மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
மழைசிந்தும் இளங்காலை நேரம் – என்
மனதோடு இதமான ஈரம்
இழையாக ஒருபாடல் தோன்றும் – அதில்
இசையாகும் உன் ஞாபகம்!

அலைவீசி வரும் காதல் வெள்ளம் – இது
அணையேதும் இல்லாத உள்ளம்
விலைபேச முடியாத இன்பம் – ஒரு
விதமான சுகம் வாலிபம்!

இதழ்பூத்த சிறுபூவின் மௌனம் – அதில்
எழுகின்ற மணம்தானே வேதம்
எதை இன்னும் அதுபேச வேண்டும் – இங்கு
அதுபோல நம் நாடகம்!

விடைதேடும் புதிராக மோதும் – உன்
விழியோடு பலநூறு ஜாலம்
எடையேதும் இல்லாத பாரம் – அட
இது காதல் எனும் சாகசம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *