Blog

/Blog

பதங்களைத் தேடு (நவராத்திரி 3)

ஆயிரம் சூரியன் பார்வையில் சுடர்விடும் அன்னையின் திருமுகம் நிலவு தாயவள் கருணையின்பாய்படுத் துறங்கிட துன்பமும் இன்பமும் கனவு பாய்மரக் கப்பலில் போகிற பிள்ளைக்கு பயமில்லை சமுத்திர விரிவு தேய்வதும் வளர்வதும் தன்னியல் பெனும்மனம் தானாய் உணர்ந்தது தெளிவு சாமரம் வீசிடும் அரம்பையர் நடுவினில் சாகசச் சிரிப்புடன் தெரிவாள் காமனின் அம்பினைக் கைப்பற்றும் கன்னிகை குமரியில் நெடுந்தவம் புரிவாள் ஊமையின் மனதிலும் ஊற்றெழும் பாட்டுக்கு ஊர்த்துவ தாண்டவம் இடுவாள் தீமைகள் சூழ்கையில் தாவி எடுத்துதன் தாளெனும் தொட்டிலில் இடுவாள் எல்லாம் சலிக்கையில் ...

முதல்துளி அபிராமி (நவராத்திரி-2)

ஒருகுரல் கொடுத்தால் மறுகுரல் கொடுக்கும் உண்மை அபிராமி ஒருவரும் அறியாத் திசையிலும் உடன்வரும் அண்மை அபிராமி வரும்பகை எதையும் வற்றிடச் செய்யும் வன்மை அபிராமி நெருநலும் இன்றும் நாளையும் நிகழும் நன்மை அபிராமி காலனை உதைத்த கால்களும் சிவக்கும் நடனம் அபிராமி காலங்கள் உருட்டும் கைகளின் அழகிய நளினம் அபிராமி நீலமுணர்த்தும் தியானத்தின் நிறைவில் சலனம் அபிராமி தூலமும் துச்சம் என்கிற தெளிவின் தருணம் அபிராமி பட்டரின் நாவில் பதங்கள் மலர்த்தும்   புலமை அபிராமி தொட்டது துலங்க துணையென ...

அவளே அறிவாள் (நவராத்திரி 1)

அடர்ந்த வனந்தனில் ஒற்றைத் தடம்விழும் அழகாய்-வினை படர்ந்த மனந்தனில்    பைரவி  நீநடை      பழகாய் தொடர்ந்து வருந்துயர்க் கனலில் உருகிடும் மெழுகாய்-மனம் இடரில் கரைகையில் திடம்தனைத் தந்திட வருவாய் ஏற்றிய தீபத்தில் இளநகை செய்பவள் யாரோ-பலர் சாற்றிய மறைகளில் சாரமென்றிருப்பவள் யாரோ காற்றினில் வருகிற கீதத்தில் அவளது பேரோ-திரு நீற்றினில் தகிக்கிற நெருப்பினில் அவளெழு வாளோ காலத்தின் பேரிகை கைகளில் தாங்கினள் காளி-ஒரு மூலத்தின் மூலத்தில் மூண்டெழும் சுடரெங்கள் தேவி நீலத்தை கண்டத்தில் நிறுத்தினள் எங்களின் நீலி-இடும் ஓலத்தைக் கேட்டதும் உடன்வருவாள் திரி சூலி தாங்கிய கனவுகள் திடுமெனக் கலைகிற போது  -மனம் ஏங்கிய ஏக்கத்தில் எல்லாம் கனக்கிற போது நீங்கிய உறுதியை நிர்மலை மறுபடி தருவாள்-மடி தூங்கிடச் செய்து தூக்கத்தில் விழிப்பொன்று தருவாள் ஆயிரம் பந்தங்கள் அலைபோல் வந்திங்கு போகும்-அதில் காயங்கள் இன்பங்கள் காலத்தின் போக்கினில் ஏகும் மாயங்கள் யாவையும் ...

சொல்லவா… சொல்லவா… வெண்ணிலாவே!

இசையமைப்பாளர் யானிதேஷின் இசையில் “இன்னிசைக் காவலன்” என்ற திரைப்படத்துக்காக எழுதப்பட்ட பாடல் இது…… பல்லவி: சொல்லவா சொல்லவா வெண்ணிலாவே என்னவோ என்னவோ என்கனாவே கன்னிப்பெண் ஆசைகள் ஆயிரம் நெஞ்சுக்குள் என்னவோ ஊர்வலம் சின்னதாய் மோகங்கள் ஆரம்பம் மன்னவன் அல்லவோ காரணம் சரணம்-1 யாரோடும் சொல்ல இங்கு வார்த்தையில்லை சொல்லாத போதுநெஞ்சம் தாங்கவில்லை ஆனாலும் இந்தக்காதல் ரொம்பத் தொல்லை தள்ளாடும் பாவமிந்த ஜாதிமுல்லை ஏதேதோ ஆசைபொங்க இன்பமான நடகம் உல்லாச ஊஞ்சலாடும் வாலிபம் தீராத தாகம்தீர காமன்தானே காரணம் ...

மனிதம் வாழ்க!

காலத்தால் பண்படுதல் மனித நீதி கருணைதான் நீதிக்குள் குலவும் சோதி கோலங்கள் மாறுகையில் திட்டம் மாறும் கொள்கைகள் வளர்கையிலே சட்டம் மாறும் வேலெடுத்து நாட்டியதும் வீரம் அன்று வெண்கொடியைக் காட்டுவதும் விவேகம் இன்று நூலறிவும் நுண்ணறிவும் வளரும் போது நேற்றிருந்த சட்டங்கள் இன்றைக்கேது? தூக்கிலிடும் சட்டத்தை பலதேசங்கள் தூக்கியெறிந்தே இங்கு தூய்மை ஆச்சு ஆக்கமுடன் அகிம்சையினைத் தந்த நாட்டில் அடிப்படைகள் மாற்றிவைத்தால் என்ன பேச்சு? தூக்கமில்லா சிறைவாழ்க்கை நெடுநாள் தந்தார் தொலைந்துவிட்ட காலத்தைக் கணக்கில் பார்த்தால் ஆக்கிவைத்த தண்டனையும் முடிந்த தென்று ஆணையினைத் தருவதுதான் நியாயமாகும் மூவருக்கு மட்டுமல்ல நம்தேசத்தில் மூண்டபல குற்றங்கள் புரிந்துவிட்ட யாவருக்கும் சிறைவாசம் தரலாம் ஆனால் ...

ஆதி சிவனின் அரசாங்கம்

(நீயே சொல் குருநாதா –  கவிதை தொகுப்பிலிருந்து….) பெளர்ணமி நிலவின் பால்வழிந்து பாருங்கள் மலைமேல் அபிஷேகம் வெள்ளித் தகடொன்று வேய்ந்ததுபோல் வெள்ளியங்கிரியின் திருக்கோலம் அடடா அழகிய இரவினிலே ஆதி சிவனின் அரசாங்கம் வேண்டும் வரங்கள் வழங்கிடவே தியான லிங்கத்தின் திருக்கோலம் தங்கம் இழைத்த கலசத்திலே தகதகக்கிறது மேற்கூரை லிங்கம் தோன்றிய பரவசத்தில் சலசலக்கிறது நீரோடை மெளனம் பேசும் வனங்களெல்லாம் மூழ்கியிருக்குது தியானத்தில் கவிதை பாடும் பறவைகளும் கூட்டில் அடங்குது மோனத்தில் பாறையில் கசிகிற நீர்த்துளிகள் பக்தியில் இளகிடும் ...
More...More...More...More...