guruகுருவெனும் முழுநிலவு வளர்பிறை அதன்பரிவு
அருள்நிழல் தரும் பொழுது அகிலமும் அவன்விழுது

ஒளியினில் உயிர்நனைய ஒலியினில் இசைநனைய
களிதரும் அமுதமென குருவருள் வரும்பொழுது

நடுநிசி வரையினிலே நாதனின் குடிலினிலே
உடைபடும் வினைமுழுதும் உன்னதன் அடிதொழுது

சுகங்களில் உடல்பழுது சுமைகளில் மனம் பழுது
சகலமும் சுகம்பெறுமே சத்குரு வரும்பொழுது

புன்னகை நந்தவனம் புனிதனின் குளிர்வதனம்
என்மனம் கரைந்துவிடும் இறையவன் முன்னழுது

தென்றலின் இதமிதுவா தெய்வத்தின் குரலிதுவா
மன்னவன் குருநாதன் மன்றத்தில் வரும்பொழுது

விண்மதி பொலிந்திருக்க விரல்களும் குவிந்திருக்க
கண்களும் நிறைந்துவிடும் குருமுன்னர் வரும்பொழுது

கீதங்கள் ஒலித்திருக்கும் கவிதைகள் மலர்ந்திருக்கும்
பாதங்கள் பதியஎங்கள் புண்ணியன் வரும்பொழுது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *