வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

ஒவ்வொரு பருவத்திலும் உங்களுக்கு ஒவ்வொன்று பிடிக்கிறதா? நீங்கள் வளர்வதாக அர்த்தம்.

குத்துப்பாட்டு கேட்ட உங்களை மெல்லிசை ஈர்க்கிறது என்றால் மென்மை படியத் தொடங்குகிறது என்று பொருள்.

முன்னைவிட அதிக நேரம் படிப்பில் கவனம் செலுத்த முடிந்தால் பக்குவம் மலர்கிறது என்று பொருள்.

வாழ்க்கை ரசனை வளர வளர மனம் மலரத் தொடங்கும். உங்கள் ரசனையை உற்றுக் கவனிப்பதன் மூலமே உங்கள் வாழ்வின் போக்கை உங்களால் உணர முடியும்.

வயது வளர வளர “எதற்கும் நேரமில்லை. ஓடிக் கொண்டேயிருக்கிறேன்” என்று நீங்கள் சொன்னால், உங்களுக்குள் நல்ல மாற்றங்களை நீங்கள் அனுமதிக்கவில்லை என்று பொருள்.

வாழ்வின் அபூர்வ கணங்களான மென்மையும், மேன்மையும் அடிக்கடி நிகழ்வதன் மூலம், உங்கள் தன்மையில் ஓர் அற்புதம் நிகழ அனுமதிக்கிறீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *