கருவி இசைத்துக் கற்றானா கருவில் இருந்தே பெற்றானா சரிகம பதநி சுரங்களெல்லாம் சுடர்விரல் நுனிகளில் உற்றானா வரிகளில் இசையைக் கண்டானா வானின் அமுதம் தந்தானா ஒருமுறை வந்த இசை மன்னன் உலகுக்கு மீண்டும் வருவானா…

வீசும் புயலை வெளியில் நிறுத்து பேசும் பேச்சில் பேரொளி மலர்த்து ஈசல் போலே இறகுதிராதே வாசல் திறக்கும் வாடி விடாதே தடங்கல்கள் எத்தனை தாண்டியிருக்கிறாய் மயங்கி நிமிர்ந்து மீண்டிருக்கிறாய் நடுங்கும் அவசியம் நமக்கினி இல்லை…

உள்ளங்கால்கள் வலித்தால் கூட ஓய்வு கொள்ள நேரமில்லை வெள்ளம் போலக் கனவுகள் வந்தும் வடிகால் மறந்தால் வாழ்க்கையில்லை முள்ளும் மலரும் நிறைந்தது பாதை மயங்கி நின்றால் பயணமில்லை தள்ளிப் போட்டால் தேங்கிப் போகும் தொடர்ந்து…

“வானில் ஒருவன் விதைவிதைத்தால் வயலில் அதுவந்து முளைத்திடுமா?” ஏனோ இப்படி ஒரு கேள்வி எழுந்தது ஒருவன் மனதினிலே ஞானி ஒருவர் முன்னிலையை நாடிச் சென்றே அவன் கேட்டான் தேனாய் சிரித்த பெரியவரோ தெளிவாய்ச் சொன்னார்.…

காற்றில் ஏறும் குளிரழகு காலை வானத்தின் நிறமழகு நேற்றைய வாழ்வின் வலியழகு நாளையின் நம்பிக்கை ஒளியழகு வெய்யில் பருகும் குளமழகு வியர்வை பருகும் நிலமழகு வையம் வழங்கும் வாய்ப்பழகு வெல்லும் நேரத்தில் பணிவழகு நீரில்…

தூவிய விதையில் வான்மழையின துளிகள் படுவது யாராலே ஏவிய கணைகள் இலக்குதனை எட்டி விடுவதும் எதனாலே மேவிய ஒழுங்குகள் எத்தனையோ மேதினி இயக்கத்தை ஆள்கிறது ஆவல் வளர்க்கும் விந்தையிது ஆண்டுகள் பலவாய் தொடர்கிறது! யாரோ…

எனக்குள் இருக்கிற நிர்வாகி எழுந்து பார்க்கிற நேரத்தில் கணக்குகள் நிரல்கள் திட்டங்கள் கண்ணைக் கட்டும் காலத்தில் தனக்குள் திட்டம் பலதீட்டி தாளில் கணினியில் அதைக்காட்டி கனக்கும் இமைகள் கசக்குகையில் களத்தின் சூட்சுமம் விரிகிறது, கேடயம்…

இன்று

July 8, 2016 0

இன்று முளைத்தது இன்று.. இதன் கன்றாய் துளிர்விடும் நாளை…. அன்றே முடிந்தது அன்று-அதன் அச்சம் சுமப்பவன் கோழை நன்றே நிகழ்ந்தது வாழ்வு – இந்த நிலையே தொடரட்டும் நாளை என்றே தொடருக யாவும் –…

காலம் எழுதும் குறிப்பேட்டில் – உன் கனவுகள் நிலுவையில் உள்ளன! ஆலாய் பறக்கும் மானிடனே – உன் ஆசைகள் எங்கே போயின நீலம் நுரைக்கும் ஆகாயம் – நீ நிமிரும் நாளெதிர் பார்த்திடும் வேலைகள்…

பிரளயம் எழுந்தே அடங்கும் பிரபஞ்சம் புதிதாய்த் தொடங்கும் நரக வலிகளும் முடங்கும் வருகிற காலம் விளங்கும் தீர்ப்பின் நிறங்கள் மாறும் தீர்வை நோக்கிப் போகும் போர்கள் முடிந்து மௌனம் போதனை தேடும் இதயம் மோதலின்…