எது பழையது எது புதியது என்கிற கேள்வியை உன்னிப்பாகப்
பார்த்தால் ஒன்று நமக்குத் தோன்றும்.காலம் எத்தனை பழையது!
ஆனால் எப்போதும் புதியது. காலமே அப்படியென்றால், காலகாலன்.
இன்னும் பழையவன்.என்றும் புதியவன்.
பலரிடம், “எது உங்கள் இஷ்ட தெய்வம் “என்று கேட்கிறார்கள்.
அதை விட வேடிக்கை,அதற்கு அவர்கள் பதிலும் சொல்கிறார்கள்.
இறைவனை உபாக்சிக்கக் கூட அவனுடைய அருள் வேண்டும் என்பதை
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம் என்னும் வரி
உணர்த்துகிறது.
இந்த மண்ணில் மனிதப்பிறவி எடுப்பதன் முக்கிய நோக்கமே முக்தி
அடைவதுதான். இல்லறம் என்பதே இருவர் இணைந்து இறைநாட்டத்தில்
முழுமையாக ஈடுபடுவதே ஆகும்.எனவே சிவனடியாராக உள்ள பெண்கள்
ஒத்த சிந்தனை உள்ளவர்களைவாழ்க்கைத் துணையாகக் கொண்டு
சிவத்தொண்டில் ஈடுபட விழைகிறார்கள்.
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
தேச விடுதலைப் போராட்ட காலங்களிலும்,அரசியல் இயக்கங்களிலும்
இத்தகைய தன்மைகலை நாம் தொடர்ந்து கண்டு வருகிறோம். சைவம்
இல்லறத்தை ஒறுக்கும் நெறியல்ல. ஒத்த சிந்தனை உள்ளவர்கள்
இல்லறத்தில் இணைவதை ஊக்குவிக்கும் நெறி. திருமணத்தைப்
புறந்தள்ளாத பல ஆன்மீக இயக்கங்களின் தொண்டர்கள் இல்லறத்தில்
இணைந்து இறைத்தேடலை முன்னெடுத்துச் செல்வதை இன்றும்
பார்க்கிறோம்.இத்தகைய கணவர் வாய்க்கப் பெற்றால் எக்குறையும்
இல்லை என்கின்றனர் இப்பெண்கள்.
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்




