வழிகள் மறந்த வீதிகள்
ஜல்லிக் கலவையின் சட்டியைக் கவிழ்த்த மல்லிகாதான் அதை முதலில் பார்த்தது. “ரோடு ரோலர்” ஏறி நகர்ந்ததும் பாதை தானாய்ப் போகத் தொடங்கிற்று. வீதி மெதுவாய்ப் புரண்டு புரண்டு வேறுதிசையில் விரையலாயிற்று. மேஸ்திரி நாக்கு மேலண்ணத்தோடு. சாஸ்திரி வீதி மட்டுமில் லாமல் அத்தனை தெருக்களும் அசைந்து நடந்தன. தத்தம் போகில் சிதறிக் கலைந்தன. பஞ்சாயத்து போர்டுக்குக் கிளம்பினோர் பைத்தியக்கார மருத்துவமனைக்குள். கொடியுடன் கிளம்பிய பேரணி ஒன்று சுடுகாட்டுக்குள் சென்று சேர்ந்தது. சூழ்ச்சியா? மாயமா? சூழலை ஆய்ந்திட ...
கோடு படுத்தும்பாடு
ஒரு நேர்க்கோடு வரையத்தான் நீண்ட காலமாய் முயல்கிறேன். வேண்டாத இடங்களில் அது வளைந்து கொள்கிறது. நான் சேமித்து வைத்திருக்கும் பதில்களின் பின்னால் நின்று கொண்டு அவற்றைக் கேள்விகளாக்கி விடுகிறது. சாதாரண சம்பவங்களில்கூட ஆச்சரியக் குறியாய் விழுந்து அசிங்கம் செய்கிறது. சத்தியங்களை அடிக்கோடிடும் போதெல்லாம் அடித்தல் கோடாக மாறி அதிர வைக்கிறது. சூனியமே சுகமென்றிருக்கையில் வெற்றிடங்களைக் கோடிட்டு நிரப்பச் சொல்லி நீட்டுகிறது. ஒரு கோட்டில் சிந்திக்க விடாமல் உபத்திரவம் செய்கிறது. கவிதையின் பயணம் தன்போக்கில் நிகழ அனுமதியாமல் ...
ஏன் அப்படி?
எந்த வீட்டுக் குழந்தையென்றாலும் கன்னம் தடவிக் கொஞ்சியிருப்பேன் பளிங்குக் கண்கள் பளிச்சிட வேண்டிக் குரங்குச் சேட்டைகள் காட்டியிருப்பேன். அன்று மாலையும் அப்படியேதான்! புடவைக் கடையில் பொம்மையைப் பார்த்து விழிகள் மலர்த்திய வெள்ளரிப்பிஞ்சை பேனா கொடுத்துப் பழக்கம் செய்ய நேரம் அதிகம் ஆகவில்லை. மிக மிக சீக்கிரம் நண்பர்களானோம். சொற்கள் தொடாத செப்புவாய் திறந்து “கக்கக்கா”வெனக் கவிதைத் தெறிப்புகள் குதலையின் சுகத்தில் காணாமல்போய் மொழியைத் தொலைத்து மண்டியிட்டிருந்தேன். என்னையும் பொம்மையாய் எண்ணிய குழந்தை தன்னிரு கைகளால் தொடவந்தபோது ...
துளித்துளியாய்…
தென்றலில்லாத இன்றைய புழுக்கத்தை மௌனமாய் ஏற்பதன்றி வேறென்ன செய்யுமாம் வெள்ளைப் பூக்கள். சூரியனுக்குத்தான் தெரியும்… நிலாக்கால வெளிச்சத்தையும் நட்சத்திரக் கண் சிமிட்டலையும் பார்க்கக் கிடைக்காத வருத்தம். இன்னும் கொஞ்சநேரம் பாடிக் கொண்டிருக்குமாறு சொல்லியனுப்ப முடியுமா? அந்த அக்காக் குருவியிடம்! மிகுந்த பக்குவம் வேண்டியிருக்கிறது. சோகத்தை எதிர்கொள்வதற்கல்ல ஆறுதல் சொல்வதற்கு. பூக்களின் ராஜ்ஜியத்தில் எப்படி முளைக்கலாம்? பார்த்தீனியங்கள்! பந்தயக் குதிரைக்குத் தீவனம் சுமந்து, வண்டியிழுக்கும் நொண்டிக் குதிரை. (இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து) ...
பத்மாசுரர்கள்
தவத்தின் உச்சியில் தோன்றிய கடவுளின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்தான் தவசி. சும்மா இருந்த கடவுளை இப்படி வம்புக்கிழுத்தா வேடிக்கை பார்ப்பது? கொணர்ந்த வரங்களை என்ன செய்வான் பாவம்! திண்ணையில் வைக்க அனுமதிக்கலாம்தான். கல்லாய் இறுகிக் கிடக்கிற திண்ணை பெண்ணாய் எழுந்தால் பொறுப்பேற்பவர் யார்? வரந்தர வந்த கடவுளுக்கெதற்கு அபலைப் பெண்ணின் சாபங்களெல்லாம்? விழிக்கும் கடவுளின் முதுகுப் பின்னே சிரிப்பை அடக்கத் தவிக்கிறான் தவசி. ‘அக்மார்க்’ முத்திரை அற்ற வரங்களை இக்காலங்களில் யார்தான் வாங்குவார்? ஆயுள் விருத்தி ...
எதிர்பார்ப்பு
கப்பல் வருகிற திசையைப் பார்த்துக் கண் விழித்திருக்கும் கலங்கரை விளக்கம். வெளிச்சக் கூக்குரல் வீசிவீசித் திரைகடல் முழுவதும் தேடிப் பார்க்கும். தொலைந்துபோன பிள்ளையைத் தேடும் தாயின் தவிப்பு அதிலே தெறிக்கும். நிதான கதியில் நகர்ந்து வருகிற கப்பலைப் பார்த்தால் குதியாய் குதிக்கும். “இதோ பார்! இதோ பார்!” என்கிற தவிப்பு கடலலை இரைச்சலில் கேட்டதோ? இல்லையோ-? நிலத்தில் ஊன்றி நிற்கிற போதும் நிலை கொள்ளாமல் நடுங்கிச் சிலிர்க்கும். கண்டு கொள்ளாமல் கப்பல் நகரும். தனது சுமைகளைத் ...