சில யுத்தங்கள் சுகமானவை
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து… வாழ்க்கை ஒரு போராட்டம் என்று சிலர் வருத்தம் தோய்ந்த அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தின் ருசி தெரிந்தவர்கள், வாழ்வின் சவால்களை விருப்பமுடன் எதிர் கொள்கிறார்கள். சாமார்த்தியம் உள்ள மனிதர்கள் சதுரங்க விளையாட்டில் அமரும்போது பார்ப்பவர்களுக்கும் பரபரப்பு, விளையாடுபவர்களுக்கும் விறுவிறுப்பு. வாழ்க்கைகூட ஒவ்வொரு விடியலிலும் உங்களை விளையாட அழைக்கிறது. அந்த அழைப்பை விளையாட்டாய் எடுத்துக்கொள்ளாமல் விருப்பமுடன் எதிர் கொண்டால் வாழ்வின் சுவாரசியத்தை சுவைத்தவர்கள் ஆவீர்கள். களம் எத்தனை கடிதாய் இருந்தாலும் கையில் இருக்கும் ...
புதையல் காக்க பூதம் உண்டு! நீங்கள் எதற்காக?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. உங்களுக்குள் இருக்கும் ஆற்றலை வெளிப்படுத்தாமல் அதன்மேல் ஏறி அமர்ந்திருக்கும் யாருமே புதையல் காக்கும் பூதங்கள் தான். தெரிந்த விஷயங்களைப் பகிர்ந்து கொள்வதில் இருந்து, செய்ய முடிந்த நல்ல விஷயங்களை செய்வது வரைக்கும், எல்லாமே உங்களை வெளிப்படுத்துவதால் மட்டுமே சாத்தியம். “எனக்கு அதிலே சின்ன வயசிலிருந்தே ஆர்வம். வளர்த்துக்காம விட்டுட்டேன்.” இதை எத்தனையோ பேர் எத்தனையோ விதங்களில் சொல்லி வந்திருப்பார்கள். இவர்கள் தங்கள் புதையலை எடுக்க விடாமல் தங்களைத் தாங்களே தடுக்கிற ...
சோம்பல் நெருப்பில் சாம்பல் குவியல்
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. கடந்த கால எச்சங்களை சாம்பலாக்குவது நெருப்புக்கு முடியும். ஆனால் சோம்பல் என்னும் கொடு நெருப்பைப் பரவவிட்டால் அது எதிர் காலத்தையும் இப்போதே சாம்பல் ஆக்கி விடும் எச்சரிக்கையாயிருங்கள். நிகழ்காலத்தில் நடக்க வேண்டிய ஒன்றை சோம்பல் காரணமாக தள்ளிப் போடுவீர்களென்றால், உங்கள் எதிர் காலத்தை இப்போதே சீர்குலைக்கிறீர்கள். சின்னச் சின்னதாய் வேலைகள் செய்து கொண்டே இருக்கும் போது நீங்கள் ஏதோ ஒரு தளத்தில் இடைவிடாமல் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள். சோம்பிப் போய் ...
தென்றலும் அறியாத திசையிலிருந்து
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. “எங்கிருந்தோ ஒரு குரல் வந்தது. அது எந்த தேவதையின் குரலோ, எங்கள் தீபங்களில் ஒளி வந்தது, அது எந்தத் கைகள் தந்த ஒளியோ” என்றொரு பாடல் உண்டு. ஒவ்வொரு காற்றுக்கும் கூட திசை உண்டு. கிழக்கிலிருந்து வருவது கொண்டல், வடக்கிலிருந்து வருவது வாடை, தெற்கிலிருந்து வருவது தென்றல், மேற்கிலிருந்து வருவது கோடை என்று, கண்டறியாத காற்றுக்கும் பெயர் உண்டு. ஆனால் தலையைத் தின்னும் சிக்கல் ஒன்றில் தடுமாறித் தவிக்கும்போது எந்தத் ...
மின்னலுக்கு விலை! மழை இலவசம்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. மின்னலும் இடியும்தான் மழை வருவதன் அடையாளங்கள். வானம் பார்த்து வாழ்கிற மனிதர்கள் மேகங்கள் திரண்டு வந்தாலும் கூட கலைந்து விடுமோ என்ற சந்தேகத்தில்தான் இருப்பார்கள். மின்னல் வந்த பின்தான் மழைக்கான நம்பிக்கையைய் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கை என்னும் வானத்தில் கூட ஒரு மின்னல் மின்னிய பிறகே மாற்றங்கள் வந்திருக்கும். என்ன செய்வதென்று குழம்பித் தவிக்கையில் யோசனை மின்னல், உள்ளத் சோர்ந்திருக்கும் நேரத்தில் ஊடுருவிப் பாயும் உற்சாக மின்னல், வருத்தத்தைக் ...
நீங்கள் நல்லவரா..? கெட்டவரா..?
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. இது, கண்ணாடியில் பார்க்கிற போதெல்லாம் நம்முடைய பிம்பம் நம்மைக் கேட்கிற கேள்வி. நம்மைப் பற்றி அடுத்தவர்கள் சொல்வதெல்லாம் அவரவர் அபிப்பிராயங்கள். நண்பர்கள் போற்றுவதும் பகைவர்கள் தூற்றுவதும் அவரவர் அபிப்பிராயங்களே தவிர, நாம் யார் என்கிறகேள்விக்கான விடை நமக்கு மட்டுமே தெரியும். தன் பலங்களை மறந்து தன்னைத் தாழ்த்திக் கொண்டவர்கள் ஒருவகை. அவர்கள் அடியவர்களாய் நினைக்கப்படுகிறார்கள். அடக்கத்துக்காகவே மதிக்கப்படுகிறார்கள். தங்கள் பலவீனங்களை உணர மறுப்பவர்கள் இன்னொரு வகை. அவர்கள் அன்றும் இன்றும் ...