போர்க்களத்தில் பூப்பறிக்கப் போய்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… என்னுடைய பந்தயம் எவரோடும் இல்லை. சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன். மோதுகளங்களில் மலர்ச்செடி நடுகிறேன்….” என்னுடைய கவிதைகளில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை. பகையை சம்பாதிக்க எல்லா வாய்ப்புகளும் உள்ள இடத்தில் நட்பை உருவாக்கிக் கொள்வதுதான் தனித்தன்மை. ஒரே துறையில் இயங்குகிற இரண்டு பேர்கள் பகையாளர்களோ போட்டியாளர்களோ அல்ல, சக பயணிகள் என்பதைத் தெரிந்து கொண்டாலே இந்த மனமாற்றம் சாத்தியமாகிவிடும். போர்க்களங்கள் மோதுவதற்கான இடங்கள் மட்டுமல்ல. அவை புதிய ...
உறவும் பகையும் உங்கள் விருப்பம்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… பகையை உறவாக்குவது பற்றிப் பேசுகிறபோதே உறவைப் பகையாக்கிக் கொள்ள எளிதான வாய்ப்புகள் இருப்பதையும் பார்க்க வேண்டும். வாழ்வின் மிகச் கசப்பான தருணங்கள், நமக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் மூலமாகத்தான் உருவாயின என்பது, நாம் உணர்ந்து பார்த்த உண்மை. அறிமுகமாகும் எந்தத் தொடர்பையும் உறவாக வளர்ப்பதும் பகையாக நினைப்பதும் நம் விருப்பத்தில் மட்டுமல்ல. விழிப்புணர்விலும் இருக்கிறது. விழிப்புணர்வோடு பேசப்படுகிற வார்த்தைகளும் செய்யப்படுகிற செயல்களும் உறவுகளை சேதாரமில்லாமல் காப்பாற்றி விடுகின்றன. அதே நேரம், ...
உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசி
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… உங்களைப் பற்றிய மொட்டைக் கடுதாசியை முதலில் எழுத வேண்டியவர் யார் தெரியுமா? நீங்கள் தான்!! உங்களை நீங்களே எல்லாக் கோணங்களிலும் விமர்சனம் செய்துகொண்டால், மற்றவர்களின் விமர்சனங்கள் உங்களைப் பாதிக்காது. நம்மிடம் குறையே இல்லை என்று கண்மூடித்தனமாக நம்புகிறவர்களைதான் விமர்சனங்கள் பாதிக்கும். உங்கள் குறைகள் உங்களுக்குத் தெரிந்தால், அதில் இரண்டு நன்மைகள் இருக்கின்றன. முதல் நன்மை, உங்கள் குறைகளைச் சீர்செய்து, அவை வெளியே தெரியாமல் பார்த்துக் கொள்வீர்கள். இரண்டாவது நன்மை, வேறு ...
நேற்றின் மிச்சம் நாளைக்கு…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நீங்கள் ரசித்துச் சாப்பிட்ட உணவை ஒரு நாள் வைத்திருந்தாலும், அது பழைய சோறாகி விடுகிறது. நீங்கள் ரசித்து உருவாக்கிய கனவை நாளைக்காகவே வைத்திருந்தால், அதுவும் பழைய கனவாகி விடுகிறது. உரிய வயதோ கல்வித் தகுதியோ இல்லாத காலத்தில் நோட்டுப்புத்தகத்தில் மயிலிறகு போல கனவுகளையும் நாம் பொத்திப் பொத்தி வைத்துக் கொள்ளலாம். ஆனால், வயதும் தகுதியும் வந்த பிறகு கனவுக்கும் நடைமுறைப்படுத்துவதற்கும் நடுவிலான நேரமும் தூரமும் நிச்சயம் குறையவேண்டும். நேற்றைய கனவின் ...
சூடு மாறாத சுவடுகள்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… நீங்கள் செல்லும் பாதை நீங்களே போட்டதா? பிறர் உருவாக்கியதா? அதாவது முயற்சிகளை உன்னிப்பாய் கவனித்து அவர்கள் பாதையில் போனீர்களா? நீங்களே ஒரு பாதையை உருவாக்கினீர்களா? இரண்டுமே இருவேறு விதங்களில் முக்கியமானவைதான். உங்கள் மேல் யாருடைய தாக்கம் இருக்கிறதோ, யார் உங்கள் ஆதர்சமோ, அவர்களை அவர்களின் காலடிச் சுவடுகள் கலையும் முன்பே பின்பற்றி நீங்களும் வெற்றியை எட்டியிருப்பீர்கள். அதேபோல, நீங்கள் புதிதாக ஒரு பாதை உருவாக்கியிருந்தால், அதுவும் உங்களைப் பின்பற்றிப் வருபவர்களை ...
கும்பிட்ட கைகள் குழிவெட்ட வந்தால்…
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… எந்த ஒருவரின் வளர்ச்சியோ வெற்றியோ சக மனிதர்களைச் சார்ந்ததில்லை. வாழ்வின் முக்கிய நேரங்களில் துணையிருந்தவர்கள் அல்லது உடனிருந்தவர்கள் உதவியிருந்தாலும் கூட அவர்கள் கருவிதான். ஒரு சம்பவத்தில் விளையும் நன்மை தீமைகளுக்கு நிச்சயமாக நீங்களே பொறுப்பு. நமக்குத் துணை நின்றவர்களிடம் நன்றி காட்டுவது அவசியம். அதற்காக நம் வெற்றிகளையும் நம் வாழ்க்கையையும் அவர்களுக்கு அடகுவைக்க வேண்டிய அவசியமில்லை. ஏதோ ஒரு நேரத்தில் நமக்கு உதவியவர்களோ நம் உதவி பெற்றவர்களோ என்னால்தான் எல்லாம் ...




