வாழ்வில் போராடுங்கள்! வாழ்க்கையுடன் அல்ல… புத்தகத்திலிருந்து…

நெருக்கமானவர்களிடம் நாம் காட்டுகிற பிரியம் பற்றாக மாறுகிறது. சில நேரங்களில் அந்தப் பற்று எல்லை மீறுகிறது. வாழ்வின் வெற்றிக்கோடு என்றும் பற்றுக்கோடு என்றும் எந்த உறவுகளை எண்ணுகிறோமோ அந்த உறவுகளாலேயே வலிகள், வருத்தங்கள் ஏற்படுவதும் உண்டு.

ஒரு சில மனிதர்களால் நேரும் இந்தக் கசப்பை அகற்றும் சக்தி, அத்தனை உயிர்களிடமும் நாம் கட்டுகிற பரிவுக்கு உண்டு.

எதிர்பார்ப்பில்லாத பிரியத்திற்குத் தான் பரிவு என்று பெயர். பிரியம் ஏற்படுத்திய இருளை பரிவு என்று ஒளி விலக்கும்.

பிரியம் ஏற்படுத்திய பதட்டத்தை பரிவு அகற்றி சமநிலை கொடுக்கும்.

உலகை நேசிப்பதே உயர்வு என்பதை உணர்ந்தவர்கள் ஞானிகளாயினர்.

உங்கள் ஏமாற்றத்திற்குக் காரணம், நீங்கள் நேசித்த மனிதர்களல்ல. உங்கள் எதிர் பார்ப்புகள்தான் என்பதை, பரிவு காட்டும் பவித்திரமான நிகழ்வுகளில் புரிந்துகொள்வீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *