எட்டயபுரமும் ஓஷோபுரமும்
கண்ணன் பாட்டு விதை விழுந்த விதம் கண்ணன் பாட்டின் கட்டமைப்பைப் பார்க்கிற போது, அவை தனித்தனிப் பாடல்களின் தொகுப்பு போலத் தோன்றும். ஆனால், முதல் பாடல், “கண்ணன் என் தோழன்” என்கிற தலைப்பில், அர்ச்சுனனுடைய குரலில் ஒலிக்கிறது, கண்ணனை பாரதி தோழனாக பாவித்துப் பாடுகிறான் என்று கருத இதில் இடமில்லை. “பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதினைப் புறம் கொண்டு போவதற்கே & இனி என்ன வழியென்று கேட்கில் & உபாயம் இருகணத்தே உரைப்பான்” என்று தொடங்குகிறது கண்ணன் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
மிகச் சரியாக அதே கண்ணோட்டத்தில் பாரதியின் கண்ணன் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு பார்வைகளிலும் இருக்கும் அபூர்வ ஒற்றுமையில் “கண்ணன்” என்ற தத்துவத்தின் மிக நுட்பமான அம்சங்கள் வெளிப்படுகின்றன. தன்னளவில் முற்றிலும் விடுதலையான கண்ணனைப் போல் இந்த மண்ணில், இத்தனை ஆண்டுகளில் இலட்சக்கணக்கானவர்கள் எழுந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நிகழவில்லை. ஏன்-? இதற்கு ஓஷோ ஓர் உவமை சொல்கிறார். ஐம்பது செடிகள் கொண்ட நந்தவனத்தில், ஐம்பதுமே பூத்தால்தான் தோட்டக்காரனின் பராமரிப்பு துணை செய்திருப்பதாக அர்த்தம். ஒன்றிரண்டு வேண்டுமானால் ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
எட்டயபுரமும் ஓஷோபுரமும் பாரதி, கண்ணனைப் பற்றிய தன் பாடல்களுக்கு வைத்த தலைப்பு, “கண்ணன் பாட்டு”. “கண்ணன் பாட்டு” என்கிற தலைப்பு, எவ்வித அதிர்ச்சி மதிப்பையும் ஏற்படுத்தவில்லை நமக்கு. கண்ணன் என்கிற கடவுளைப் பற்றிய துதிப் பாடல்கள் என்று வகைப்படுத்துவதற்கான எல்லா சாத்தியங்களையும் இந்தத் தலைப்பு நமக்குத் தந்துவிடுகிறது, அதே நேரம், அப்படி வகைப்படுத்துவதற்கான அவசியமின்மையும் இந்தத் தலைப்பிலேயே இருக்கிறது, கண்ணனை வெவ்வேறு நிலைகளில் பாரதி அனுபவித்திருந்தாலும், பக்தி மரபு சார்ந்த பார்வையாக “கண்ணன் பாட்டு” கருதப்பட்டுவிட முடியாது. ...
எட்டயபுரமும் ஓஷோபுரமும்
எட்டயபுரமும் ஓஷோபுரமும் ‘கண்ணன்’ என்னும் பெயருக்குப் பொதுத்தன்மை ஏற்பட்டுப் பல காலங்கள் ஆகிவிட்டன. கடவுளின் பெயர் மட்டுமல்ல அது. காதலர்கள் ஒருவரையருவர் அழைத்துக் கொள்கிற பெயர், குழந்தையைக் கூப்பிடுகிற பெயர், நண்பனை விளையாட்டாக அழைக்கிற பெயர், சவால் விடும் நேரங்களில் எதிரிக்கு வைக்கிற செல்லப் பெயர் என்று பட்டியல் நீள்கிறது. கடவுளுக்கு உரியதாய்க் கருதப்படும் வேறெந்தப் பெயரும், இப்படி வெவ்வேறு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டதில்லை. என்ன காரணம்? கண்ணன், குழந்தையாகவும் இருந்திருக்கிறான், காதலனாகவும் இருந்திருக்கிறான், நண்பனாகவும் இருந்திருக்கிறான், எதிரியாகவும் ...
எனது கவிதைகள்!
என்றோ ஒரு நாள்… காற்றில் மிதக்கிற பஞ்சுப் பொதியாய் ஆகிற இதயம் அற்புதம் நிகழ்த்தும். போர்களைத் தடுக்குமென் பாடல்கள் அனைத்தும் பூமி முழுவதும் பூக்களை மலர்த்தும். வார்த்தைகள் கடந்த வெளியினை நோக்கிக் காலம் எனது கவிதையை நகர்த்தும். மூத்து முதிர்ந்து வருகிற மௌனம் மனதிலிருக்கிற காயங்கள் உலர்த்தும். ...
எனது கவிதைகள்!
பசியா? தூக்கமா? சரியாயெதுவும் புரியாதிருக்கிற குழந்தையின் அழுகையாய் மற்ற குயில்கள் மயங்கித் துயில்க¬யில் ஒற்றைக் குயிலின் கீதக் கதறலாய் சூரியக் கதிர்கள் சுட்டதில் கரைந்து புல்லின் வேர்வரை போகிற பனியாய் மழையின் தீண்டலில் மணக்கிற பூமியாய் தன்னைப் பிழிகிற பன்னீர் மலர்களாய் ...