கால்விரல் நுனிகளில் காலத்தின் தாளம்!
வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து……. “உங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்த வேண்டியது, நேரம் குறித்த விழிப்புணர்வு. குறித்த நேரத்தில் குறித்த வேலையை முடிக்க, குதிரைபோல ஒடுங்கள். கால நிர்வாகத்தின் கைகளில் கடிவாளத்தைத் தந்துவிட்டு!” போதித்துக் கொண்டிருந்தார் ஆசிரியர். “அப்படி இருந்தால் என்ன நடக்கும்?” மாணவர் கேட்டார். “அப்படி இருந்தால், காலம் ஒருநாள் குதிரையாகும். அதன் கடிவாளம் உங்களை சேரும். காலத்தை யார் மதிக்கிறார்களோ அவர்கள்தான் காலம் மதிக்கும்படி உயர்கின்றார்கள். காலகாலமும் நிலைக்கும்படி காரியங்கள் செய்கிறார்கள்” என்றார் ...
பிரணவத்தின் பிரயோகம்
மனிதர்கள், ஒரே மாதிரியான வாழ்க்கை முறைக்குப் பழகி விடுகிறார்கள். இன்பத்தில் நாட்டம், வாழ்வில் பெற்ற வெற்றிகள் குறித்த பெருமிதம் போன்றவை ஒருவிதமான மிதப்பில் கொண்டு செலுத்தும் போது எதிர்பாராமல் நிகழும் சம்பவங்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தசரதன், இராமனுக்கு முடிசூட்ட விழைந்தமைக்குக் காதோரம் நரைத்த சிகை காரணமென்று சொல்லப்படுவதுண்டு. கம்பனில் அப்படியரு காட்சி இல்லை. மாறாக, மந்திரக் கிழவரிடத்திலும் அமைச்சர்களிடத்திலும் தசரதன் பேசுகிற பேச்சு, ஞானத்தின் சாரல் தெறிக்கிற பேச்சாக இருக்கிறது. பேசுபவன் சக்கரவர்த்தி தசரதனா, சம்பந்தி ...
தனிப்பெரும் பதம்
“சக்தி சக்தி சக்தியென்று சொல்லு & கெட்ட சஞ்சலங்கள் யாவினையும் கொல்லு” என்று சக்தி நாமத்தை உபதேசிக்கின்றார் மகாகவி பாரதி. நமக்கு உபதேசிக்கப்பட்ட நாமத்தை உபாசிக்க உபாசிக்க, காலப்போக்கில், அது வெறும் நாமமன்று, அது ஒரு மந்திரம் என்பதைக் கண்டுணர்கிறோம். அந்த மந்திரம் நமக்கு சித்தியாகிறபோது, நம் புலன்களையும் உயிரையும் அது பதப்படுத்துகிறது. முக்தி நிலைக்குக் கூட்டுவிக்கும் காரணத்தால், அதுவே “பதம்” என அழைக்கப்படுகிறது. “அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம் ...
சபரி என்றொரு யோகினி
சில முக்கியக் கோட்பாடுகளுக்கு “அந்தம்” என்றோர் ஈற்றுச் சொல் இணைந்து வரும். வேதாந்தம், சித்தாந்தம், நாதாந்தம் போன்றவை, உதாரணங்கள். வேதத்தின் அந்தம் எது, சித்தத்தின் அந்தம் எது, நாதத்தின் அந்தம் எது என நோக்கின், இறைமையின் நேரடி அனுபவம் என்பதே பதிலாக இருக்கும். எந்தவொரு யோகமும் இறை அனுபவத்தில் சென்று நிறைகிறது. அந்த அடிப்படையில் எல்லா மகத்துவங்களும் நிறைந்த யோகினியாக கம்பனில் காட்டப்படும் பாத்திரம் & சபரி. சபரி பற்றிய செவிவழிச் செய்திகளும், இன்னபிற அனுபவங்களும், அவளை ...
துதிகள் உணர்த்தும் பிரபஞ்ச ஒருமை
கம்பனின் இராம காதையில் பற்பல பாத்திரங்கள் பல்வேறு சூழ்நிலைகளில் இராமனைத் துதிக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இவை ஒவ்வொன்றுமே தனிச் சிறப்பு மிக்கவை. பக்தியின் பெருக்காக மட்டுமின்றிப் பற்பல யோக ரகசியங்களை உணர்த்தக் கூடியவை. அத்தகைய சொற்றொடர்கள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கம். இராமனின் திருவடித் தொடர்பு பெற்று, அதன் விளைவாக அரக்கவுரு நீங்கி முக்தி பெறும் விராதன், மற்றும் கவந்தன், சரபங்கன் போன்றோர் இராமனைத் துதிக்கின்றனர். கருடன் துதியும் முக்கியமான பகுதி. இந்தத் ...
கம்பனில் சமாதி நிலை பற்றிய குறிப்புகள்
ஒரு பக்தனுக்குள் நால்வகை நெறிகளும் முதிர்ந்து ஆன்மிகப் பயணத்தை ஆனந்தமயமாய் ஆக்கும் என்பதற்கு நிலைபேறுள்ள உதாரணமாய் அனுமன் திகழ்கிறான் என்பதைப் பார்த்தோம். இறைவனுக்கு எவ்விதமான பக்தன் பிரியமானவன் என்று ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் சொல்கிறார். “ஆசையற்றவனும், தூயவனும், திறமைசாலியும், பற்றற்றவனும், பயனற்றவனும், தன்முனைப்புடன் செயல்படுவதை எல்லா விதங்களிலும் விட்டவனுமான எனது பக்தன் எனக்குப் பிரியமானவன்.” “அனபேக்ஷ : சுசி -தக்ஷ & உதாசீனோ- கதவ்யத: ஸர்வாரம்ப பரித்யாகீ யோமத் பக்த: ஸமே ப்ரிய:” இந்த இலக்கணத்திற்கு ...