உனக்கென உள்ளது ஒருலகம் – அதை
உருவாக்குவதே உன் கடமை
தனக்கெனத் தடைகள் வந்தாலும் -மனம்
தளராதிருப்பதே தனிப்பெருமை

மனக்கதவுகளைத் திறந்துவிடும் -புது
மலர்ச்சியை உள்ளம் உணர்ந்துவிடும்
தினம் தினம் முயற்சி தொடர்ந்துவிடும் -உன்
திசைகள் அனைத்தும் திறந்துவிடும்!

வெற்றிக்கு வியர்வை விலையாகும் -உன்
வழியினில் புகழும் நிலையாகும்
கற்றதை நிகழ்த்துதல் கலையாகும் -அது
கைவரப் பெற்றால் நலமாகும்!

திட்டம் வகுப்பது பழகிவிட்டால் -அது
திறமை செயலால் வளர்ந்துவிட்டால்
எட்ட முடியும் எண்ணியதை-நீ
எளிதில் தொடுவாய் சிகரங்களை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *