ஏகாம்பரனுக்கு ஏதாடை?
பேயைத்தா யென்பாய் பிடிசாம்பல் பூசுவாய் சேயைப்போய் உண்பாய் சிவக்கொழுந்தே-தீயைப்போய் ஏந்திக் களிப்பாய் எழிலார் அமுதிருக்க மாந்துவாய் நஞ்சை மகிழ்ந்து முப்புரங்கள் உன்சிரிப்பில் முற்றும் எரிந்ததாம் அப்புறமேன் மேரு வளைத்தாய்நீ-இப்படித்தான் பாசக் கயிறுபடப் பாய்ந்துதைத்தாய் இங்கெமது பாசம் அறுபடவே பார் பெண்கொடுத்தான் பர்வதன் கண்கொடுத்தான் வேடனும் பண்கொடுத்தார் நால்வர்! பயனென்ன?-மண்ணெடுத்து தின்ற திருமால் திரைகடலில் போய்த்தூங்க நின்றாய் சுடலையிலே நீ. பீதாம் பரம்பட்டு போர்த்தத் திருமாலாம் ஏகாம்பரனுக்கு ஏதாடை? வாகாக கொஞ்சிவெண்ணய் ஊட்டினார் கோபியர் மைத்துனர்க்கு- நஞ்சருந்த மட்டுமோ ...
மெய்யிருப்பு…
அவர்களிடமிருக்கிறது அக்கினிப்பரிட்சையின் கேள்வித்தாள் அவனிடமிருப்பதோ அலைமேல் மிதப்பதற்கான சூத்திரம்…. அவர்களிடமிருக்கிறது ஆயிரம் இரைப்பைகளின் அசுரப்பசி அவனிடமிருப்பதோ ஆதிரை உடைத்த அட்சய பாத்திரம்….. அவர்களிடமிருக்கிறது தேய்த்துத் தேய்ந்த அற்புத விளக்கு அவனிடமிருப்பதோ அந்த பூதத்தின் விருப்ப ஓய்வுக் கடிதம்…. அவர்களிடமிருக்கிறது கிழக்கை மேற்கென கதைகட்டும் சாத்திரம் அவனிடமிருப்பதோ விடியலின் கிழிந்த வரைபடம்….. அவர்களிடமிருக்கிறது ஆடம்பரக் கூச்சலின் அடாவடி ஓசை அவனிடமிருப்பதோ கலைமகளின் கருணையில் கனிந்த இசை…. அவர்களிடமிருக்கிறது ஒருபோதும் உறங்கவிடாத மனச்சலனம் அவனிடமிருப்பதோ வற்றாத அமைதியின் ஆழ்ந்த மௌனம்…. ...
வயதுக்கேற்ற வாழ்க்கை
பத்தில் ஆனந்தம் புத்தகம் பயில்வது இருபதில் ஆனந்தம் காதலில் விழுவது முப்பதில் ஆனந்தம் கல்யாணம் ஆவது நாற்பதில் ஆனந்தம் நன்மைதீமை உணர்வது ஐம்பதில் ஆனந்தம் அனுபவங்கள் சேர்வது அறுபதில் ஆனந்தம் வலிபழகிப் போவது எழுபதில் ஆனந்தம் எதிரியின்றி வாழ்வது எண்பதில் ஆனந்தம் எண்ணங்கள் ஓய்வது தொண்ணூறில் ஆனந்தம் தெய்வம்போல் ஆவது நூறில் ஆனந்தம் நன்றிசொல்லிப் போவது… ( “ஆனந்தம் ஆரம்பம்” கவியரங்கில் வாசித்தது) ...
கோவையில் சித்திரை….
(சற்று முன்னர் கோவை பாலிமர் சேனலில் வாசித்த கவிதை) புத்தம் புதிதாய் இன்னோர் ஆண்டு புறப்படத் தொடங்கும் வேளையிலே சித்திரைத் திங்கள் முதல்நாள் எனது வாழ்த்துகள் ஏற்பீர் நேயர்களே காலையில் எழுந்து கண்கள் திறந்ததும் கண்ணாடி யோடு கனிகண்டு நாளெல்லாம் நல் வாழ்த்துகள் சொல்கையில் நெஞ்சில் இனிக்கும் கல்கண்டு சித்திரை வெய்யில் சூடு குறைந்து “சில்”லென்று காற்று வருகிறது கத்திரி வெய்யில் நாடு முழுவதும்… கோவையில் சூடு குறைகிறது நல்ல வெய்யில் கோவையில்-ஆனால் கொல்லும் வெய்யில் கிடையாது ...
ஒழுங்கின்மை தானே ஒழுங்கு
கடந்த சில மாதங்களாகவே கல்வி நிறுவனங்களின் ஆண்டு விழாக்களில் பங்கேற்று வருகிறேன். மாணவர்களுக்குப் பேசுவது என்பதும் ஆண்டு விழாக்களில் பேசுவதும் வெவ்வேறு தன்மைகள் வாய்ந்தவை.மாணவர்கள் மட்டுமே நிறைந்த அவையில் அவர்களுக்கு சொல்ல வேண்டியதை சொல்லலாம். பெற்றோர் மட்டுமே இருக்கும் அவையில் பெற்றோர்களுக்கானதை பேசலாம்.இருவரும் கலந்திருக்கும் அவையில் பொதுவாகப் பேச வேண்டும்.குறிப்பாக மாணவர்களை வைத்துக் கொண்டு பெற்றோர்களுக்கு பிள்ளை வளர்ப்பின் அம்சங்களைப் பேசலாகாது. சில மாதங்களுக்கு முன் பவானியில் ஆப்டிமஸ் பள்ளியின் மாண்டிஸோரி பிரிவு ஆண்டுவிழா.தை அமாவாசையை ஒட்டி ...
வாக்களிக்க வாருங்கள்
வாசல்தேடிக் கும்பிடுவோர் விரலகள் பாருங்கள்-அவர் விரல்களிலே என்ன கறை என்று தேடுங்கள் பேசும்பேச்சில் உண்மையுண்டா என்று கேளுங்கள்-ஒரு புதுவெளிச்சம் வரும்சுவடு தன்னைத் தேடுங்கள் ஆட்டம்காணும் ஆட்சியிங்கு தேவையில்லையே-வெறும் ஆள்பிடிக்கும் உத்திக்குநாம் அடிமையில்லையே ஓட்டு வாங்கி மறப்பவரைரை ஓடச் செய்யுங்கள்-நல்ல உயர்ந்த மாற்றம் தருபவரை ஆளச் செய்யுங்கள் கொள்கைகளை அடகுவைக்கும் கட்சிகள்வேண்டாம்-வெறும் கோஷ்டிகளை வளர்த்துவிடும் கட்சிகள் வேண்டாம் உள்ளபடி நல்லபடி ஆள்பவர் யாரோ-அந்த உயர்ந்தவரைக் கூட்டிவந்துஅமரச் செய்யுங்கள் வல்லரசாய் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா-அந்த வழியைக்கூட இதுவரைக்கும் காட்டவில்லையே நல்லரசாய் ...




