வித்தில் முளையாகும் வித்தகி இல்லையேல் பத்தில் பதினொன்றாய் போயிருப்பேன் – தத்துவம் ஏதும் அறியாமல் ஏங்குகையில் வாழ்வளிக்க மாதரசி கொண்டாள் மனம். கற்கும் மொழியானாள்; கட்டும் கவியானாள் நிற்கும் சொல் சொல்கின்ற நாவானாள் –…

மழைமுகில் வண்ணம் அவள்வண்ணம் மழைதரும் கருணை அவள்வண்ணம் பிழைகள் பொறுப்பாள் பரிந்திடுவாள் பற்பல அற்புதம் புரிந்திடுவாள் குழையணி காதர் காதலிலே குதூகலம் காணும் மஹேஸ்வரியாள் விழைவுகள் யாவும் அருளிடுவாள் வித்தகி திருப்பதம் பரவிடுவோம்! மின்னலை…

விருந்தினர்களை முகமலர்ந்து வரவேற்பதற்கு குழந்தைகளை நாம் பழக்குவோமேயானால் அவர்கள் சமூக உணர்வு மிக்கவர்களாக வாழ்வார்கள் என்பதை நம் சமூகம் காலம் காலமாகக் கண்டிருக்கிறது. வீட்டிற்குள் வருபவர்களைப் பார்த்துக் கூச்சமின்றி உரையாட குழந்தைகள் பழகிவிட்டால் வெளியிடங்களுக்குச்…

இன்றைய நவீன குடும்பங்கள் எதிர் நோக்குகின்ற மிகப்பெரிய சவால்களில் ஒன்று இணக்கமில்லாத குடும்பங்கள். ஒரு குடும்பத்தில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து பேசுவதோ கூடி உண்பதோ அருகிப் போய்விட்ட காலச்சூழலில் நாம் வாழ்கிறோம். உணவு…

இறைவனே விரும்பி எழுந்தருளுகின்ற ஒரு திருக்கோயிலை அமைத்த அடியாரை கண்டு வணங்க வேண்டும் என்ற பேரன்போடு படைசூழ அரசன் புறப்பட்டு நின்றவூருக்கு வந்து சேர்கிறார். அறிவிப்பே இன்றி அரசன் வந்ததைக் கண்டு அந்த ஊர்…

எண்ணங்களே செயல் வடிவம் பெறுகின்றன என்றும் எண்ணங்களே சக்தி மிகுந்தவை என்றும் மேலை நாட்டு விஞ்ஞானமும் உளவியலும் இன்று நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. ஒரு மனிதனுக்கு நம்பிக்கை இருக்குமேயானால் தரமான மருந்து என்று தண்ணீரைக் கொடுத்தாலும்…

தொண்டு என்கிற போர்வையில் சுயநலமான போக்குகள் அரங்கேறிக் கொண்டு இருக்கிற சூழல் எந்தக் காலத்திற்கும் தேவையான அர்ப்பணிப்பு உணர்வை அழகாக பேசுகிற திருத்தொண்டர் புராணம் தன்னலம் இல்லாத தொண்டர்களை வளர்த்தெடுப்பதற்கான வழிகாட்டி நூல். அடிப்படையில்…

திருநீலகண்ட யாழ்ப்பாணர் திருஞானசம்பந்தருடைய திருப்பதிகங்களை யாழில் இட்டு இசைப்பதை வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டார். அவர் தம் துணைவியார் மதங்கசூளாமணியார் அந்தப் பதிகங்களை இசைப்பதில் கணவருக்குத் துணை நிற்கிறார். சோழ மன்னரிடத்தில் பணிபுரிந்து வந்த பரஞ்சோதியார்,…

இவற்றை தாண்டி தொண்டர்களுடைய அரிய இலக்கணம் ஒன்றையும் சேக்கிழார் சொல்கிறார். ஒருவன் இறைவன் இடத்திலே பக்தி செலுத்துவதுகூட பயன் கருதி அமையக் கூடும். எல்லா பற்றுகளையும் துறந்து நான் இறைவனை வேண்டினால் எனக்கு வீடுபேறு…

‘ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்’ என்கிறார் சேக்கிழார். அது எப்படி ஓட்டையும் செம்பொன்னையும் ஒன்றாகவே பார்ப்பது என்றால், அதற்கு திருநாவுக்கரசு நாயனார் புராணத்தில் ஓர் ஆதாரம் இருக்கிறது. நாவுக்கரசரின் பற்றற்ற மனப்பான்மையை வெளிப்படுத்த விரும்பிய…