பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது
இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது
முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது
நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது
ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது
அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது
எழுபதில் ஆனந்தம் எதிரியின்றி வாழ்வது
எண்பதில் ஆனந்தம் எண்ணங்கள் ஓய்வது
தொண்ணூறில் ஆனந்தம் தெய்வம்போல் ஆவது
நூறில் ஆனந்தம் நன்றிசொல்லிப் போவது…

( “ஆனந்தம் ஆரம்பம்” கவியரங்கில் வாசித்தது)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *