கண்கள் கவலையெலாம் துடைக்கிற களிநகையோ மின்னல் தரும்கைகள் கனகத்தை தடையின்றிப் பொழியும் தஞ்சமென வந்தவரைத் தாங்கும் அன்னை சரணம்! ஆழியிலே வந்தவளாம் அன்னைமஹா லக்ஷ்மி ஆதிசேடப் பள்ளியிலே ஆளும் வரலக்ஷ்மி பாழ்நிலத்தைத் தழைக்கவைக்கும் பாவைதான்ய லக்ஷ்மி பார்த்துப் பார்த்து தரும் வடிவம் பூணும் அஷ்ட லக்ஷ்மி! சங்கரர்க்குக் கனிகொடுத்த ...

நவராத்திரி-7 ஏடு தரித்திடும் ஏந்திழையாள்!

தோன்றும் கலைகளின் தொடக்கமவள் – அவை துலங்கித் தொடரும் விளக்கமிவள்; சான்றவர் இதயச் சந்நிதியில் – நின்று சகல கலைகளும் ஆளுபவள்! வெண்ணிறக் கமலத்தில் வீற்றிருப்பாள் – அவள் விதம்விதமாய்க் கவி சாற்றிநிற்பாள்; பண்ணிறை வீணையும் மீட்டிநிற்பாள் – அவள் பல்கலை வித்தகம் காட்டிநிற்பாள்! ஏடு தரித்திடும் ஏந்திழையாள் – அவள் எழில்தரும் வெண்ணிறப் பட்டுடையாள்; காடு வனங்களின் பசுமையெல்லாம் – எந்தக் காலமும் வளர்த்திடும் காரிகையாள்! தொன்மை இலக்கியம் இலக்கணங்கள் – அவள் திருவடி நிழலினில் ...

நவராத்திரி-6 தெருக்கோவில் தேவி

வீதியெல்லாம் நின்றிருப்பாள் வேப்பிலைக்காரி-பல விளையாட்டு நடத்துகிற வேடிக்கைக்காரி; ஆதிக்கெல்லாம் ஆதியான அம்பிகையாமே- இவள் அன்னாடங் காச்சிகளின் குடித்தனக்காரி! சாலையோரக் கோவிலெல்லாம் சக்திபீடமே – ஏழை சம்சாரி வந்துவிழும் பக்தி பீடமே! காலையிலே எப்போதோ கோயில் திறக்கும் – எங்க காளியம்மா அதுவரையில் காத்துக் கிடக்கும்! பெட்டிக்கடை திறக்கும் போது போணி செய்கிறாள் – அட பள்ளிபோகும் பிள்ளைக்கெல்லாம் காவல் ஆகிறாள்; எட்டுவீட்டில் நடப்பதையும் எட்டிப் பார்க்கிறாள் – இவள் ஏழைகளின் வட்டிலிலே கஞ்சி வார்க்கிறாள்! வெத்திலைப்பை சுருக்குக்குள்ளே ...

நவராத்திரி – 5 லிங்க பைரவி

சூட்சுமக் காட்சிகள் ஏற்படுத்தும் – அந்த சுந்தரி சேட்டைகள் கொஞ்சமில்லை; ஆட்சி புரிகிற அன்னையின் கோவிலில் ஆனந்தப் பாட்டுக்கு பஞ்சமில்லை! கைகள் பத்திலும் காத்துநிற்கும் எங்கள் காருண்ய நாயகி கண்ணுதலாள் பைரவி லிங்கரூபிணி – எங்களின் பாடுகள் தீர்க்கிற பேரெழிலாள்! யோகினி மாதினி ஏந்திடும் சூலினி ஏழ்புவி காக்கிற நாயகியாள்; மோகினி தவசிவ மாலினி பைரவி மோட்சம் அருளிடும் மாதவத்தாள்! பேசிடும் நாயகி பார்த்ததுண்டோ வந்து பாருங்கள் ஈஷா கோவிலிலே; கூசிடும் கண்களில் கூரிய மின்னலாய் கூத்துகள் ...

நவராத்திரி – 4 எத்திசையும் அபிராமி!

சடசடக்கும் நெய்விளக்கில் சிரிப்பொலி காட்டி – அந்த சரவிளக்கின் அசைவினிலே சிலம்பொலி காட்டி படபடக்கும் மனதினுக்கு பக்குவம் தந்தாள் – எங்கள் பராசக்தி அபிராமி தரிசனம் தந்தாள்! நமசிவாயன் மேனியிலே பாதியை வென்றாள் – எங்கள் நாயகியாள் உமைசிவாயம் ஆகியே நின்றாள் குமுறலெல்லாம் தணிக்கவந்த குளிர்மழை ஆவாள் – எங்கள் கடவூரின் அபிராமி காலங்கள் ஆள்வாள்! பேரழகி நின்ற கோலம் பார்க்கத்தானே கண்கள் – அவள் பெரும்புகழை சொல்லெடுத்துப் பாடத்தானே பண்கள் பூரணியை நாரணியை பாடிப்பாடித் தொழுவோம் ...

நவராத்திரி – 3

வரும்பகை கடிவாள் வாராஹி – தினம் வெற்றிகள் தருவாள் கருமாரி; திருவடி தொழுதிட திரள்பவர் மனங்களின் தயக்கங்கள் துடைப்பாள் ஶ்ரீகாளி! ஆயுதம் ஏந்தும் திருக்கரமும் – நல்ல அபயம் அளித்திடும் மலர்க்கரமும் மாயையை விலக்கும் மூன்றாம் விழியும் மிளிர்ந்திடப் பொலிவாள் மாசக்தி! கண்களின் அசைவில் கலிநகரும் – அவள் கைவளை ஓசையில் கடல்புரளும் எண்ணிய காரியம் எட்டும் வீரியம் எமக்கருள் செய்வாள் மாதேவி! கருவினில் உறக்கம் கொடுப்பாளாம் – அதில் கைகால் முளைத்திட வைப்பாளாம் வருகிற பிறவிகள் ...
More...More...More...More...