Blog

/Blog

அம்பிகை வந்ததென்ன

 வானங் கறுத்தது வானங் கறுத்தது வஞ்சி முகம் போலே-இடி கானமிசைத்தது கானமிசைத்தது காளிகுரல் போலே தேனுமினித்தது தேனுமினித்தது தேவியவள்போலே  -இனி நானுந் தொலைந்திட நீயுந் தொலைந்திடு நங்கையருளாலே தேகத்தின் இச்சைகள் தூண்டி விடுவது தாயவள் மாயையன்றோ-உள்ளே நாகத்தின் வேகத்தில் ஓடிடும் சக்தியும் நாயகி சாயையன்றோ தோகையின் வண்ணத்தில் தோன்றிடும்பேரெழில் மாதங்கி ரூபமன்றோ-இடப் பாகத்தைத் தந்தவன் தேகத்தை ஆள்வதும் பைரவி லீலையன்றோ மூர்க்கம் வளர்த்திடும் மோதல் பலகண்டு மூக்கறு பட்டதென்ன-அவள் தீர்க்க விழிநெஞ்சில் தோன்றிய பின்னரென் வாக்கெடு பட்டதென்ன ஆக்கும் எதனையும் காக்கும் துணையென அம்பிகை வந்ததென்ன போக்கு வரவுகள் ஆக்கவும் சேர்க்கவும் பேரருள் செய்வதென்ன ஆலத்தை உண்டவன் நீலத் திருக்கண்டம் அம்பிகை கைவண்ணமோ-முழு மூலத்தை ஆக்கிடும்  சீலத்தை ...

யாரிவளோ

மாத்திரைப் போதவள் முகந்தெரியும்-ஒரு மின்னற் பொழுதினில் மறைந்துவிடும் ஊர்த்துவம் ஆடிடும் சலங்கையொலி-மிக உற்றுக் கவனிக்கக் காதில்விழும் தீர்த்தக் கரைகள் எங்கணுமே -எங்கள் தேவியின் காலடி பதிந்திருக்கும் வார்த்தைகள் தேடிடும் வேளையிலே-அவள் வண்ணப்பொன் அதரங்கள் முணுமுணுக்கும் சந்நிதி சேர்கிற வேளையினில்-நெஞ்சின் சஞ்சலம் கண்களில் பொங்குகையில் என்கதி என்னென்று ஏங்குகையில்-அவள் இன்பக் குறுநகை கண்ணில் படும் சின்னக் குழந்தையின் சொல்வழியே-அவள் சொல்ல நினைத்தது சொல்லப்படும் என்னை அழுத்திடும் பாரமெல்லாம்-அவள் எண்ணும் பொழுதினில் வெல்லப்படும் தூண்டில் முனையினில் மண்புழுவாய்-பின் தூண்டிலில் சிக்கிய செங்கயலாய் நீண்டிடும் எந்தன் தவிதவிப்பை-வந்து நிர்மலை மாற்றிடும் நேரமிது தீண்டும் நெருப்பினில் சுட்டெடுத்துப்-பசுந் தங்கமென் றாக்கிட எண்ணம்கொண்டாள் தாண்டவ நாயகன் பக்கம்நின்றும்-நம்மை தாய்மை ...

உலவிட வருவாள் தேவி

காரிருள் நிறத்துக் காரிகை ஒருத்தி காலடி சலங்கை கேட்கும்-அவள் மூரி நிமிர்ந்து முதலடி வைத்ததும் மூளும் வினைத்தொடர் தீரும் கூரிய முனையினில் குருதியின் சிவப்பினில் குங்கும சூலம் ஒளிரும் மாரி அவள்வரும் வேளையில் தீநிறம் மேலைத் திசையினில் மலரும்  ஒன்பது இரவுகள் ஒவ்வொரு வீட்டிலும்  உலவிட வருவாள் தேவி அன்பினில் குழைபவர் அகந்தனில் ஒளியாய் அவள்நிலை பெறுவாள் மேவி முன்புசெய் தவத்தின் முழுவரமாக முற்றத்தில் கொலுவில் அமர்வாள் இன்பமும் கல்வியும் செல்வமும் எல்லாம் எண்ணிய விதமே தருவாள் கடம்ப வனத்தினுள் கொஞ்சிடும் இசையாய் கானங்கள் ஆள்பவள் அவளே உடம்பெனும் வனத்தினுள் உயிர்தடுமாற உதவிக்கு வருவதும் அவளே ...

எட்டிப் பார்த்தால்…

 காலம் தனக்கென வைத்திருக்கின்றது கால காலமாய் உண்டியல் ஒன்று; முதன்முதல் வானம் உதிர்த்த விண்மீன், முதல்முகில் பொழிந்த மழையின் முதல்துளி வளைத்த தனுசு முறிந்த பொழுது தெறித்து விழுந்த தங்க மணிகள். கொடைக்கரம் இழுத்த மேகலையிருந்து நகைத்துச் சிதறிய நன்முத்துக்கள்; கந்தையில் மீந்த அவலொரு கைப்பிடி; உடைத்த சிலம்பின் உள்ளே இருந்து குதித்த மாணிக்கப் பரல்களில் கொஞ்சம், அன்னப்பறவையின் ஆதி இறகு; போதி உதிர்த்த இலைகளில் ஒன்று; சிலுவை செதுக்கிய மரத்தின் மிச்சம்; சிண்ட்ரெல்லாவின் சின்னச் செருப்புகள்; ஏதென்ஸ் நகரில் உருண்ட குவளை; குருதி தோய்ந்த குறுவாள்,கேடயம், துடிப்படங்கிய துப்பாக்கி ரவைகள் ...

உன்ஞாபகங்கள்..

நீர்க்குடத் தளும்பலின் நிமிஷத் தெறிப்பாய் வேர்த்தடம் தெரியும் வேம்பின் நிழலாய் பூத்துச் சிரிக்கப் போகிற அரும்பாய் சேர்த்து வைத்த மயிலிறகுகளாய் உள்ளே சிலிர்க்கிற சிலுசிலுப்புக்குள் ஊடே வருபவை உன்ஞாபகங்கள்.. பிரியாப் பிரிவின் பார இலகுவை சரியாய் உணரக் கிடைத்த சந்தோஷம் சின்ன வலியின் மின்னல்கள் அனுப்பி என்னுள் மழையைத் தொடங்கி வைக்கையில் வாசனைச் சரங்களை விசிறும் பூமி கால்பதியாது குதியிடும் காற்று சூட்டை அணைத்து கண் சிமிட்டும் சூரியன் சாட்டைக் கிரணங்கள் சொடுக்கும் நிலவு மூச்சின் வெம்மையில் குளிர்காய்வதற்கு எத்தனிக்கும் எரிமலைக் குழம்பு வெளிச்சத்திரையை விலக்கிக் கொண்டு வெளியே வருகிற நட்சத்திரங்கள் அகலாப் பார்வையை அழுந்தப் பதிக்கையில், ...

உன்கருணை- என் நிலைமை

பத்திரம்  மிக்கது பத்திரம் அற்றது உன் கருணை   நித்தியம் மிக்கது நிச்சயம் அற்றது என்நிலைமை   பூவென மலர்வது பூகம்பம் அதிர்வது உன் கருணை   சுடரென ஒளிர்வது சருகென அலைவது என் நிலைமை   வாவென அணைப்பது வாள்கொண்டு துளைப்பது உன்கருணை   தேவையில் நலிவது தேடலில் பொலிவது என்நிலைமை     கேள்வியில் கிடைப்பது கேள்விகள் அழிப்பது உன்கருணை   தோல்வியில் ஜெயிப்பது தோற்பதில் சிலிர்ப்பது என்நிலைமை   ஒன்றும் சொல்லாதது ஒன்றும் தள்ளாதது உன் கருணை   ஒன்றி நில்லாதது எங்கும் ...
More...More...More...More...