Blog

/Blog

மழைக்கணக்கு

  புலரிபோல் வெளிச்சம் பொய்யாத் தோன்றிய பின்னிராப் போழ்தினில் பெய்தது பேய் மழை. கரிய முகிலின் கனவுகள் கலைந்து தரையில் விழுந்தன தண்ணீர்த் தாரைகள். உறக்கத்திலிருந்து உசுப்பப்பட்ட தாவரங்கள் தலைக்குக் குளித்தன. பறவைக் கூட்டில் பரவச முனகல். தெப்போற்சவத்தில் தெருநாய்க் கூட்டம் & குளிர்ந்த புல்வெளியைக் கற்பனை செய்த கறவைகளுடைய கண்களில் வெளிச்சம் & விரிந்து கிடக்கின்ற மணற்பரப்பிற்கோ விழுகிற மழைத்துளி வாசனைத் திரவியம். பூமி சிலிர்த்த பண்டிகைப் பொழுதில் போர்வைக் கல்லைறையில் புதைந்த மனிதர்கள். மழைக்கணக்கெழுதிய ...

அவதாரம்

  போர்க் களத்திற்குப் போகும்போது கத்தியைப் போலவே கவசமும் முக்கியம். ஒருதுளி கூட இரக்கமில்லாமல் உயிர்கள் குடிக்கும் கத்தியை விடவும், காயம் செய்யும் கொள்கையில்லாமல் குத்துகள் தடுக்கும் கவசமாயிருக்கலாம். மொத்த விலைக்கு உயிர்களை வாங்கும் யுத்தம் எவனின் புத்தியில் வந்தது? போர்க்களம் நடுவில் போதித் தாவது மூர்க்கக் கனலை மூட்டிட வேண்டுமா? கூரிய கத்தியாய் இருப்பதைக் காட்டிலும் இறுகிய கவசமாய் இருக்குமென் கவிதை. கொண்டுவந்திருக்கும் வெள்ளைக் கொடியைக் காற்றில் அசைத்துக் காட்டி நிற்கலாம் குருதித் துளிகள் பட்டுப்பட்டு… ...

வடு

    இழந்த உறவின் ஏக்கத் தழும்புகள் இதயத்துக்குள் இல்லாமலில்லை. எதிர்பாராத நொடிகளில் திடீரென எழுகிற வலியை எழுதுவதெப்படி? வருடிக் கொடுக்கிற விசிறிக் காற்று வந்து கொண்டே இருக்கிற போதும் வீசிப்போன தென்றலின் நினைவு வரும்போதெல்லாம் வருத்தத்தின் புழுக்கம். நேற்றைய உறவின் ஞாபகச் சுவட்டை அலைகள் எதுவும் அழிக்கவேயில்லை. கடற்கரைப் பரப்பாய் விரிந்த மனசில் கடந்த காலத்தின் கிளிஞ்சல் குவியல்கள். காலியாகக் கிடப்பது தெரிந்தும் கைகளில் எடுத்துத் திறக்கும்போது முகத்தில் அறையப்போகும் வெறுமையைத் தாங்கிக் கொள்ளத் தயாராகின்றேன். ...

புத்த பூர்ணிமா – 2

  சத்சங்கத்தின் சரண தியானத்துடன் புத்த பூர்ணிமா பொழுதின் துவக்கம். மூடிய இமைகள் மெதுவாய்த் திறந்ததும் வானக் கவிதையாய் வண்ண வெண்ணிலவு கிழக்கிலிருந்து கிளர்கிற ஞானமாய் தகதகக்கின்ற தங்க அற்புதம்; பூஜ்ய வடிவம், பூரண சூன்யம். நிகழும் அசைவே வெளித்தெரியாமல் நடுவான் நோக்கி நகரும் நளினம். உள்ளளி போல உயர எழும்பும் வெண்ணிலவோடு விழிகளின் பயணம். ஆன்மாவுக்கு சிறகு முளைத்து ஆகாயத்தில் பறப்பதுபோல… நீலவானத்தில் மிதந்து மிதந்து பால்நிலவோடு கலப்பது போல… காலவெளியைக் கடந்து கடந்து மூலக்கனலில் ...

மறுபக்கம்

  ஆகாயத்தின் அடுத்த பக்கம் என்ன நிறமாய் இருக்கக் கூடும்? வானம் பார்க்க வாய்க்கும் போதெலாம் பௌர்ணமிக் கடலாய்ப் பொங்குமிக் கேள்வி. சூரிய முதுகு சுட்டுச் சுட்டுக் காய்ந்த பழம்போல் கறுத்துக் கிடக்குமா? வெள்ளை நிலவு பட்டுப்பட்டுப் வெள்ளித் தகடாய்ப் பளபளத்திருக்குமா? ஏவு கணைகள் ஏதும் வராததால் தூய வெண்மையில் துலங்கியிருக்குமா? மேகச் சிராய்ப்புகள் மேலே படாததால் பூவின் தளிர்போல் புதிதாயிருக்குமா? வானவில் இங்கே வந்திராமையால் பாலைவனம் போல் வெறுமையாயிருக்குமா? எண்ணிலாக் கேள்விகள் என்னுள் கொதிக்கையில் பறவை ...

புத்த பூர்ணிமா -1

  வெற்று வானத்தில் வண்ணம் குழைக்கும் நெற்றித் திலகமாய் நிலவின் சித்திரம். பௌர்ணமிப் பொழுதில் பார்வையைக் குவித்து நிலவுடன் மனிதன் நின்றிடலாகுமா? வெண்ணிலா என்பது விண்ணையும் சேர்த்துதான். கண்கள் சிமிட்டும் நட்சத்திரங்களைக் கணக்கில் கொள்ளாத கவிதையை என் செய? மரங்களில் பூசிய மர்மக் கறுப்பை விலக்குவதில்தான் நிலவின் ஜாலம். நீல வானத்தில் பாலைச் சிந்திய கிண்ணம் போலக் கவிழ்ந்துள்ள கோலம். கடலலைகளின் கைகளைப் பற்றி கும்மியடிக்கிற கொள்ளை நிலவோ கனத்த மோனத்தில் கனல்கின்ற மலைகள்மேல் கனகாபிஷேகமாய்க் கிரணங்கள் ...
More...More...More...More...