வானம் நமக்கோர் இலக்கானால்
வளரும் நம்பிக்கை விளக்காகும்
நானும் நீயும்முடிவெடுத்தால்
நாளைய விடியல் நமக்காகும்

ஒவ்வொரு நாளும் விதைபோல
உனது கைகளில் விழுகிறது
எவ்விதம் விதைப்பாய் வளர்த்தெடுப்பாய்
என்பதும் உன்னிடம் இருக்கிறது

மனிதன் அடைகிற வெற்றிகளும்
மற்றவர் கொடுத்து வருவதல்ல
மனிதன் இழக்கிற வாய்ப்புகளும்
மற்றவர் தடித்து மறைவதல்ல

உன்னில் தொடங்கும் ஒருகனவு
உன்னால்தானே நிஜமாகும்
இன்னும் தயக்கம் எதற்காக
எண்ணியதெல்லாம் வசமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *