Blog

/Blog

எத்தனை முத்தங்கள்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவினை வருடி ஒளிமுத்தம் பெறுவேன் முகிலினை வருடி மழைமுத்தம் பெறுவேன் தளிர்களை வருடிப் பனிமுத்தம் பெறுவேன் மலர்களை வருடி மதுமுத்தம் பெறுவேன் சலங்கைகள் வருடி ஜதிமுத்தம் பெறுவேன் ஸ்வரங்களை வருடி இசைமுத்தம் பெறுவேன் கனவுகள் வருடிக் கவிமுத்தம் பெறுவேன் உளிகளை வருடிச் சிலைமுத்தம் பெறுவேன் அருவிகள் வருடிக் குளிர் முத்தம் பெறுவேன் நதிகளை வருடி அலை முத்தம் பெறுவேன் பறவைகள் வருடிப் புது முத்தம் பெறுவேன் மழலைகள் வருடி மலர் முத்தம் ...

கவிதை மனம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நிலவில் தெறிக்கும் கிரணங்களை – அது நதியில் எழுப்பும் சலனங்களை மலரில் துளிர்க்கும் அமுதங்களை – அதன் மகரந்தத்துக் கடிதங்களை சிறகு சிலிர்க்கிற பறவைகளை – அதன் சின்னக் கண்களின் கனவுகளை கதவு வைக்காத மனதுக்குள்ளே – தினம் கொட்டிக் குவிப்பது கவிதைமனம் வெள்ளிப் பனித்துளி மகுடமுடன் – புல் வெய்யில் வரும் வரை அரசமைக்கும் மெல்லிய தென்றல் இதைப் பார்த்து மலர்களின் செவிகளில் முணுமுணுக்கும் துல்லிய குரலில் குயில்களெல்லாம் – ஒரு ...

நிலாப் பெண்ணே

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… (உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில், நேயர்கள் முதலடி எடுத்துக் கொடுக்க கவிஞர்கள் கவிதை பாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்படி எழுதிய கவிதை இது. அடியெடுத்துக் கொடுத்த அன்பர் திரு.சரவணக்குமார். காந்தி வீதி, அம்பேத்கார் நகர், வேலாண்டிபாளையம், கோவை). நிலாப் பெண்ணே உன் பயணத்தில் நிறுத்தமென்பதில்லையா? நீலவானம் முழுவதும், நீ நடை பழகும் எல்லையா? உலாப் போகும் பேரழகி ஓய்வு தேவையில்லையா? ஓடி ஓடித் தேய்பிறையாய் இளைப்பவள் நீ இல்லையா? இரவு நேரம் தனிமையிலே ...

மரம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… நீண்டு கிடக்கும்உன் பாதையிலே நிற்கிற மரமாய் நானிருப்பேன்! வேர்களில் ஊறிய ஈரத்துடன் & குளிர் விசிறிகள் விசிறக் காத்திருப்பேன்! காலங்காலமாய் நிற்கின்றேன் & உன் காலடி ஓசை எதிர்பார்த்து! கோடைப் பொழுதிலும் இலைகளெல்லாம் உதிரவிடாமல் வழிபார்த்து! அடடா… அடடா… வருகின்றாய் அமுதம் எனக்குள் சுரக்கிறதே! “இதுதான் உன் இடம் வா”வென்றே கிளைகள் காற்றில் குதிக்கிறதே! மண்ணைப் பஞ்சணை ஆக்கிவிட்டேன் மெல்லிய சருகுகள் நீக்கிவிட்டேன் வண்ணப் பறவைகள் கூடுகட்டி & உன் விழிமயங்கும் ...

உன் ஞாபகம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… மழைசிந்தும் இளங்காலை நேரம் – என் மனதோடு இதமான ஈரம் இழையாக ஒருபாடல் தோன்றும் – அதில் இசையாகும் உன் ஞாபகம்! அலைவீசி வரும் காதல் வெள்ளம் – இது அணையேதும் இல்லாத உள்ளம் விலைபேச முடியாத இன்பம் – ஒரு விதமான சுகம் வாலிபம்! இதழ்பூத்த சிறுபூவின் மௌனம் – அதில் எழுகின்ற மணம்தானே வேதம் எதை இன்னும் அதுபேச வேண்டும் – இங்கு அதுபோல நம் நாடகம்! விடைதேடும் ...

பனி விலகும் நேரம்

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து… வெளியெங்கும் உலர்த்திய பனிப்புடவைகளை மெதுவாய் மெதுவாய் மடிக்கிறாள் மார்கழி; மாற்றலாகிப் போகிற பெண்ணின் விடுதி அறைபோல் வெறுமையில் வானம்; மூர்க்கமான பனியின் அணைப்பை பலவந்தமாகப் பிடுங்குது காலம்; முதுகுத் தண்டை உலுக்கும் குளிரின் சிலிர்ப்புக்கினிமேல் நெடுநாள் ஆகும்; வாசலில் மினுங்கும் வெள்ளைக் கோலம் பறங்கிப்பூ இழந்து வைதவ்யம் பூணும். காது மப்ளரைத் தாண்டும் குளிரின் கிளுகிளுப்பினிமேல் கிழங்களுக்கில்லை; தை பிறக்கும் போது வழியும் பிறக்கும் மார்கழி இழக்கும் வலியும் இருக்கும். முப்பது ...
More...More...More...More...