வளர்ந்த குழந்தைகளை வளர்க்காதீர்கள்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “நான் வளர்கிறேனே மம்மி” என்று சொல்லும் குழந்தைகளை காம்ப்ளான் விளம்பரத்தில் பார்க்கிறோம். தாங்கள் வளர்த்தால் தான் குழந்தை வளரும் என்பது எத்தனையோ பெற்றோர்களின் மூட நம்பிக்கை. அது கூடப் பரவாயில்லை. தங்கள் குழந்தைகள் வளர்ந்து விட்டார்கள் என்னும் பிரக்ஞை கூட இல்லாமல், தங்கள் கைகளில் தான் அவர்களின் வாழ்வே இருக்கிறது என்றெண்ணும் பெற்றோர் இன்னும் அதிகம். நம் பிரியத்துக்குரிய பிள்ளைகள், ஒரு கட்டத்திற்குப் பிறகு பிரபஞ்சத்தைப் பார்த்து வளர்கிறார்கள். பார்த்த ...
வளைந்து கொடுங்கள் வளைப்பதற்காக!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… இறுக்கமாகவே இருப்பவர்கள் எதையும் சாதித்ததாக சரித்திரமில்லை. வளைந்து கொடுப்பதற்கு தோல்வியென்றும் அர்த்தமில்லை. எல்லா விதிகளுக்கும் விலக்குகள் உண்டு. வாழ்க்கையை மிகவும் வறட்சியாக வைத்துக் கொள்ளாதவர்கள் மலர்ச்சியான உறவுகளை சம்பாதிக்கிறார்கள். அதிகாரத்தாலும் அதட்டலாலும் சாதிக்க முடியாததை அன்பும் அங்கீகாரமும் சாதிக்கிறது. நம்மிடமிருந்து காத தூரம் தள்ளி நின்றவர்கள் கூட, நாம் காது கொடுத்துக் கேட்கத் தொடங்கிவிட்டால் நம்மீது இமாலய நம்பிக்கையை வளர்த்துக் கொள்கிறார்கள். மற்றவர்களுக்காக இறங்கி வருபவர்கள் மழையைப் போன்றவர்கள் என்றார் ...
கூச்சத்தைக் கொன்றுவிடு!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கேட்க வேண்டியதைக் கேட்காமல் போகிறபோதல்லாம் உங்களுக்கு என்ன நிகழ்கிறது தெரியுமா? நீங்கள் பெறவேண்டியதைப் பெறாமலேயே போகிறீர்கள். வீதியில், போகும்போது வழி கேட்க சிலருக்கு கூச்சம். விளைவு? போக வேண்டிய இடத்திற்கு அருகிலேயே இலக்கில்லாமல் சுற்றிக் கொண்டிருப்பார்கள். பயில்கிற பாடத்தில் சந்தேகம் கேட்பதில் சிலருக்கு கூச்சம். விளைவு-? அரைகுறை அறிவுடன் ஒரு பாடத்தை அவர்கள் கடப்பார்கள். இவ்வளவு ஏன்-? காசு கொடுத்து சாப்பிடுகிறபோதுகூட இரண்டாவது முறை கூட்டுப் பொரியல் கேட்கக் கூச்சம். ...
நீங்கள் புத்தியா? புத்தகமா?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… குடத்தில் இருக்கிற தண்ணீர்… புத்தகம். அதைக் குடிக்கப் பயன்படும் குவளை-… புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா? வெட்டி எடுத்த தங்கம்-… புத்தகம். அதை தட்டிச் செய்த அணிகலன்… புத்தி. நீங்கள் புத்தியா? புத்தகமா? கட்டிடத்திற்கான அடித்தளம்… புத்தகம். கட்டி முடித்த கட்டிடம்… புத்தி… நீங்கள் புத்தியா? புத்தகமா? படிப்பவர்கள் எல்லாமே ஜெயிப்பவர்கள். உண்மைதான். இதற்குப் பொருளே, படித்த விஷயங்களைத் தகவல்களாக மட்டும் வைத்துக் கொள்ளாமல், செயல்முறைக்குக் கொண்டு வருவதே வெற்றி ...
எது அறிமுகம்? எது நட்பு-?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… அன்றாட வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மனிதர்களைத் தாண்டி வருகிற சூழலில் நாம் எல்லோரும் இருக்கிறோம். இவர்களில் நமக்கு அறிமுகமாகிற எல்லோருமே நம் நட்புக்கு அவர்களோ, அவர்கள் நட்புக்கு நாமோ உகந்தவர்கள் அல்ல. இந்த உண்மையைப் பலரும் உணர்வதே இல்லை. அதன் காரணமாகவே உறவுகளின் அடிப்படையில் விரிசல் விழுகிறது. உங்களுக்கு அறிமுகம் ஆகிறவரை நண்பராக -ஆக்கிக் கொள்வது அவசியம்தானா என்று முதலில் தீர்மானியுங்கள். உங்கள் வாழ்க்கைமுறை போக்குகள், இவற்றை வைத்தே முடிவெடுக்க வேண்டும். ...
உலகம் முழுவதும் ஒரே பயம்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… “தன்னுடைய இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளுதல்” உலகம் முழுவதும் உள்ள ஒரே பயம் இதுதான். பள்ளிக்கூடங்களிலிருந்து பாராளுமன்றம் வரை, வீடுகளிலிருந்து வைட்ஹவுஸ் வரை இந்த பயமே பரவிக் கிடக்கிற-து. ஆனால், இது அழிக்க வேண்டிய பயமல்ல. ஆக்கபூர்வமான பயம். நம்மைத் தொடர்ந்து இயக்கும் சக்தி இது. எட்டிய உயரத்தை எப்படியெல்லாம் தக்க வைத்துக் கொள்ளலாம் என்கிற தவிப்பில்தான் அவரவரும் புதிதாய் முயன்று கொண்டிருக்கிறார்கள். “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்று திருவள்ளுவர் ...