வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

யராவது ஞானசூனியம் என்று திட்டினால் வருத்தப்படத் தேவையில்லை. சூனியத்தில் இருந்துதான் இந்தப் பிரபஞ்சமே பிறந்தது என்று ஞானிகள் சொல்கிறார்கள்.

வெறுமையிலிருந்து வெளிப்படும் எதுவும் முழுமையாய் இருக்கிறது. கட்டியில்லாத கருப்பையில்தானே குட்டிப் பிள்ளை பிறக்கிறது.

வீடு காலியாய் இருக்கிறதா என்று விசாரித்து குடியேறுவது போல் திறந்த மனதில்தான் சிறந்த சிந்தனைகள் தேடிவந்து தோன்றுகின்றன.

நேற்றின் சுமைகள் இல்லாமல், நாளையின் எதிர்பார்ப்புகள் சூழாமல், நிகழ் காலத்தின், நிகழும் நொடியின் சூனியத்தில் இருப்பதே படைப்பின் ரகசியம்.

எப்போதும் எதற்காவது கவலைப்பட்டுக் கொண்டே இருப்பது என்கிற விரதத்தில் இருப்பவர்கள் அந்த விரதத்தை கைவிட்டால் போதும்.

வாழ்க்கையும் வெற்றியும் அவர்களைக் கைகொடுத்துத் தூக்கிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *