Blog

/Blog

கர்ணன்-2

பாண்டவர் கௌரவர் எல்லோருக்கும் போதனை வழங்கும் ராஜகுரு ஆண்டிடும் அரசர் தொழுதிடும் துரோணர் வில்வித்தை தனிலே வீரகுரு பாண்டவ இளவல் பார்த்திபன் அர்ச்சுனன பயின்ற வில்வித்தை அரங்கேற்றம் நீண்டது வரிசை நிறைந்தனர் அரசர் எங்கும் வீரர்கள் நடமாட்டம் வித்தை காட்டினான் விஜயன் அங்கே வந்தவர் எல்லாம் வியந்தனராம் இத்தகு வீரனை எதிர்ப்பவர் உண்டோ எனும்குரல் கேட்டு பயந்தனராம் மொத்த சபையும் மவுனம் காக்க முழங்கி எழுந்தான் கர்ணனுமே பித்தா நீஎன்ன அரசனா என்றதும் தலைகவிழ்ந்தானே வீரனுமே சிங்கம் ...

கர்ணன்-1

நாட்டியப்பள்ளி ஒன்றில் கர்ணன் குறித்த நாட்டிய நாடகம் கேட்டார்கள்.  கூடுமானவரை ஒரே சந்தத்தில் இருந்தால் நல்லதென்று சொன்னார்கள். ஆறு அத்தியாயங்களாய் எழுதிக் கொடுத்தேன். வலைபூவில் சுலபத் தவணை முறையில் இடுவதாகத்திட்டம்..                              விநாயகர் வணக்கம் ஆனைமுகன்! எங்கள் ஆனைமுகன்!-எங்கும் ஆனந்தம் நிலவிட அருள்வானே ஞானமுனி அந்த வியாசன் சொல்ல பாரதம் மலைமேல் புனைந்தானே தானெனும் எண்ணம் துளியும் இலாமல் தந்தம் ...

அவள்தான்

 பாடிடச் சொன்னவள் அவள்தான் -இந்தப் பாதையைத் தந்தவள் அவள்தான் தேடிய வெளிச்சமும் அவள்தான்-உள்ளே தெரிகிற ஜோதியும் அவள்தான் வீணையை மீட்டிடும் விரலாய்-என் விதியினை ஓட்டிடும் குரலாய் காணென்று காட்டிடும் அருளாய்-என் கண்முன்னே வருபவள் அவள்தான் அண்டத்தைப் பிண்டத்தில் அமைத்தாள்-அதில் ஆயிரம் அதிசயம் சமைத்தாள் கண்டத்தில் நீலத்தைத் தடுத்தாள்-எனைக் கண்டதும் களுக்கென்று சிரித்தாள் பாய்கிற கடலலை அவளே-வரும் பாய்மரக் கப்பலும் அவளே தாயவள் எங்கணும் ஜொலிப்பாள்-அவள் திருக்கடையூரினில் இருப்பாள் தாடங்கம் தானந்த இந்து-பிற கோள்களும் அவளின்கைப் பந்து நாடகம் நடத்திட நினைத்தாள்-அவள் ...

பனைமரங்களின் கனவு

காற்றிலாடும் பனைமரங்கள் கனவுகண்டன கற்பகமாய் மலர்வதுபோல் நினைவுகொண்டன நோற்பதுபோல் ஒற்றைக்காலில் நின்றிருந்தன நனவாகும் நமதுகனா என்றிருந்தன சாமமாகும் போதுகூட விழித்திருந்தன சாவிலாத வாழ்வுகாணத் துடித்திருந்தன தாமதமேன் என்றுசொல்லித் தவித்திருந்தன தூயமகன் வரவையெண்ணி சிலிர்த்திருந்தன உதயவேளை தன்னிலங்கே ஒருவன் தோன்றினான் ஓலைகளைப் பறித்தெடுத்துக் கொண்டுபோயினான் பதப்படுத்தி ஆணிதொட்டு வரையலாயினான் புண்ணியப்பூங் கவிதைகளைப் புனையலாயினான் தேனலைகள் புரண்டெழுந்து திசைநனைத்தன தெய்வங்களும் இறங்கிவந்து தமிழ்படித்தன கானம்பாடும் பறவைகளும் குரல்கொடுத்தன கம்பநாடன் என்றுசொல்லி சிறகசைத்தன ஓலைகளில் அமுதவாரி ஊற்றெழுந்தது உலகமெங்கும் கவிதையின்பக் காற்றெழுந்தது காலம்நின்று பார்த்துவிட்டுக் கால்நடந்தது தேரெழுந்தூர்த் தச்சன்செய்த தேரசைந்தது பனைமரங்கள் அவனிடத்தில் பக்தி கொண்டன பாட்டரசன் தொட்டவையோ முக்தி கொண்டன கனவு நனவானதெனக் கண்டு கொண்டன கவியமுதை ஓலைகளில் மொண்டுதந்தன கம்பநாடன் விழிமலர்கள் கருணைநல்கின கவிதைகள்தான் பனையின்நுங்கில் சுவையும்நல்கின அன்றுமுதல் பனைமரங்கள் உயரமாயின விண்ணிலுள்ள கம்பனுக்கு விசிறியாயின ...

குடும்பப் பாட்டாய் மாறிய காதல் பாட்டு

உலகின் அன்னை என்ற தலைப்பில் அன்னை தெரசா பற்றிய என் பாடல்களடங்கிய முதல் இசை ஆல்பம் வெளிவந்து பரவலான வரவேற்பைப் பெற்றிருந்த நேரமது. சுஜாதா,ஸ்வர்ணலதா, ஹரிணி போன்றவர்கள் உருக்கமாகப் பாடியிருந்தார்கள். என்னை ஊக்குவிப்பதற்காக கவிஞர் வைரமுத்து ஒரு முன்னுரையும் பேசித்தந்திருந்தார்.அதன்பிறகு தொடர்ச்சியாக பக்தி கேசட்டுகளுக்கு எழுதிக் கொண்டிருந்த போது, முழுவதும் காதல் பாடல்களைக் கொண்ட ஆல்பம் ஒன்று தயாரிப்பதென்று முடிவானது. “காதல் வரும் காலம்”என்பது அந்தப் பிறக்காத குழந்தைக்கு சூட்டப்பட்ட பெயர். “உயிரெல்லாம் உருகிட உருகிடப் புதுசுகம் ...

டைட்டில் சாங்

ரொம்ப வருஷங்களுக்கு முன்னர்,ஒரு தொலைக்காட்சித் தொடருக்கு பாடல் எழுத அழைத்தார்கள்.”முக்கியமான பாட்டுங்க…இந்தியத் தொலைக்காட்சியில் முதல்முறையாக ஜேசுதாஸ் ஒரு சீரியலுக்கு பாடப் போறாரு.நீங்கதான் பாட்டு எழுதப் போறீங்க.டூயட் சாங்”என்றார்கள்.. சீரியல் பேரு என்னங்க? அது இன்னும் வைக்கலீங்க..ஆங் சொல்ல மறந்துட்டேன்.அதுக்கு ஒரு டைட்டில் சாங்கும் வேணும் அப்ப டைட்டில் தெரியணுமில்லீங்களா! அது சொல்றோம் சார்! முதல்ல டூயட் எழுதுங்க!இது காமெடி சீரியல் . அதனாலே டூயட் சாங் கொஞ்சம் காமெடியா இருக்கணும். கே.எம்.ராஜு மியூசிக்.அட்ரஸ் சொல்றோம்..வந்துடுங்க.. லுங்கியும் பனியனுமாக ...
More...More...More...More...