Blog

/Blog

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

பொய்மை-பழி-போன்றவற்றினைச் சொல்வதால் ஏற்படும் குற்ற உணர்வோ கூச்சமோ கண்ணனுக்குக் கிடையாது. அது மட்டுமா? “ஆளுக்கு இசைந்தபடி பேசி – தெருவில் அத்தனை பெண்களையும் ஆகாது அடிப்பான்” அத்வைதம்-துவைதம்-வசிஷ்டாத்வைதம் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை வலியுறுத்துவார்கள். அந்த அளவுகோல்களுக்குக் கண்ணன் அகப்படத்தான் செய்கிறான். உடனே “என் கடவுளே கடவுள்” என்று ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் ஆகாமல் போய்விடுகிறது. முற்றிலும் வேறொரு மனோநிலையிலிருந்து கண்ணனை பாரதி பார்த்திருப்பதைக் கண்ணன் பாட்டு நமக்குச் சொல்கிறது. ஆகவேதான் கண்ணன் பாட்டு முழுக்க “அர்ச்சுன ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

“தேனொத்த பண்டங்கள் கொண்டு – என்ன செய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்; மானொத்த பெண்ணடி என்பான் – சற்று மனமகிழும் நேரத்திலே கிள்ளி விடுவான்!” ஒன்று வேண்டும் வேண்டுமென்று மனம் ஏங்குகிறது. ஆனால் அது வேறொருவருக்கும் கிடைக்கிறது. இதை கண்ணனில் லீலையென்று பாரதி பாடுகிறான். அழகுள்ள மலர் கொண்டு வந்தே – என்னை அழ அழச் செய்துபின் “கண்ணை மூடிக் கொள் குழலிலே சூட்டுவேன்” என்பாள் – என்னைக் குருடாக்கி மலரினைத் தோழிக்கு வைப்பான்” இப்படி நீண்டு ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

“தீராத விளையாட்டுப்பிள்ளை” என்கிற பாடலும் அப்படித்தான். உலகைப் படைப்பது, காப்பது, அழிப்பது போன்றவை இறைவனின் அலகிலா விளையாட்டு என்கிறார் கம்பர். “உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும் நிலைபெறுத்தலும், நீக்கலும், நீங்கலா அலகிலா விளையாட்டுடையார், அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்பது கம்பராமாயணப் பாடல். இந்தச் சிந்தனை பாரதியிடம் வரும் போது, “தீராத விளையாட்டுப் பிள்ளை – கண்ணன் தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை” என்று வடிவம் கொள்கிறது. படைத்தல்-காத்தல்-அழித்தல் போன்ற பணிகளை இடையறாமல் செய்யும் ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

கண்ணன் பாட்டு இன்னும் சில குறிப்புகள் பாரதியின் கண்ணன் பாட்டு, அர்ச்சுனனின் மனநிலையிலிருந்து எழுதப்பட்டது. முதல் பாட்டின் போது மட்டும் இந்த அணுகுமுறையை பாரதி கைக்கொள்ளவில்லை. கண்ணன் மேல் அர்ச்சுனனுக்கு நட்பு நிலையில் அரும்பியிருந்த அன்பு, காதலாய், பக்தியாய், பரிவாய், உறவு கொண்டாடும் நேசமாய் முற்றி முதிர்ந்த பல்வேறு நிலைகளின் பதிவுகளே கண்ணன் பாட்டு என்பதை காண முடிகிறது. ‘கண்ணம்மா என் காதலி’ என்று பாரதி பாடுகிற இடமொன்றிலும் இந்தச் சிந்தனை உறுதி பெறுகிறது. ‘இந்த உறவு ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

மாய்மாலக் கண்ணன் கண்ணனின் குணங்களாக அறியப்பட்டவற்றில் முக்கியமானது, அவன் கைக்கொண்ட வழிமுறைகள். பாரத யுத்தத்தில் ஆயுதமெடுக்க மாட்டேனென்று சத்தியம் செய்தவன், ஒரு காலகட்டத்தில் சக்கரத்தை ஏந்துகிறான். நேரிய வழியில் கண்ணன் பகைவர்களை வென்றிருக்கலாமே என்கிற கேள்வியும் ஓஷோவிடம் கேட்கப்படுகிறது. ஆன்மீகத் தெளிவின் உச்சமாகிய கண்ணன், அரசியல் சூழ்ச்சிகளுக்குத் துணைபோனது குறித்து சீடர் எழுப்புகிற சந்தேகத்துக்கு ஓஷோ விடையளிக்கிறார். “ஆன்மீகம் வாழ்வின் அத்தனை அம்சங்களிலும் பிரதிபலிக்கக் கூடிய தன்மை. மதம் அப்படியல்ல. அரசியல், பொருளாதாரம் போல் அதுவும் ஒரு ...

எட்டயபுரமும் ஓஷோபுரமும்

பொதுவாக காதலன் காதலியரிடை சம்பிரதாயமாக சொல்லப்படும் காதல் மொழிகள் இந்த இருவருக்கும் தேவையில்லை என்பதையும் பாரதி தெளிவுபடுத்துகிறான். பாட்டும் சுதியும் ஒன்றாய்க் கலந்தால் ஒன்றையன்று பாராட்டுமா! நிலவு, விண்ணை தனியாகப் பார்த்துப் புகழ் மொழி சொல்லுமா? விறகில் நெருப்பு பற்றும் போது உபசார வார்த்தைகளை உச்சரிக்குமா? என்று கேள்விகளை அடுக்குகிறான் பாரதி. நாட்டினில் பெண்களுக்கு நாயகர் சொல்லும் – சுவை பாட்டும் சுதியும் ஒன்று கலந்திடுங்கால் – தம்முள் பன்னி உபசரணை பேசுவதுண்டோ? நீட்டும் கதிர்களடு நிலவி ...
More...More...More...More...