வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

தொட்டுப்பார்த்தால் மென்மையில்லை. நுகர்ந்து பார்த்தால் வாசமில்லை கலையாத செயற்கை அழகு காலமெல்லாம் இருக்கிறது. இப்படி இருக்கிறபிளாஸ்டிக் பூக்களை பொதுவாக யாரும் பொருட்படுத்துவதில்லை.

உண்மையான பூவுக்கு சவால்கள் அதிகம். பனியிலும் மழையிலும் நனைய வேண்டியிருக்கும். வண்டுகளுக்கு வாய்திறக்க வேண்டியிருக்கும். வெய்யிலில் வாட வேண்டியிருக்கும். ஆனாலும் அதன் வசீகரம் இயல்பானது; இயற்கையானது.

எந்த சவாலுக்கும் தயாராகாமல் அதீத பாதுகாப்பில் அடைபட்டு வாழ்பவர்கள் சுவாசிக்கிறார்கள் என்பதற்குக்கூட சாட்சி வேண்டியிருக்கும்.

வாழ்வின் போக்குகளை ஏற்று வாழத் தலைப்படும் போது, வீழ்ச்சியும், அவமானங்களும் தோல்விகளும் உங்களுக்கு உரமேற்றுகிறது.

உங்களைப்பற்றிய உண்மையை உங்களுக்கு உணர்த்துகிறது.

வானம் நோக்கித் திறந்து கிடக்கும் உண்மை மலர்களைப்போல், வாழ்க்கையை நோக்கித் திறந்த நிலையில் இருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *