ஆறிப்போனால் ஆபத்து
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… கஞ்சிமட்டுமல்ல. கனவுகள் கூட ஆறிப்போனால் பழயவைதான். பசித்த வயிறு பழங்கஞ்சியை உண்ணவும் முடியாமல் துப்பவும் முடியாமல் தவிக்கும். அதே போல்தான் ஆறிப் போன கனவுகளை கைப்பற்றவும் முடியாமல் கைவிடவும் இயலாமல் இதயங்கள் பதறும். பழைய கனவுகள், எட்டப்படாத இலட்சியங்கள் நம் சாதனைத் தினவுக்கு சவால் விட்டுக்கொண்டே இருக்கும். அன்றாடக் கடமைகள், அடுப்புக்கு விறகு சேகரிக்கும் அவசரத் தேவைகள் என்று பலவற்றுக்கும் மத்தியில் கனவுகளை ஆறிவிடுபவர்கள் காலம் போனபிறகு கண்ணாடி பார்த்து ...
உயிருடன் இருக்கட்டும் உங்கள் மிருகம்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… விலங்கின் உந்துதல் (Animal Instinct) என்பது எல்லா மனிதர்களுக்குள்ளும் இருக்கிற அம்சம். இது முழுக்க நல்லதுமல்ல. முழுக்க கெட்டது மல்ல. சிலர் விலங்கின் உந்துதல் குணத்துக்கு முக்கியத்துவம் தந்து தங்கள் நலனை மட்டுமே பாதுகாத்துக்கொள்ள -முயல்வார்கள். சிலரிடம் விலங்கு குணத்தாக்கம் குறையும். அவர்கள் பிறர் நலனுக்காக தங்கள் நலனை விட்டுத்தரும்படி வளர்ந்திருப்பார்கள். இன்னும் சிலர் விலங்கு குணத்தை முற்றாகக் கடந்துவந்து தெளிந்த நிலையை எட்டியிருப்பார்கள். சராசரி வாழ்வில், சாதிக்கும் விருப்பத்தில் ...
மனிதர்கள் புரிந்தால் வாழ்க்கை புரியும்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்க்கை என்று ஒன்று தனியாக இல்லை. அது சம்பவங்களால் ஆனது. சம்பவங்கள் என்பவையோ மனிதர்களால் வருவது. எனவே இந்த வாழ்க்கை புரிய வேண்டுமென்றால் அதற்கு மனிதர்களைப் புரிந்துகொள்ள வேண்டும். மனிதர்கள் பல விதம் என்பதைப் புரிந்து கொள்வதே முதல் சூத்திரம். உங்கள் எதிர்ப்பார்ப்பு என்ற எல்லைக்குள் வரவே வராதபோதும், அந்த எல்லைக்குள் கட்டுப்படாதபோதும் நீங்கள் ரசிக்காத சம்பவங்கள் நிகழ்கின்றன. ஆனால் அந்தந்த மனிதர்களை அவரவர் நிலைகளில் வைத்தே புரிந்து கொள்கிறபோது, ...
உங்களுடையது அபிப்பிராயம்தான்! உச்சநீதி மன்றத் தீர்ப்பல்ல!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எல்லோருக்கும் தங்கள் அபிப்பிராயத்தைத் தெரிவிக்க உரிமையிருக்கிறது. ஆனால் அபிப்பிராயங்களை மற்றவர்கள் மேல் திணிக்கிறபோது பிரச்சனைகள் உருவாகின்றன. நாம் சொல்வது அபிப்பிராயம்தானே தவிர, அதனை அத்தனை பேரும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென எந்தச் சட்டமும் கிடையாது. தங்கள் கருத்துக்கு எதிர்க்கருத்து வந்து விட்டால் தாங்கிக் கொள்ளவே முடியாதவர்களால் ஒருவரது விவாதத்தில் பங்கெடுக்க முடியாது. தாங்கள் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் விமர்சனத்திற்கு விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட வேதமொழிகள் என்னும் எண்ணம் வேண்டாத பகையை வளர்க்கும். ...
குரலிசையா? விரலிசையா?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பாடகர்களுக்கு பின்னணிப் பாடகர் என்றும் இசைக்கு பின்னணி இசை என்றும் சொல்கிறார்கள். அந்தப் பாடகர் புகழ் நிலையில் முன்னணியில் இருந்தால்கூட அவர் பின்னணிப் பாடகர்தான்!! ஒரு காரியம் நடக்கும்போது நாம் முன்னணியில் இருந்து செயல்படுகிறோமோ பின்னணியில் இருந்து செயல்படுகிறோமா என்பது முக்கியமல்ல. செய்கிற வேலையை சரியாய் செய்தால் நீங்கள் திரை மறைவில் செய்யப்பட்டாலும் உங்கள் வேலையே உங்களை முன்னணிக்குக் கொண்டு வரும்; முன்னேற்றம் தரும். எம்.ஜி.ஆர் பாட்டு, சிவாஜி பாட்டு ...
போர்க்களத்தில் பூப்பறிக்கப் போய்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… என்னுடைய பந்தயம் எவரோடும் இல்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோதுகளங்களில் மலர்ச்செடி நடுகிறேன்….” என்னுடைய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. பகையை சம்பாதிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ள இடத்தில் நட்பை உருவாக்கிக் கொள்வதுதான் தனித்தன்மை. ஒரே துறையில் இயங்குகிற இரண்டு பேர்கள் பகையாளர்களோ போட்டியாளர்களோ அல்ல, சக பயணிகள் என்பதைத் தெரிந்து கொண்டாலே இந்த மனமாற்றம் சாத்தியமாகிவிடும். போர்க்களங்கள் மோதுவதற்கான இடங்கள் மட்டுமல்ல. அவை புதிய ...